tag:blogger.com,1999:blog-4279915627330374658.post543415323524658533..comments2023-09-03T01:48:32.542-07:00Comments on Kural Amutham (குறள் அமுதம்): திருக்குறள்:135 (ஆக்கமும் உயர்வும் தருவது ஒழுக்கமே...)Uthamaputhra Purushothamhttp://www.blogger.com/profile/11161755910097672821noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4279915627330374658.post-91265587328839852732009-11-09T07:47:03.479-08:002009-11-09T07:47:03.479-08:00/// திருத்திச் சொல்லிய விளக்கம் பொருத்தமாக இருக்கி.../// திருத்திச் சொல்லிய விளக்கம் பொருத்தமாக இருக்கிறதா ///<br /><br /><br />போதும் ஐயா அருமை! நன்றி !!தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4279915627330374658.post-82370533748446286492009-11-08T00:23:27.917-08:002009-11-08T00:23:27.917-08:00நண்பர் கேசவன் அவர்களே,
உங்களின் பின்னூட்டத்திற்க...நண்பர் கேசவன் அவர்களே, <br /><br />உங்களின் பின்னூட்டத்திற்கு உண்மையில் மிக்க நன்றி. அதாவது இத்தகைய பின்னூட்டத்தில்தான் நான் செய்யும் தவறுகள் வெளி வருவதாலும், திருத்திக் கொள்ள வாய்ப்பு அமைவதாலும் மிகவும் பயனுள்ளதாகக் கருதுகின்றேன். <br /><br />திருக்குறளின் மறை பொருட்களை வெளிக்கொணருவதே இத் தொடரின் முக்கிய நோக்கமாதலால், நிச்சயம் தாங்கள் இடித்துக் கூறினும், மாற்றுக் கருத்துச் சரியாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் ஏற்றுக் கொள்ளத்தான் செய்வேன். இருப்பினும், தாங்கள் உண்மையினை எனக்கு விளக்குவதற்காக, தமக்கு ‘விளங்க வில்லை’ என்று சொல்லி, தம்மைத் தாழ்த்திக் கொண்டு சொன்ன பண்பு கண்டு மிகவும் நெகிழ்ந்து போயிருக்கின்றேன். உண்மையில் மிகவும் பாராட்டத் தகுந்த உள்ளீடு உங்களது. அடுத்த முறை தாங்கள் உங்கள் மாற்றுக் கருத்தை எந்தவித சங்கோஜமுமின்றிப் பதிவு செய்யுங்கள், மிகவும் விரும்பி வரவேற்கிறேன்.<br /><br />இனித் தாங்கள் சொல்லிய விபரங்களோடு, எங்கே தவறினேன், எங்கே மாற்றுக் கருத்து உண்மையாகிறது என்பதைப் பார்ப்போம். 17வது அத்தியாயம் அழுக்காறாமை பற்றி இருக்கும்போது, ஒழுக்கமுடைமையில் அழுக்காறு பற்றி ஏன் பேசுகின்றார் என்றே எண்ணம் முதலில் வந்தது. எனவே இச் சந்தேகக் கண்ணோடு, வழக்கம்போல் மற்றைய உரை ஆசிரியர்களின் கருத்தென்ன என்று பார்த்தேன். <br /><br />1. பரிமேலழகர் அழுக்காறு என்பதோடும், மணக்குடவர் மனக்கோட்டம் என்பதோடும் நிறுத்தியிருந்தார்கள். ஏனையோர் பொறாமை என்றே பயன் படுத்தி இருந்தனர். அழுக்காறு என்னும் வார்த்தைக்கான நேரடிப் பொருள் ‘பொறாமை’ என்றே அகராதியிலும் கண்டேன். ஆதலின் இதில் மிகவும் ஆழப்படாது, மேலோட்டமான பொறாமை என்னும் அர்த்தத்திலேயே நானும் பயணிக்க நேர்ந்ததால், தவறு நிகழ்ந்தது. என்னுடைய வழக்கமான ஆழப்படாமைக்குக் காரணம் அழுக்காறு என்பதை நுணுக்கியோ, பிரித்தோ நோக்காததே. அதற்கு அழுக்காறு என்பது கூட்டு வார்த்தை இல்லை என்பதும் உண்மையே.<br /><br />2. இப்போது தொடர்புள்ள மற்றைய வார்த்தைகளைத் தாங்கள் கேட்டது போல் பார்ப்போம்:<br /><br />அழுக்கம் - கவலை<br />அழுக்கறல் - அழுக்காறடைதல், அழுக்கு நீங்கல்<br />அழுக்கறுத்தல் - பொறாமை கொள்ளல்<br />அழுக்காமை - ஓர் ஆமை<br />அழுக்காறாமை - பொறாமை உடையாமை<br />அழுக்காறு - அசுத்தநெறி, பொய், பொறாமை<br />அழுக்கு - அசுத்தம், ஆமை, ஊத்தை, பொறாமை, மலம், மாசு<br />அழுங்கல் - அச்சம், அலையல், அழுதல், அழுந்தல், ஆரவாரித்தல், இரங்கல், ஒலித்தல், ஒளிமழுங்கல், கெடுதல், சோம்பல், துன்பம், நோய், வருத்தம்<br />அழுங்காமை - அஞ்சாமை, அலையாமை, அழாமை, அழுங்கு, அழுந்தாமை, ஆராவாரியாமை, இரங்காமை, ஒலியாமை, ஒளிமழுங்காமை, கெடாமை, சோம்பாமை, வருத்தப்படாமை.<br />அழுங்கு - குமரி, அழுங்கென்னேவல், ஆமை, ஓர் மிருகம்.<br />அழுங்குப்பிடி - நெகிழாது பிடித்தபிடி.<br /><br />ஆக அழுக்கிற்கு வேண்டுமானால் தாங்கள் கேட்டபடி ஆறு வேறு பட்ட வார்த்தைகளும், அர்த்தங்களும் இருக்கின்றன. ஆனால் அழுக்காறு என்பதற்கு மூன்று பொருள் மாத்திரமே. இருப்பினும், பொறாமை என்னும் வார்த்தையைக் காட்டிலும் இங்கே அசுத்தநெறி என்பதே சாலப் பொருத்தமானதாக இருந்திருக்கும். அதாவது தலைப்பை ஒட்டிப் பார்க்கும் போழ்து.<br /><br />எனவே திருத்திய தீர்ப்பு:<br />பொழிப்புரை:<br />அசுத்தநெறி கொண்டவரிடத்தே ஆக்கம் இல்லாதது போன்றே - நல் ஒழுக்க நெறி இல்லாவரிடத்தே உயர்வு இல்லை.<br /><br />விரிவுரை: <br />பொறாமை என்னும் வார்த்தை உள்ள இடத்தே எல்லாம் அசுத்தநெறி என்று மாற்றிக் கொள்ளவும். தூய நெறியாகிய ஒழுக்க நெறி இல்லாதவரிடத்தில் உயர்விற்கான வாய்ப்பு இல்லை என்பதே மறை பொருள். ஆக தூய நெறி என்னும் ஒழுக்கமே, மாசற்ற தன்மையையும் ஒருவருக்கு நல்கும் என்பது தெளிவு.<br /><br />குறிப்புரை: மாற்றம் இல்லை.<br /><br />இவ்விதமாக மேற்கண்ட மாற்றுப் பொருளுக்கான பெருமை முழுவதும் திரு. கேசவன் அவர்களையே சாரும். இம் மாற்றங்களை மென்புத்தகத்தில் பதிவு செய்வேன். <br /><br />எனது முன் பதிவில் உள்ள தவறிற்கு வாசகர் அனைவரிடமும் மன்னிப்பை வேண்டுகின்றேன். இதை அருமையாகச் சுட்டிக் காட்டிய கேசவனிற்கு மிக்க நன்றி.<br /><br />இவ்விதமே தவறுகளைச் சுட்டிக் காட்டும் அன்பர்களை மிகவும் மதித்துப் போற்றுவேன். குறள் அமுதம் சிறப்புடன் திகழ உதவும் நல் இதயங்களுக்கு அனைவரின் சார்பிலும் மீண்டும் நன்றி.<br /><br />நண்பர் கேசவன் அவர்களே, இதில் தங்களுக்கு எவ்விதம் மாற்றுக் கருத்து இருக்கலாம் எனத் தோன்றியது என்பதைப் பதிவு செய்தால் எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் மிகவும் பனுள்ளதாக இருக்கும். மேலும் தற்போது திருத்திச் சொல்லிய விளக்கம் பொருத்தமாக இருக்கிறதா என்பதைத் தெளிவு செய்யவும். அன்றில் உங்களிடம் மற்றைய மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும். நன்றி.<br /><br />அன்புடன்,<br /><br />உத்தமபுத்திராUthamaputhra Purushothamhttps://www.blogger.com/profile/11161755910097672821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4279915627330374658.post-5132619285915367132009-11-06T22:02:16.936-08:002009-11-06T22:02:16.936-08:00நிறைய எழுதி இருக்கிறீர்கள் ஆனால் விளங்க வில்லை,
ஐ...நிறைய எழுதி இருக்கிறீர்கள் ஆனால் விளங்க வில்லை,<br /><br />ஐயா அழுக்காறு - ஆறு அழுக்குகள் என்ன ?<br /><br />அதற்கே தாங்கள் விளக்கம் அளிக்கவில்லையே,<br /><br />ஆக்கம் - படைப்பு, நன்மை, பயன், வளர்ச்சி, முன்னேற்றம்.<br /><br />இதைப்போன்றே அதற்கும் ஆறு வகை அதையும் விளக்குங்கள்.<br /><br />(தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும்.)தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.com