Tuesday, August 4, 2009

அதிகாரம்: 6. வாழ்க்கைத் துணை நலம் - முடிவுரை



அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

முடிவுரை

Chapter : 6

Wife, Life's Partner

Summary

அத்தியாயத்தில் பெற்றவை

குறள் எண்

Kural No.

குறள் குறிப்புரை (Kural Message)

51 கணவனின் வருமானத்திற்குள், மாண்புடன் இல்லறத்தை நடத்தத் தெரிந்தவளே, அவனிற்குப் பொருத்தமான துணையாவாள்.
52 ஒழுக்கமற்ற மனையாள் உள்ளவனிற்கு இல்லற வாழ்வில் பெருமை என்பதே கிடையது.
53 இல்லத்தவளின் மாண்பே வாழ்வில் மிக முக்கியமானது. இல்லாவிடில் எதுவுமே தேறாது.
54 இல் வாழ்வில் இல்லத்தாள் கற்போடு இருத்தல் பெண்மைக்கே பெருமை அன்றில் அஃது அனைவருக்கும் சிறுமை, கேடு.
55 கொண்ட கணவனையே தெய்வம் என்று தொழுது ஒழுகும் இல்லத்தரசியின் சொல் பலிக்கும்.
56 தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும், குடும்ப நற்பெயரையும் காப்பதுடன் சோர்வற்று இனிமையுடன் இல்லறத்தை நடத்தவேண்டியது இல்லாளின் கடமையாகும்.
57 மகளிர் தம்மைக் தாமே காத்துக் கொள்ள மனத் திடத்துடன் நிறைந்திருப்பதே கற்பிற்குச் சிறந்த காவல், சிறையில் அடைத்துக் கொள்ளும் காப்பு பயனற்றது.
58 பெண் தாய்மைப் பேற்றிற்காகக் கருவுற்றாலேயே, தனக்குள் உயிர்கள் தரிக்கும் உலகம் பெற்று, இல்லறத்தில் பெருஞ் சிறப்புப் பெற்றுத் திகழுவர்.
59 புகழைப் புரிந்து திகழ்கின்ற இல்லமே, இல்லாளே இல்லறத்தில் பெருமிதம் தரத் தக்கது.
60 இனிது நடத்தும் இல்லறமே சுபம். அதை மேலும் நல் வழிச் செலுத்தத் தேவை மக்கட் பேறு.

குறிப்புரை (Message)

இல்லறத்தில் ஈடுபட்டு, கணவனின் பொருள் வளத்திற்குள் மாண்புடன் இல்லறம் நடத்தி, ஒழுக்கத்துடனும், குலத்தின் பெருமை நிலைநாட்டி, நற் பண்புகளுடனும் கற்புடனும் திகழ்ந்து, கொண்டவனையே தெய்வம் எனத் தொழுது போற்றிப் பேணி, தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும், குடும்ப நற்பெயரையும் காப்பாற்றி, சோர்விலாது கடமை ஆற்றி, இனிமையுடன் இல்லறம் நடத்தி, கற்பெனும் மனத் திடத்துடன் தன்னைக் காத்துக் கொண்டு, சிறைக்கைதி ஆகாதே இயல்புடன் அனைவருடனும் பழகி, இனிய இல்லறம் பேணி அதன் பயனாய் கருவுற்று, குடும்பம் தழைக்க வழிகோலி, பெருஞ் சிறப்புற்று, புதிய உயிர் கொள்ளும் உலகம் சமைத்து, இல்லத்திற்குப் புகழ் புரிந்து, கணவனிற்குப் பெருமிதம் கிட்டும்படி செய்து, இனிது நடத்தும் இல்லறத்தால் இல் வாழ்வைச் சுபம் நிறைந்த வாழ்வாக்கி, நல்வழிச் செலுத்தும் மக்கட் பேறைப் பெறுதலே நல் வாழ்க்கைத் துணையாகும்.

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...