Saturday, January 30, 2010

திருக்குறள்:200 (சொல்லாதீர் பயன் இல்லாதவற்றை...)

அதிகாரம்

: 20

பயனில சொல்லாமை

திருக்குறள் : 200

சொல்லாதீர் பயன் இல்லாதவற்றை...

In English

சொல்லுக, சொல்லின் பயன் உடைய! சொல்லற்க
சொல்லில் பயன் இலாச் சொல்!

பொழிப்புரை :
சொல்லுக சொற்களில் பயன் உடையவற்றை. சொல்லாதீர் சொற்களில் பயன் இல்லாதவற்றை.

விரிவுரை :
சொற்களில் பயன் உள்ளவற்றை மாத்திரம் சொல்லுக; பயன் இல்லாதவற்றைச் சொல்லாதீர்.

சொன்னால் அர்த்தமுள்ளவற்றை, பொருள் கொண்டவற்றை, பயன் தருவனவற்றை மாத்திரம் சொல்லுங்கள். மற்றவற்றைத் தவிர்த்து விடுங்கள் என்கின்றார்.

சொற்களில் பயன் உள்ளவற்றை மாத்திரம் சொல்லுக என்றாலேயே பயன் இல்லாதவற்றைச் சொல்லாதீர் எனவும் அஃது பொருள் தரும் தானே. பிறகு அதையும் ஏன் வள்ளுவர் மீண்டும் சொல்ல வேண்டும்?
அஃது பயனில சொல்லாமையைச் சாதாரணமாக வலியுறுத்துவதற்காக மட்டும் அன்று. சொல்லத் தேவை ஏற்பட்டுச் சொன்னால் பயன் உள்ளவற்றை மாத்திரம் சொல்லுக. பயன் இல்லாதவற்றை எப்போதும் சொல்லாதீர் என்பது உண்மையான பொருள்.

நடை முறை வாழ்வில் எப்போதும் மவுனம் காப்பது இயல்பானது அன்று. எனவே பேச வேண்டிய தருணங்களில் பேசுவோம். ஆனல் பயன் உடையனவற்றை மாத்திரம் எண்ணுவோம்; மொழியின் எழுத்தால் ஒலியால் பேசுவோமாக.

குறிப்புரை :
பயன் உடையவற்றைச் சொல்லுக. பயன் அற்றவற்றைச் சொல்லாதீர்.

அருஞ்சொற் பொருள் :
சொல் - கூறு, மொழி, வாயோசையால் வெளிப்படுத்து, தெரிவி, குறிப்பிடு, விவரி, பரிந்துரை, கேள், விளக்கு, பதிலிறு, திருப்பிக்கூறு, ஏவு, கற்றுக் கொடு, வார்த்தை, ஒலித் தொகுதி, பேச்சு, கூற்று, வாக்கு, பழமொழி, புகழ்ச்சி, பாராட்டு, மந்திரம், அறிவுரை, கட்டளை

ஒப்புரை :

திருமந்திரம்: 1152
மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி
பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி
புல்லிசைப் பாவை யைப் போகத் துரந்திட்டு
வல்லிசைப் பாவை மனம்புகுந் தானே.

திருமந்திரம்: 1204
எய்திட லாகும் இருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
கைதவம் இன்றி கருத்துறும் வாறே.

திருமந்திரம்: 1251
பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணி
நற்றாள் இறைவனே நற்பயனே என்பர்
கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப்
பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.

திருவாசகம். மாணிக்கவாசகர்.
6. நீத்தல் விண்ணப்பம்
(திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை)

செழிகின்ற தீப்புகு விட்டிலின் சில் மொழியாரில் பல்நாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால்
உழுகின்ற பூமுடி உத்தரகோசமங்கைக்கு அரசே
வழிநின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே. 109

அடர்புலனால் நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல் நல்லாரவர்தம்
விடர்விட லேனை விடுதிகண்டாய் விரிந் தேயெரியுஞ்
சுடரனை யாய் சுடு காட்டரசே தொழும் பர்க்கமுதே
தொடர்வரி யாம் தமியேன் தனி நீக்குந் தனித்துணையே. 142

ஔவையார். ஆத்திசூடி:
89. மிகைபடச் சொல்லேல்.

பட்டினத்தார். பொது: 33
உரைக்கைக்கு நல்ல திருவெழுத்து ஐந்துண்டு உரைப்படியே,
செருக்கித் தரிக்க திருநீறு முண்டு; தெருக்குப்பையில்
தரிக்கக் கரித்துணி ஆடையும் உண்டு எந்தச் சாதியிலும்
இரக்கத் துணிந்து கொண்டேன்; குறை ஏதும் எனக்கில்லையே!

***

In English:

Chapter : 20

No Vain Utterance

Thirukkural : 200

Never speak the useless...




In Tamil

solluka, sollin payan udaiya! sollaRka
sollil payan ilAch chol!

Meaning :
Speak only the useful words; never speak the useless words.

Explanation :

Speak only the useful words when necessary. Speak not the useless forever.

When speaking, speak only the meaningful, sensible and useful words. Avoid the rest says Valluvar.

When it is said that speak only the useful words in the first half of the Kural it also automatically means that do not speak the useless without telling. Is it not? Then why Valluvar should explicitly repeat it in the next half of the Kural? It is not just or the usual way to insist the point of not talking useless but only to make it more unambiguous. Only when necessary speak on but only the useful ones. And never speak the useless, is the explicit meaning here.

It is very difficult to maintain the silence at all juncture of practical life. Therefore let us speak only at the situation where it is necessary and inevitable to talk. But let us think only the useful and speak it through letters and sound of the languages.


Message :
Speak useful and never the useless words.

***

திருக்குறள்:199 (விழித்திருப்போர் பொருளற்றதைப் பேசமாட்டார்...)

அதிகாரம்

: 20

பயனில சொல்லாமை

திருக்குறள் : 199

விழித்திருப்போர் பொருளற்றதைப் பேசமாட்டார்...

In English

பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - மருள் தீர்ந்த
மாசு அறு காட்சியவர்.

பொழிப்புரை :
பொருள் அற்ற சொற்களை மறந்தும் சொல்லார் - மயக்கம் தீர்ந்து மாசறத் தெளிந்தவர்.

விரிவுரை :
மயக்கம் தீர்ந்து மாசற்று அறிவுநிலை தெளிந்தவர்கள் பொருள் அற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.

குழப்பமற்று, குற்றமிலாத தூய சிந்தனைத் தெளிவு பெற்றவர்கள் சுய நினைவோடு விழிப்பு நிலையில் இருப்பார்கள். அவர்களால் மறந்தும் அர்த்தமற்ற சொல்லைச் சொல்ல முடியாது என்பதே உண்மை. விழித்திருக்கும் போது விழிப்பு நிலையிலும், ஆழ் நிலைத் தூக்கத்திலும் உணர்வுநிலை தூங்காது சுய நினைவோடு விளங்குவோருக்கு பயனற்றவற்றைத் தவிர்ப்பது என்பது ஆச்சரியம் அற்றது. அவர்களுக்கு அது இயற்கையாகவே அமையும்.

ஆதலின் இக்குறளின் உட்கருத்து சந்தேகம், மயக்கம், குழப்பம், குற்றம் அற்ற சிந்தனைச் செம்மல்களாக, விழிப்பு நிலையில் சுய நினைவோடு திகழ விரும்புவோர் மறந்தும் பொருள் அற்ற பிதற்றல்களை, அபத்தங்களைப் பேசுதல் கூடாது என்பதே.

அதற்கு பொருளற்றவற்றை மறந்தும் பேசுதல் கூடாது என்று மனிதர்களின் ஆழ்மனத்தில் பதித்துவிட்டால், இனி எல்லாச் சமயங்களிலும் தன்னியல்பாகவே அர்த்தமற்றதைப் பேச மாட்டார்கள் என்பது உளவியல் அறிஞர்கள் அறிவார்கள். அதைத்தான் இங்கே வள்ளுவர் வலியுறுத்திச் செய்கின்றார். அதாவது அவ்வாறு ஆழ்மனதில் பதிக்கப் பெற்றவர்கள் ஆழ்நிலைத் தியான மயக்கம் தீர்ந்து, மாசற்ற அறிவு நிலையில், தூய சிந்தனை பெற்றுத் தெளிந்தவர்கள் பொருள் அற்ற சொற்களை இனி மறந்தும் எப்போதும் சொல்லார். அவர்கள் அர்த்தமற்றவற்றைப் பேசக் கூடாது எனும் சுய நினைவோடு எப்போதும் விழிப்போடு திகழ்வார்கள்.

வள்ளுவர் மிகப்பெரிய உளவியல் அறிஞர் என்பதை விளக்கும் குறள்களில் இதுவும் ஒன்று.

ஞாபகத்தில் வையுங்கள் ‘பொருள் இல்லார்க்கு இவ் வையம் இல்லை’; அதாவது அர்த்தம் அற்றோருக்கு இந்த உலகம் இல்லை.

குறிப்புரை :
மயக்கம், கலக்கம், மாசு அற்றுச் சிந்தனை தெளிந்தவர்கள் பொருள் அற்ற சொல்லை மறந்தும் சொல்ல மாட்டார்கள்.

அருஞ்சொற் பொருள் :
பொச்சா - மற, இகழ்
மருள் - மயங்கு, மனம் கலங்கு, தடுமாறு, மிரளு, வெருவு, வியப்படை, ஒப்பாகு, ஆவேசம், வெறி,
மாசு - தூசி, அழுக்கு, அசுத்தம், தூய்மைக்கேடு, களங்கம், இருள், தீமை, குற்றம்

ஒப்புரை :

திருமந்திரம்: 694
காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது அக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்நூற் றொருபத்து மூன்றையங்
காலது .(1). வேண்டிக் கொண்டஇவ் வாறே

திருமந்திரம்: 698
ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே

திருமந்திரம்: 699
முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் ஐம்பத் தொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே

திருவாசகம். மாணிக்கவாசகர்.
6. நீத்தல் விண்ணப்பம்
(திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை)

கொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின்
உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே. 106

ஔவையார். ஆத்திசூடி:
83. பேதைமை யகற்று.

பட்டினத்தார். பொது: 22
என் செய லாவது யாதொன்றும் இல்லை; இனித் தெய்வமே!
உன் செய லேயென்று உணரப்பெற்றேன்; இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே.

***

In English:

Chapter : 20

No Vain Utterance

Thirukkural : 199

Conscious man will not utter non sense...




In Tamil

poruL thIrntha poccAnthum sollAr - maruL thIrntha
mAsu aRu kAtchiyavar.

Meaning :
Those who are conscious and have clear vision will never utter meaningless words even by mistake.

Explanation :

Those who have clear vision with free from bewilderment and defects will not utter meaningless words even by mistake of forgetting.

People of clear mind and vision with no perplexity and faults stay more conscious. They cannot utter meaningless words even by mistake indeed. There is no wonder for the people who are always conscious either in awaken state or in deep sleep to avoid the useless. It is natural for them.

However, the implied meaning here in this Kural is that those who wish to be conscious with clear mental vision and free from doubts, bewilderment, perplexity and defects should not speak the meaningless words.

For that the psychologists say that if the statement 'Never speak meaningless words' is implanted in the sub-conscious mind for the people naturally they will not speak it. That is what exactly Valluvar is doing and emphasizing it here. Once again read the explanation for this Kural which makes it more empirical now. Those who have implanted in their subconscious mind when they are awaken from their deep sleep with consciousness and clear mental vision with no bewilderment or perplexity what so ever will never speak the meaningless even by mistake. They will stay always conscious not to speak the meaningless forever.

This Kural is one amongst many that proves Valluvar as great psychologist again.

Remember another Kural 'Porul Illaarku iv vaiyam illai' which also means that 'this world is not for those meaningless'.


Message :
Those who have clear mental vision free from bewilderment, perplexity and defects will never utter meaningless words even by mistake.

***

Thursday, January 28, 2010

திருக்குறள்:198 (அறிவினோர் பகரார் பயனிலாச் சொல்...)

அதிகாரம்

: 20

பயனில சொல்லாமை

திருக்குறள் : 198

அறிவினோர் பகரார் பயனிலாச் சொல்...

In English

அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும் பயன் இல்லாத சொல்.

பொழிப்புரை :
அரும் பயனை ஆராயும் அறிவுடையோர், ஆராய்ச்சியாளர், சொல்லார் பெரும் பயன் இல்லாத சொல்.

விரிவுரை :
அரும் பயன்களை ஆராய்ந்து தெளிந்து தெரிவிக்கும் அறிவிடையோர் பெரும் பயன் இல்லாத சொல்லைச் சொல்லார்.

அரிய வழிகளை, சூத்திரங்களை, பொருட்களை, மருந்துகளை, பயன்களை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், அறிவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், சித்தர்கள், மேதைகள், எழுத்தாளர்கள் பெரும் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்காள். வீண் விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள்.

ஆனால் இங்கே பெரும் பயனற்ற சொற்களை என்று சொல்வதன் மூலம் அத்தகைய மேதைகள் சில சமயங்களில் சிறு பயனற்ற சொற்களைப் பேசலாம் என்பது போல் தோன்றும். இதற்குக் காரணம் அவர்கள் மேதாவிகள். அவர்களின் அதீத சிந்தனை ஓட்டத்தில் வெளிவரும் சில சொற்கள் சாதாரண மானுடர்களுக்கு விளங்காமல் பயனற்றவை போலும் தோன்றலாம். ஆனால் உண்மையில் அவர்கள் பேசும் பேச்சிற்கு அர்த்தம் உண்டு. ஏனென்றால் அவர்கள் அடிப்படையில் பயனற்றவற்றைப் பேச மாட்டார்கள். உயிர்கள், இயற்கை, சுற்றுப்புறம், ஆன்மீகம் என்று பலவகைகளிலும் உலக மேம்பாட்டிற்கும், உயிர்கள் உய்வதற்கும் சிந்திக்கும் அத்தகைய ஆராய்ச்சியாளப் பெருந்தகைககள் நேரத்தை வீணடிக்கும் பயனற்றவற்றைச் சிந்திப்பாரா அல்லது பேசத்தான் செய்வாரா?

ஆக அவ்விதமாகப் பயனற்றவற்றைப் பேசுவோர், வீண்விவாதத்தில் ஈடுபடுவோர் ஆராய்ச்சியாளர்களாகவோ, கண்டுபிடிப்பாளர்களாகவோ ஆக முடியாது என்பது உட்கருத்து.

வீண் விமரிசனங்களுக்குத் தலையைக் கொடுப்போருக்கு நற்பயன் பற்றிய சிந்தனை எப்படி வரும்? தம் கடமைகளைச் செய்யவே தெரியாது பிறருக்குக் கொடிப் பிடித்துப் பாலாபிஷேகம் செய்வோருக்கும் ஊதாரித்தனமாகத் திரிவோருக்கும் அரும் பயன்களை ஆராய்கின்ற தன்மை எப்படி வரும்? குறிக்கோளற்றோருக்கும், முக்கியமானவை, அல்லாதவை என்று தரம்பிரித்து முன்னுரிமை கொடுத்துச் செயலாற்றத் தெரியாதோருக்கும், நேரத்தின் அருமை தெரியாதோருக்கும் அரியவை எப்படிச் சாத்தியமாகும்?

புதுக்கவிதை எழுதும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் அர்த்தமற்ற குப்பைகளை எழுதி தமது நேரத்தையும் படிப்பவர் நேரத்தையும் வீணடித்தல் கூடாது என்பதும் இதிலிருந்து விளங்கும். அத்தகையோர் அரியவற்றை, புதியவற்றை, உயர்ந்த நிலையைப் பெற இயலாது என்பது தெளிவு.

பயனற்றவற்றைத் தவிர்த்து, பேசும் சொற்களைச் சுருக்கி, காரியத்தில் ஈடுபடுவோரே அரிய, பெரிய வெற்றிகளை ஈட்டும் சாதனையாளர்களாக ஆக முடியும்.

உண்மையில் மேதாவிகளின் மவுனம் அல்லது குறைந்த பேச்சு என்பதும் அவர்களின் அறிவின் முதிர்ச்சியே.

குறிப்புரை :
அரும் பயன்களை ஆராய்ந்து அறியக் கூடியோர் பயனற்ற எந்தச் சொல்லையும் சொல்ல மாட்டார்கள்.

அருஞ்சொற் பொருள் :
அரும் - அரிய, சிறப்பான, அறிதற்கரிய, காணுதற்கரிய, செய்தற்கரிய, அருமையான

ஒப்புரை :

திருமந்திரம்: 486
இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே

திருமந்திரம்: 520
எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவள மேனி அறுமுகன் போயவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

திருமந்திரம்: 676
மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்
மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே

திருவாசகம். மாணிக்கவாசகர்.
5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
8. ஆனந்தத்து அழுத்தல் (எழுசீர் ஆசிரிய விருத்தம்)

நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஆய வாக்கினால்
தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா
எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே. 80

ஔவையார். ஆத்திசூடி:
72. நேர்பட வொழுகு.

ஔவையார். நல்வழி:
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர். 40

***

In English:

Chapter : 20

No Vain Utterance

Thirukkural : 198

Wiser never speaks useless...




In Tamil

arum payan Ayum aRivinAr sollAr
perum payan illAtha sol.

Meaning :
The research scholars of greater usages will not utter much useless words.

Explanation :

Those wise who analyze research and tell the greater utilities to the rest of world will tell not much useless words.

Those great researchers, professors, scientists, experts, medicos, sages, philosophers, writers who do study, analyze research and discover the rare ways, formulas, things, medicines and utilities will not tell much of useless words and also they never engage in any unnecessary arguments.

But when here it is mentioned as not much of useless words means it look like sometimes these geniuses may use some incomprehensible words. It is because they are exceptional intellectuals of talents. Hence their talks of greater thinking may look incomprehensible and useless for the ordinary people. However, whatever they speak it will have certainly some meaning. It is because basically they never utter senseless words consciously. Thinking deep on living beings, nature, environment, divinity and such those greater thinkers and analysts, will ever they have time to imagine or talk on useless and time wasting things?

Therefore, the implied meaning here is that such people who speak useless things and who participate in useless arguments cannot become wise or researchers or innovators.

How can the people of useless arguments ever get the useful good thinking? How can those who do not know their responsibilities but carry the flags for others, pour milk and worship the other living human beings portraits as fans and wander with no aim get capabilities to analyze the rare utilities? How the rare are possible for those aimless, who do not know the priorities for important things and who do not know the value of the precious time?

It is well understandable from here that those who keep scribbling the newer type of poems with no sense and writers of nonsensical should not do such by wasting their own time and others by publishing it later. Also such cannot accomplish greater, rare and newer things forever for sure.

Those who avoid the useless words, and reduce their speech but do more on their job consciously only can become successful by greater and rarer accomplishments.

In fact the silence or the shorter speech by the geniuses shows only the maturity of their greater intelligence.


Message :
Those wise who research and understand things of rare usages will not utter any useless words.

***

Wednesday, January 27, 2010

திருக்குறள்:197 (சான்றோர் பயனில சொல்லாமை நன்று...)

அதிகாரம்

: 20

பயனில சொல்லாமை

திருக்குறள் : 197

சான்றோர் பயனில சொல்லாமை நன்று...

In English

நயன் இல சொல்லினும் சொல்லுக! சான்றோர்
பயன் இல சொல்லாமை நன்று.

பொழிப்புரை :
நன்மை இலாதவற்றைச் சொல்லினும் சொல்லுக; சான்றோர், பயன் இலாதவற்றைச் சொல்லாமை நன்று.

விரிவுரை :
சான்றோர் எனும் நல்லறத்தார் நன்மை இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம் ஆனால் பயன் இல்லாதவற்றைச் சொல்லாமல் இருத்தலே நல்லது.

ஒருவர் பயனற்றவற்றைப் பேசினால் எல்லோராலும் இகழப்படுவார்; அவரது பெருமையும் மேன்மையும் கெடும்; மேலும் பயனற்ற பேச்சைப் பாராட்டினால் மேலோர், கீழோர் எனும் எத்தகுதியும் பார்க்காது அவர் பயன் அற்றுப் போய் விடுவார் என்பதை இதுகாறும் சென்ற குறள்களில் வள்ளுவர் கூறியிருப்பதால், பயனற்றவற்றைப் பேசும் சான்றோர் சான்றோராகத் தொடர முடியாது என்பது மிகவும் தெளிவு. பிறகு ஏன் சான்றோர் நலம் அற்றதைப் பேசினாலும் பேசட்டும்; பயன் அற்றதை மட்டும் பேசாது இருக்கட்டும் என்கிறார் என்றால் நல்லவை, அல்லாதவை என்பனவற்றை விளக்க சான்றோர் நன்மை அற்றவற்றைக் கூடப் பேச நேரலாம். ஆனால் அத்தகைய தருணத்திலும் பயன் அல்லாதவற்றை உதாரணத்திற்குக் கூடச் சொல்லுதல் தவறு என்பது உட்கருத்து.

அதாவது தவறிக் கூடப் பிழை செய்ய மாட்டாதவர் சான்றோர் என்பது முன்னரே வகுத்தாயிற்று. இங்கே அவர்களை அறநெறி முறையினின்று தவறுவதற்கு அனுமதியோ சலுகையோ வள்ளுவர் கொடுக்க வில்லை. மாறாக பிற உயிர்களின் நன்மைக்காகவே மேலே சொன்னதைப் போன்ற ஒரு தேவை ஏற்படின் சான்றோர் நலம் தராததைக் கூடப் பேசலாம் என்கின்றார். அதாவது கல்விக்கோ, வழக்கிற்கோ, உயிரைக் காப்பாற்றவோ அது போன்ற ஏதோ ஒரு நலன் கருதி, நலமற்றதைக் கூடப் பேசலமாமாம். ஆனால் பயன் அற்றதை மாத்திரம் எந்தப் பயன் கருதியும் பேசலாகாது என்பது கருத்து.

நேர்மறை எண்ணங்களோடு திகழ வேண்டிய அற வழி உலகில் அமங்கலமானதைக் கூடப் பேச வேண்டி இருப்பின் பேசலாம் ஆனால் ஒரு போதும் அர்த்தமற்றதை அல்ல என்பது பொருள். சான்றோர்களின் அமங்கல வார்த்தைகளால், கோபத்தின் உச்சியில் சொன்ன அறம் எனும் வார்த்தைகளால், சாபங்களால், வாக்குகள் பலித்ததாய் புராணங்களும், வரலாறுகளும் பேசுகின்றன. அவர்கள் அபத்தங்களைப் பேசியதாய்க் காண்பது அரிது.

எனவே சான்றோர்கள் கருத்தற்ற, அர்த்தமற்ற, பொருளற்ற, பொருத்தமற்ற வார்த்தைப் பிதற்றல்களை ஒரு போதும் உதிர்ப்பதில்லை. அவ்வாறான நேரத்தைப் பாழடிக்கும் வீண் பேச்சை அவர்கள் உரைக்கவும் கூடாது என்று கூறுவதன் வாயிலாக ஒவ்வொருவரும் சான்றோராகத் திகழ வேண்டும் என்பதே இக் குறளின் நோக்கம்.

குறிப்புரை :
சான்றோர் நன்மை அற்றவற்றைத் தேவை கருதிச் சொன்னால் கூடப் பரவாயில்லை; பயன் அற்றவற்றை மட்டும் சொல்லாமல் இருத்தலே நலம்.

அருஞ்சொற் பொருள் :
நயன் - கனிவு, இனிமை, அன்பு, பரிவு, பண்பு, நலம், நாகரீகம், அருள், சிறப்பு, நன்மை, பக்தி, நற்பயன், கொள்கை, நியதி, உள்ளீடு, பசை, உறவு, வழிமுறை

ஒப்புரை :

திருமந்திரம்: 392
பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு
அயஓளி யாயிருந் தங்கே படைக்கும்
பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே

திருமந்திரம்: 396
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே

திருமந்திரம்: 460
கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட
நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே

திருவாசகம். மாணிக்கவாசகர்.
5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
3. சுட்டறுத்தல் (எண் சீர் ஆசிரிய விருத்தம்)

சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்
கண் இனை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்
மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை
மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத்
தந்தனை செந் தாமரைக்காடு அனைய மேனித்
தனிச்சுடரே இரண்டுமிலி இத்தனிய னேற்கே. 30

ஔவையார். ஆத்திசூடி:
65. நன்மை கடைப்பிடி.

ஔவையார். நல்வழி:
பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு. 35

***

In English:

Chapter : 20

No Vain Utterance

Thirukkural : 197

Good for wise is to speak not useless...




In Tamil

nayan ila sollinum solluka! sAnROr
payan ila sollAmai nanRu.

Meaning :
Let the wise speak even the not good but not the useless words for the good.

Explanation :

Let the wise of good virtues may even speak of non good but not the useless words for their own good.

When one speaks senseless will be disgraced by all; one's eminence and excellence get destroyed; and also when one appreciates the absurd regardless of one's status one will go as human chaff and will become absolute waste is what so far Valluavar explained in the previous Kurals of this chapter. Therefore one wise by talking useless cannot continue any more as the wise is very clear. Then why does he says that let wise speak even the not good but not the meaningless is only consideration that wise may speak the good or non-good for the sake of explanations. But even in such situations the wise should never speak the useless even for example is the implied meaning here.

It is already defined that the wise should never go wrong even by mistake. So Valluvar is not giving any exemptions to them here to overrule the virtues or bend it. On the other hand only when the above explained like situations warrant or necessitates for the benefit of other coexistences, the wise may speak of non good says Valluvar. That is when the education, court case or to save a life or such as necessary event of a good cause one may even speak of non good. But one should never speak senseless for whatever be the sake is the meaning.

Still to make it clear, in the word of good virtues where only the positive thinking is suppose to prevail, one may speak even the non auspicious if necessitates but not the senseless is the exact meaning. The inauspicious words, anger utterances, imprecation, curse by the wise, sages, and great eminent people have even became true says the epics and histories. But it is very rare to find any senseless speech by them.

Therefore the wise and scholars never utter meaningless, senseless, useless, inappropriate words or prattles.
Thus emphasizing it clear that such time wasting speech should not be uttered by wise, this Kural intends everyone to follow the same to become wise.


Message :
The wise may even speak the not good when may necessary but not the useless words is for own good.

***

திருக்குறள்:196 (அபத்தத்தைப் போற்றுவோர் மனிதரில் பதரே...)

அதிகாரம்

: 20

பயனில சொல்லாமை

திருக்குறள் : 196

அபத்தத்தைப் போற்றுவோர் மனிதரில் பதரே...

In English

பயன் இல சொல் பாராட்டுவானை மகன் எனல்;
மக்கட் பதடி எனல்!

பொழிப்புரை :
பயன் இலாத சொல்லைப் பாராட்டுபவனை மனிதன் என்பதைக் காட்டிலும் மக்களுள் பதர் எனலாம்.

விரிவுரை :
பயனற்ற சொற்களைப் பாராட்டுகின்றவனை மனிதன் என்பதைக் காட்டிலும் மக்களுள் பயனற்ற பதர் என்று கொள்ளலாம்.

பயனற்றவற்றைப் பேசுபவனைப் பற்றி இதுவரையில் கூறிவந்த வள்ளுவர், இப்போது அதைக் கேட்டுப் பாராட்டுவோனை, அவரை ஊக்குவித்து உரையாடும் அறிவிலியைப் பற்றி இங்கே பேசுகின்றார். அவன் மனிதனே அல்ல மனிதப் பதர் என்கின்றார்.

பதரும் உமியும் கால் நடைகளுக்கூட உணவாவதில்லை. அவை உரமாவதுமில்லை. எந்த வகையிலும் உபயோகம் ஆவதுமில்லை. அதைப்போலவே வாழும் மக்களுள் பதர் என்பது உபயோகமற்றது மாத்திரம் அல்ல உபத்திரமும் கொண்டது என்பது புரிந்து அவரை பொது மக்களும் பதரைப் போலவே தூற்றி ஒதுக்கி விடுவர் என்பது உட்பொருள்.

மனிதர்களுள் ஒருவனைப் புரிந்து கொள்ள ஏதுவாக வள்ளுவர் வகுத்த சூத்திரம் இஃது. ஆம் அத்தகையவாறு பயன் அற்றவற்றைப் பாராட்டுவதும், பேசுவதும் உதவாக்கரை மனிதர்களின் குணம். அவர்களால் மனிதருக்குத்தான் ஏதேனும் பயன் உண்டோ? அவரைப் பொருட் படுத்தினால் நாமும் நமது நேரத்தையும் வீணடிக்க நேரும் என்பதே உண்மை.

ஆதலின் பயனற்ற சொற்களைப் பேசுவோரைப் பாரட்டுவோரைப் பதராக எண்ணி ஒதுக்கி, தாம் அவரிடமிருந்து ஒதுங்கிக் கொள்வதே அறிவுடைமை.

குறிப்புரை :
பயனிலாத சொற்களைப் பாராட்டுவோரை மனிதர் என்பதைக் காட்டிலும் பதர் எனக் கொள்வதே பொருந்தும்.

அருஞ்சொற் பொருள் :
மகன் - சிறந்தவன், வீரன், கணவன், ஆண், ஒருவருடைய குழந்தை, மனிதன்
எனல் - என்று சொல்வது, என்பதைக் காட்டிலும்
மக்கட் - மனிதர்கள், ஒருவருடைய குழந்தைகள்
பதடி - தானியப் பதர், உமி, பயனற்ற பொருள்.

ஒப்புரை :

திருமந்திரம்: 317
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே.

திருமந்திரம்: 359
செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே

திருமந்திரம்: 383
இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே

திருவாசகம். மாணிக்கவாசகர்.
5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)

3. சுட்டறுத்தல் (எண் சீர் ஆசிரிய விருத்தம்)
வண்ணம்தான் சேயது அன்று வெளிதே அன்று
அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு
எண்ணம்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
எய்துமாறு அறியாத எந்தாய் உன் தன்
வண்ணம்தான் அது காட்டி வடிவு காட்டி
மலர்க்கிழல்கள் அவைகாட்டி வழி அற்றேனைத்
திண்ணம்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்
எம்பெருமான் என் சொல்லிச் சிந்துக்கேனே. 29

ஔவையார். ஆத்திசூடி:
59. தூக்கி வினைசெய்.

ஔவையார். நல்வழி:
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல். 34

***

In English:

Chapter : 20

No Vain Utterance

Thirukkural : 196

Absurd appreciator is human chaff...




In Tamil

payan ila col pArAttuvAnai makan enal;
makkat pathadi enal!

Meaning :
That who appreciates the absurd should be called as not a human being but the human chaff.

Explanation :

That who appreciates the absurd and vain words must be considered as human chaff and not as human beings.

Valluvar has mentioned about the speakers of senseless words so far but now he speaks here about the one who listens to it and appreciates, the encouraging and interacting fool. And so he recommends calling such one as not a human being but only as the human chaff.

The empty ear of grain or the chaff cannot be even useful as the food for animals. That cannot be used as manure either. It is in no way useful. Similarly those human chaffs are not only useless but also disturbance and obstacles. Hence the public will understand them and winnow them like chaff and reject them is the implicit meaning here.

This is the easiest formula or a clue by Valluvar to understand one among the human beings. In fact insane and stupid characters alone will appreciate the useless, senseless and absurd talkers. And by such is there any use to the man kind? If we heed and consider them then we will also be wasting only our precious time.

Therefore it is better to consider and reject such appreciators of absurd as human chaff and to keep them away must be the true wisdom for one.


Message :
It is befitting to consider those who appreciate the absurd as human chaff instead of human.

***

Tuesday, January 26, 2010

திருக்குறள்:195 (சீர்மை நீக்கும் பயனிலாச் சொல்...)

அதிகாரம்

: 20

பயனில சொல்லாமை

திருக்குறள் : 195

சீர்மை நீக்கும் பயனிலாச் சொல்...

In English

சீர்மை சிறப்பொடு நீங்கும் - பயன் இல
நீர்மை உடையார் சொலின்.

பொழிப்புரை :
[அவரின்] பெருமை மேன்மையுடன் நீங்கும், பயன் இல்லாத சொற்களைத் தண்மை உடையவர் சொன்னால்.

விரிவுரை :
பயனிலாத சொல்லை கருணை உள்ளவர் சொன்னால், அவரது புகழ் அதன் தனித் தன்மையோடு நீங்கிவிடும்.

இயல்பாகவே இனிமையும், கனிவும், கருணையும் உடையவர் தவறி அர்தமற்றவற்றை, பிதற்றலை, உபயோகமற்றவற்றைப் பேசுவாரே ஆனால் அவரின் பெருமை, மேன்மை யாவும் அவற்றின் சிறப்புக்களோடு அவரை வீட்டு நீங்கிவிடும். பயனிலாத சொல்லால் ஒருவரின் இயல்புத் தன்மையையே இழக்க நேரும் என்பது உட்பொருள்.

மேலும் எவ்வளவு மேன்மை உடையவராயினும் பயன் இல்லாச் சொல் பேசுவார் ஆயின் தனது புகழையும், சிறப்பையும் இழக்க நேரும் என்பதும் நேரடிப் பொருள்.

ஆக எவ்வளவோ காலத்தில் சேர்த்த புகழை, மேன்மையை பயன் இலாச் சொல் என்னும் அர்த்தமற்ற பேச்சினால் உடனடியாக இழக்க வேண்டிவரும். அதனால் அவமரியாதையை, இழுக்கை ஒருவர் அடைய நேரும் என்றால் பயன் இலாச் சொல்லால் ஏற்படும் பாதகத்தின் அளவை நன்கு புரிந்து கொள்ளலாம்.

எனவே பயனிலாச் சொல்லைச் சொல்வதில் மேலோர், கீழோர் எனும் பாகு பாடே இன்றி அவரவர் தகுதிகளிலிருந்து தள்ளப்பட்டு அவமானத்தையும், இழுக்கையையும், துன்பத்தையும், வருத்தத்தையும் அடைவர் என்பது திண்ணம்.

குறிப்புரை :
கருணையும் தண்மையும் கொண்டவரேனும் பயனிலாத சொற்களைச் சொன்னால் அவரது பெருமையும் அதற்கான மேன்மையும் அவரை விட்டு நீங்கிவிடும்.

அருஞ்சொற் பொருள் :
சீர்மை - பெருமை, புகழ், நற்பண்பு
சிறப்பு - மேன்மை, தனித்தன்மை, உயர்வு, செல்வம், கௌரவம்
நீர்மை - குளிர்ச்சி, இயல்பு, இயற்கை, இன்சொல், நட்பு, கருணை, தண்மை

ஒப்புரை :

திருமந்திரம்: 294
துணையது வாய்வரும் தூயநற் சோதி
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வரும் தூயநற் கந்தம்
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே.

திருமந்திரம்: 300
பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே.

திருமந்திரம்: 302
மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்பது அரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே.

திருவாசகம். மாணிக்கவாசகர்.
5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா)

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. 24

ஔவையார். ஆத்திசூடி:
53. சோம்பித் திரியேல்.

ஔவையார். நல்வழி:
சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். 15

***

In English:

Chapter : 20

No Vain Utterance

Thirukkural : 195

Vain words eliminates the reputation...




In Tamil

sIrmai siRappodu nIngkum - payan ila
nIrmai udaiyAr solin.

Meaning :
Their eminence with excellence will leave them even for those kind men who speak of senseless words.

Explanation :

When the kind men speak of useless vain words, their reputation with it's eminence will go away.

Those who are normally sweet, kind and gentle, when they speak senseless things or blabber even by mistake, their all eminence and excellence with their specialties will leave them instantly. The implied meaning is that by talking senseless words one has to lose one's natural state.

Also the direct meaning is that whomever it may be, however eminent they may be, when they speak the senseless and stupid words they got to lose their fame and excellence without fail.

Therefore one has to lose the fame, excellence and the good will earned through a very long period of time over a stupid talk of non sense. One can understand the severity and the impact of the senseless words by its definite offerings of defames and disgraces.

Therefore it is sure that by speaking the senseless words one has to certainly befall from their current stand and regardless of high or low status and will definitely earn only disgrace, defame, degrading and afflictions there upon.


Message :
The reputation and excellence leave even the gentle and kind men when they speak senseless words.

***

Sunday, January 24, 2010

திருக்குறள்:194 (பயனில் பேசுவோரைத் துன்பம் சேரும்...)

அதிகாரம்

: 20

பயனில சொல்லாமை

திருக்குறள் : 194

பயனில் பேசுவோரைத் துன்பம் சேரும்...

In English

நயன் சாரா நன்மையின் நீக்கும் - பயன்சாராப்
பண்பு இல் சொல் பல்லாரகத்து.

பொழிப்புரை :
நலம் சார்ந்திராதே நன்மையிலிருந்து நீக்கும், பயன் சாராத பண்பிலாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவதால்.

விரிவுரை :
ஒருவன் பயன் தராத பண்பிலாச் சொல்லைப் பலரிடத்தும் கூறுவதால், அவனை நற்பயன் சாராமல் அனைத்து நன்மைகளிலிருந்தும் நீக்கிவிடும்.

பயனிலாத பண்பற்ற சொல்லைப் பேசுவோனை, மூடனை, நல்லோர் யாரும் சேர மாட்டார்கள். ஆதலின் தனிமைப் படுத்தப்படும் அவனை நன்மைகளும், நலங்களும், நற்பயன்களும், நற்குணங்களும் சாராதே நீங்கிவிடும். உலகில் எல்லா நலங்களும் பயனுடையோரையும், பண்புடையோரையும் தான் சாரும்; பற்றி நிற்கும்.

பண்பற்றுப் பயனிலாத சொல்லை ஒருவன் சொல்லும் போழ்தே அவனை இனிமையும், நன்மையும், சுகமும், சுற்றமும் விட்டு நீங்கி விடுகின்றன. எனவே அவனைத் துன்பம் மட்டுமே சேரும் அன்றில் தொடர்ந்து செல்லும் என்பது மறை பொருள்.

சூழ் நிலைக் கைதியாகவோ, கெட்ட நண்பர்கள் குழுமிய நேரத்தினாலோ ஒருவன் பயனிலாத சொல்லை உபயோகிக்க முயலும் போது கூட அஃது அடிப்படையில் பண்பல்ல என்று உணர்ந்து விட்டால் அச் சொல்லைச் சொல்லாதே நீங்கி விடலாம். அதால் தேவையற்ற பிரச்சினைகளிலிருந்தும், கூடா நட்பிலிரிந்தும் கூடப் பிரிந்து நல்வழிக்கு வந்து விடலாம்.

சொல்லாத வார்த்தைக்கு நாம் எஜமானர்கள். சொல்லிய வார்த்தை நமக்கு எஜமான். நகைச் சுவை என்று அர்த்தமற்றவற்றை, பண்பற்றவற்றை, உபயோகமற்றவற்றை, இனிமையற்றவற்றைப் பேசாது இருத்தல் கோடி நன்மை செய்வதற்குச் சமம். ஆதலில் எப்போதும் சிந்தித்துத் தேவையானதை, பொருளுள்ள சொல்லை மாத்திரம் பேசுவதே எக்காலத்திலும் நல்லது.

குறிப்புரை :
பண்பிலாது பயனற்றவற்றைப் பலர் முன் பேசுவோனை இனிமையும், நலமும் விட்டுப் பிரிந்து சென்று விடும்.

அருஞ்சொற் பொருள் :
சாராத - சார்ந்திராத, ஒட்டாத, அடுத்திருக்காத, புகலடையாத, அடைக்கலமாகாத, ஆதாரமற்ற, பக்கத்திருக்காத, நம்பியிராத,
நயன் - கனிவு, இனிமை, அன்பு, பரிவு, பண்பு, நலம், நாகரீகம், அருள், சிறப்பு, நன்மை, பக்தி, நற்பயன், கொள்கை, நியதி, உள்ளீடு, பசை, உறவு, வழிமுறை,
அகத்து - இடத்து, இடத்தின் விகுதி; உள்ளே, மனம்

ஒப்புரை :

திருமந்திரம்: 133
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே.

திருமந்திரம்: 169
இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.

திருமந்திரம்: 240
வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாமே.

திருவாசகம். மாணிக்கவாசகர்.
5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை)

வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19

ஔவையார். ஆத்திசூடி:
52. சொற்சோர்வு படேல்.

ஔவையார். நல்வழி:
பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும். 14

***

In English:

Chapter : 20

No Vain Utterance

Thirukkural : 194

Afflictions join the vain speakers...




In Tamil

nayan sArA nanmaiyin nIkkum - payansArAp
paNpu il sol pallArakaththu.

Meaning :
All gains and goodness leave when uncultured vain words are spoken to many.

Explanation :

All the gains and goodness leaves one when one speaks useless and uncivilized words in front of many.

No wise and good people will join the uncultured vain speakers, the senseless. Therefore all the goodness, gains, betterments, good virtues leave such isolated people. In this world all goodness will only go to useful and courteous and benefit them.

Uncourteously when one says useless words instantly pleasantness, goodness, happiness and relations just leave. Therefore only afflictions will join or continue one is the implied meaning here.

As scape-goat to the circumstances and to the joint of evil friends when one tries to use useless words, if one moment one thinks that it as the uncourteous can escape from uttering it. Thus one can exit from the subsequent problems arising and even can come out of bad friendships to the good virtuous path.

We are the boss for the unuttered words. Uttered words are the bosses for us. Not cracking a joke of vulgar, senseless, cultureless, useless, pleasant less words and keeping quiet is equivalent to crores of goodness. Therefore it is always better to think and speak only the useful and necessary.


Message :
When vain words are spoken in discourtesy to many, happiness and goodness will leave instantly.

***

Saturday, January 23, 2010

திருக்குறள்:193 (பயனிலா விரிவுரை அறிவிலியின் அடையாளம்...)

அதிகாரம்

: 20

பயனில சொல்லாமை

திருக்குறள் : 193

பயனிலா விரிவுரை அறிவிலியின் அடையாளம்...

In English

நயன் இலன் என்பது சொல்லும் - பயன் இல
பாரித்து உரைக்கும் உரை.

பொழிப்புரை :
நன்மை இலாதவன் என்பதைச் சொல்லும், பயன் இலாதவற்றை விவரித்து உரைக்கும் உரை.

விரிவுரை :
ஒருவன் பயன் இல்லாதவற்றை விரிவாகப் பேசி உரைக்கும் உரை, அவன் நலமேதும் இலாதவன் என்பதையே சொல்லும்.

ஒருவன் உதவாக்கரை, அறிவிலி என்பதையே அவன் விலாவரியாக விவரித்துப் பேசும் பயனிலாச் சொல் காட்டிக் கொடுக்கும்.

பயனிலாதவற்றைப் பேசுவதே வீணன் என்பதைக் காட்டும். சோம்பேறித் தனத்தை வளர்க்கும் விவரித்துப் பேசும் பயனிலாச் சொல்லால், அறிவற்ற பேச்சால், பேசுபவன் உதவாக்கரையான் என்பது எல்லோருக்கும் சொல்லாமலே விளங்கும். அதிலும் அதை மிகவும் விரிவாக, நீட்டி முழக்கிப் பேசுபவன் என்பவன் நிச்சயம் நேரத்தின் அருமை அறியாத மூடனே. அதை ரசித்துப் பேசக் கூடியவன் என்றால் நல் ஒழுக்கம் இல்லாத மற்றும் நேர்மை நலங்கள் அற்றவன் என்பது மட்டுமன்றி கேட்போரின் கவனத்தைத் திசை திருப்பிக் குற்றத்தை இழைக்கும் கொடியவனாகவும் கூட அவன் இருத்தல் கூடும்.

நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல், பயனிலாதவற்றை விரிவாகப் பேசுபவன் நல்லவன் அல்லன் என்பதையே அவனது பேச்சுப் பிறருக்கு அறிவுறுத்தும். அரை குறைக் குடங்களே அலைக்கழிக்கும்.

மனதையும், நாக்கையும் கட்டுப் படுத்தும் திறன் அற்றவர்களே, பேச்சைக் குறைக்கும் வலிமையற்றவர்களே பயனற்றவற்றைப் பேசுவதும், ஆராய்வதும், வாதமும் விதண்டாவாதம் செய்வதும், பயனற்றவற்றை மற்றவருக்கும் பரப்பி குதூகலிப்பதும், நேரத்தின் அருமை தெரியாது பாழடிக்கும் காரியத்தைச் செய்வார்கள். கெட்ட எண்ணங்கள் கொண்டவர்களே பிறரின் நேரத்தை வீணடிக்கும் வித்தையைச் செய்வார்கள்.

இறுக்கமான உதடுகள் அடக்கத்தின் அடையாளம் மாத்திரம் அல்ல; அவையே உள உறுதியின், வலிமையின் வெளிப்பாடு. அதனால் தான் “மோனம் என்பது ஞான வரம்பு” அதாவது உச்சத்தின் குறியீடு என்றார்கள். மேதைகளும், அறிஞர்களும் குறைந்த அளவே பேசுவதின் சூட்சுமமும் இதுதான் என்பது சிந்தித்தால் விளங்கும். நிறை குடங்கள் தழும்புவதில்லை. அவர்கள் தேவையற்றதைப் பேசுவதோ, வாதிப்பதோ, விளக்குவதோ இல்லை. அவர்களுக்கு நேரத்தின் அருமை தெரியும். பயனுள்ளதற்கு மாத்திரமே அவர்கள் தங்கள் நேரத்தைச் செலவு செய்வார்கள்.

குறிப்புரை :
பயன் இலாதவற்றை விவரித்துப் பேசும் உரை ஒருவனின் அறிவின்மையையும் நலமற்ற தன்மையையுமே வெளிக் காட்டும்.

அருஞ்சொற் பொருள் :
நயன் - கனிவு, இனிமை, அன்பு, பரிவு, பண்பு, நலம், நாகரீகம், அருள், சிறப்பு, நன்மை, பக்தி, நற்பயன், கொள்கை, நியதி, உள்ளீடு, பசை, உறவு, வழிமுறை,
பாரித்து - பருத்து, மிகுதியாகு, பரவு, தோன்று, ஆயத்தப்படு, காத்து, ஒழுகி, பேணி, வளர்த்து, நிறைத்து, விரும்பி, விவரித்து

ஒப்புரை :

திருமந்திரம்: 107
பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமககு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர் அவ் வானவ ராலே.

திருமந்திரம்: 129
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.

திருமந்திரம்: 132
பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.

திருவாசகம். மாணிக்கவாசகர்.
5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை)

உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி
மத்த மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும்
தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே. 7

ஔவையார். ஆத்திசூடி:
51. சையெனத் திரியேல்.

ஔவையார். மூதுரை:
கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். 27

***

In English:

Chapter : 20

No Vain Utterance

Thirukkural : 193

Elaborated useless speech is the mark of fool...




In Tamil

nayan ilan enpathu sollum - payan ila
pAriththu uraikkum urai.

Meaning :
The elaborated useless speech only speaks of no good man.

Explanation :

One's explanatory and detailed useless speech only says that one is not of goodness.

The detailed talk of vain words by one exhibit only that one is useless and ignorant.

Talking vain words by themselves will tell one is useless. However the enhanced and explanatory talk of those useless, senseless and slothful words by one will make it more clearly with no apprehensions to everyone that he is utter useless. Such of talking those useless to the core must be certainly the stupid of not knowing the value of time. When one talks so enthusiastically the useless things then one must be ruthless criminal with no any good virtues and only may trying to divert the audience for making or to cover up already made some offensive crime.

Like the frog gets ruined itself through its own voice, by talking the useless in elaboration one's own talk makes more obvious to all that one is utter useless. Empty vessels make more noise.

Only those who are inefficient to control their mind and tongue, and those who are weak to reduce their talk will engage in talking and analyzing the useless words and enjoy in arguing, contending, chatting, spreading the useless to others and without knowing the value of the precious time will kill it. Only those with bad intentions also kill others time.

Tight lips are the symbol not only of the self control but also the strength of mind and heart. That is why the saying goes as that of “The silence is the height of wisdom". "Speech is human; silence is divine"; "Speech is silver but silence is golden". One can now easily understand that this is the secret behind the greats and geniuses for talking very less. They never speak, argue or explain the vain. They know value of the precious time. They will spend their time only for the useful things.


Message :
One’s expanded useless talk only exhibits the ignorance and the state of no goodness of one.

***