Tuesday, February 16, 2010

திருக்குறள்: 209 (அன்பன் எனின் கொஞ்சமும் தீங்கு செய்யாதே...)

அதிகாரம்

: 21

தீவினையச்சம்

திருக்குறள் : 209

அன்பன் எனின் கொஞ்சமும் தீங்கு செய்யாதே...

In English

தன்னைத் தான் காதலன் ஆயின், எனைத்து ஒன்றும்
துன்னற்க, தீவினைப் பால்!

பொழிப்புரை :
தன்னைத் தான் காதலிப்பவன் என்றால் தீவினைச் செயலின் பால் எதை ஒன்றையும் பொருந்தி நிற்காதீர்.

விரிவுரை :
ஒருவன் தன்னைத் தான் காதலிப்பது உண்மை ஆனால், எவ்வளவுதான் சிறியதாயினும் பிறருக்குத் தீவினை செய்வதன் பால் ஒன்றிச் சார்ந்து நிற்கக் கூடாது.

அன்பு என்பதைத் தனக்கே உணரத் தெரிந்தவன் எவனோ, பிறர் பால் சிறிதளவேனும் தீங்கு செய்ய ஒப்பலாமா? பிறர் பொருட்டுச் செய்யும் துன்பம் தனக்கே நிகழ்வது போலும் அல்லவா? மேலும் பிறர்பால் செய்விப்பவைத் தம்மைத் தானே பிறகு தாக்கும். இதை அறிந்து தன்னைக் காதலித்துப் போற்றுபவன் ஒருபோதும் தீவினை செய்தல் தகாது என்பது பொருள்.

பொது நலத்தைக் கருதாதே போயினும், பிறர் துன்பத்தைக் கருதாதவரே ஆயினும், தன்னைத் தானே காதலிக்கும் சுய நலத்திற்காகவாது பிறருக்குத் தீங்கினை அஃது எவ்வளவு சிறிய அளவினதாயினும் செய்யாதீர் என்பது உட் பொருள்.

தன்னை உண்மையில் காதலிப்பவன், பிறரையும் உலகையும் காதலிக்காமல், நல்லனவற்றையே அனைவருக்கும் விரும்பாமல் தாம் முழுமை அடைவதில்லை.

குறிப்புரை :
நல்லவற்றைத் தனக்கு விரும்புபவன் தீங்கினை யார் மாட்டும் கிஞ்சிற்றும் செய்தல் தகாது.

அருஞ்சொற் பொருள் :
எனைத்து ஒன்றும் - எதை ஒன்றையும்
துன்னற்க - பொருந்தாதீர், சேராதீர், செறிந்து நிற்காதீர்

ஒப்புரை :

திருமந்திரம்: 754
சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற்
கழல்கண்ட போம்வழி காணவல் லார்க்குக்
குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே

திருமந்திரம்: 755
கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்
சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில்
ஆத்தனு மாகி யலர்ந்திரு மொன்றே

திருமந்திரம்: 756
ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடுஞ்
சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற்
குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே

திருவாசகம்:
5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)

1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை)
உழிதரு காலுங் கனலும் புனலொடு மண்ணுவிண்ணும்
இழிதரு காலமெக் காலம் வருவது வந்ததற்பின்
உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையக்
கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பேவனே. 12

பட்டினத்தார். பொது: 34
சுரப்பற்று வல்வினை சுற்றமும் அற்றுத் தொழில்களற்று
கரப்பற்று மங்கையர் கையிணக் கற்றுக் கவலையற்று
வரப்பற்று நாதனை வாயார வாழ்த்தி மனமடங்கப்
பரப்பற்றி ருப்பதன் றோ? பர மா! பரமானந்தமே!

ஔவையார். ஆத்திசூடி:
87. மனந்தடு மாறேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்

ஔவையார். மூதுரை:
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25

ஔவையார். நல்வழி:
பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும். 14

***

In English:

Chapter : 21

Fear for Evil Deeds

Thirukkural : 209

Lover means commit not even the smallest
evil deed...




In Tamil

thannaith thAn kAthalan Ayin, enaiththu onRum
thunnaRka, thIvinaip pAl!

Meaning :
That who loves thyself, let not stand support on any evil deed however small it is.

Explanation :

If one loving one's own self is true then one shall not endorse and support to commit evil deed on others however small it is.

That which can understand what love is all about for the self, can ever think of corroborating evil to others even on the smallest count? The inflicting affliction upon others, is it not like one on the self? Also is it not whatever committed on others that which affects the self later? By comprehending all these that who loves thyself should never perform any evil deed is the intended meaning here.

Even if one not thinks on common goodness, or not thinks on the others affliction, at least for the sake of selfish love on the self, should not commit any iota of evil deed on others is the implied meaning here.

That who truly loves oneself, without loving others and the world, and not wishing the goodness for all, never stands whole complete.


Message :
That who loves goodness for the self should never commit even smallest evil deed on others.

***

Monday, February 15, 2010

திருக்குறள்: 208 (விடாதே தொடரும் தீவினைக் கெடுதல்...)

அதிகாரம்

: 21

தீவினையச்சம்

திருக்குறள் : 208

விடாதே தொடரும் தீவினைக் கெடுதல்...

In English

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்தற்று.

பொழிப்புரை :
தீயவை செய்தாருக்கான கெடுதல், தன் காலடிக் கீழ் மறையாது தங்கித் தொடரும் நிழலைப் போன்றது.

விரிவுரை :
தீயவற்றைச் செய்தவருக்கான கெடுதல் என்பது அவர்தம் காலடியின் கீழ் அழியாது தொடரும் நிழலைப் போன்றது.

ஒளியிருக்கும் வரையில் நிழலும் தோன்றும். அதைப் போன்றே வாழ்வு இருக்கும் வரையிலும் செய்த தீவினைப் பாவம் அழியாதே தொடர்ந்து வருமாம்.

மனிதருக்கு வாழ்க்கை முழுவதும் காசில்லாமல் இயற்கையாகவே இலவசமாகக் கூடவே வருவது நிழலும், கவலையும் தான். அவை சில நேரங்களில் மறைந்தாலும் மீண்டும் ஒளியில் இருளாகத் தோன்றத்தானே செய்கின்றன.

உன்னை விட்டுப் போகமாட்டேன் எனக் காலுக்கடியில் அடம்பிடித்துச் சுற்றிக் கொண்டு நிற்கும் நிழலைப் போல, கர்மா எனும் பாவ வினைகள் வாழ்வைச் சுற்றிக் கொண்டு வெளிச்சம் பெறும் போதெல்லாம் கூடவே அவ்வப்போது இருளாய் வெளிப்பட்டு இடராய், நினைவாய், எதிர் வினையாற்றும் துயராய்த் துன்பமாய் தோன்றி நிற்கும். இவை ஒருவர் மரிக்கின்ற வரையிலும் பூரணமாய் ஒரு போதும் மறைவதே இல்லை.

ஆதலின் ஒருவர் தீவினையைச் செய்யாதே ஒழுகி நடந்தால் இவ்விதமான தொடர் இடர் வாராது என்பது இக்குறளின் மறை பொருள்.

முன் செய்த வினைகள் நம்மைத் தொடருவதை நாம் ஒன்றும் செய்ய இயலாது. ஏனென்றால் அவை ஏற்கனவே செய்துவிட்ட நிகழ்ந்து முடிந்த, இனித் திருத்த முடியாத நிகழ்வுகள். ஆனால் நடக்கும் நிகழ்வுகளை நாம் சரிவரச் செய்யலாமே. எனவே பிற்பாடு பாதகம் தாரா வகையில் தீவினைகளை அகற்றி நல்ல வினைகளை மேற் கொண்டு வாழுதலே அறிவுடைமை.

எனவே எப்போதும் நல்லவற்றையே எண்ணுவோம்; நல்லவற்றையே செய்வோமாக.

குறிப்புரை :
தீவினையால் வரும் கெடுதல் என்பது அடங்காது வரும் அவர் தம் நிழலைப் போன்றே ஒருவரை எப்போதும் தொடர்ந்து பற்றி நிற்கும்.

அருஞ்சொற் பொருள் :
வீயாது - அழியாது, நீங்காது, இறக்காது, மாறாது, ஓயாது, ஒழியாது
அடி - பாதம், மூலம், அடிப்பீடம், காலடி
உறை - தங்கு, தேங்கு

ஒப்புரை :

திருமந்திரம்: 751
ஓவிய மான வுணர்வை அறிமின்கள்
பாவிக ளித்தின் பயனறி வாரில்லை
தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே

திருமந்திரம்: 752
தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்று மகிழ்ந்துடல் ஒத்திடுங்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே

திருமந்திரம்: 753
பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குட னாதித்த னாறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே

திருவாசகம்:
5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)

1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை)
தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாது இறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம்
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம்
பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே. 9

பட்டினத்தார். பொது: 33
ஏதப்பட்டாய் இனி மேற்படும் பாட்டைஇ தென்றறிந்து
போதப்பட்டாயில்லை நல்லோரிடம் சென்று; புல் லறிவால்
வாதைப்பட்டாய்; மட மானார் கலவி மயக்கத்திலே
பேதப்பட்டாய்; நெஞ்சமே! உனைப்போல் இல்லை பித்தருமே!

ஔவையார். ஆத்திசூடி:
72. நேர்பட வொழுகு.

ஔவையார். கொன்றை வேந்தன்:
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது (மாலுமி)

ஔவையார். நல்வழி:
ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு. 12

ஔவையார். நல்வழி:
ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல். 13

***

In English:

Chapter : 21

Fear for Evil Deeds

Thirukkural : 208

Unceasingly continuing sin of evil deed...




In Tamil

thIyavai seythAr keduthal nizhal thannai
vIyAthu adi uRainthaRRu.

Meaning :
The evil for the sinners is like their own shadow resting at their foot, stays and continues for ever.

Explanation :

The evil and affliction for those who have committed evil deeds is like their own shadow dwelling at their own foot, never leaves but persists forever.

The shadow will appear as long as the light lasts. Same way as long as the life lasts for one the sin of one's evil deed endures upon.

For the human beings that which continues them forever free of cost by the nature is their own shadows and worries. Though they disappear now and then always they continue to appear as dark in their day of lights.

It is like the shadow which compulsorily persists coiling at their foot without leaving, the sins and evil of their committed evil deeds coil their life and show up and stay in their bright days as interruption, thought, affliction, pain or suffering. This continues throughout their life forever and never disappears completely.

One will not get such interruptions in life only if they have not committed any evil deed prior is the implied meaning here in this Kural.

We cannot do anything in this life for the prior sins following and bogging us. It is because they are already committed deeds and events and cannot be altered ever again. However we have the option to do our current deeds and events properly. Is it not? Therefore we must act such that no aftermaths affect us, hence to live by avoiding the evil deeds and performing only the good deeds are the true wisdom in life.

Therefore let us always think only the good and do only the good.


Message :
The evil which comes for one for the evil deeds made is like one's shadow persists at one's own foot, remains and continues perpetually.

***

Saturday, February 13, 2010

திருக்குறள்: 207 (செய்வினைப் பாவம் நின்று கொல்லும்...)

அதிகாரம்

: 21

தீவினையச்சம்

திருக்குறள் : 207

செய்வினைப் பாவம் நின்று கொல்லும்...

In English

எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை
வீயாது, பின் சென்று, அடும்.

பொழிப்புரை :
[வேறு] எத்தகையப் பகையை உடையவரும் அதனின்று தப்பிவிடுவர்; [ஆனால் தீ] வினைப் பகை [அழியவே] அழியாது தொடர்ந்து பின் சென்று வருத்தும்.

விரிவுரை :
எவ்வளவு கொடிய பகையை உடையவரேனும் அதனின்று எவ்விதமேனும் முயற்சித்துத் தப்பித்து விடுவர். ஆனால் ஒருவர் செய்த தீ வினையால் விளைந்த பகைமை எனும் பலன் அழிக்க இயலாதவாறு, அவரைத் தப்பிக்க விடாது, பின் சென்றுத் துன்புறுத்தி வருத்தி நிற்கும்.

அதாவது ஒருவர் வேறு எப்படிப்பட்டப் பகையினின்றும் அல்லது இடர்களிலிருந்தும் முயற்சித்துத் தப்பிக்க இயலலாம்; ஆனால் அவர் பிறர் பால் செய்த தீ வினைப் பயனால் விளைந்த பகைமையிலிருந்து தப்பிக்கவே முடியாத வகையில் அஃது அழியாது நின்று அவரைப் பிற்பாடு வருத்தித் துன்புறுத்திக் கொல்லுமாம்.

வினையாலன்றி வருகின்ற எந்தப் பகையையும் இடரையும் ஒருவர் எவ்விதமேனும் வென்றோ அன்றில் தப்பித்தோ தவிர்க்கலாம். ஆனால் முன் வினைகளிலிருந்தும் பிறருக்குச் செய்த செய் வினைகளிலிருந்தும் தப்புவதற்கு வழியே இல்லை. “ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்” . எனவே செய்கின்ற ஒவ்வொரு வினையையும் சீர் தூக்கி நல்லதையே செய்ய வேண்டும் என்பது இக்குறளின் உட் கருத்து.

செய்து விட்ட வினையைத் திருத்துவது கடினம். சமயங்களிலில் இயலாமலே கூடப் போகலாம். ’விதியை மதியால் வெல்ல முடியாது’, ‘எல்லாம் விதிப்படித்தான் நிகழும்’ என்பவை, முன் வினைகளைத் திருத்த இயலாது என்பதன் சுருக்கமே. உதாரணத்திற்குத் தவறி ஒரு கொலையைச் செய்து விட்டால், மீண்டும் உயிர் தர இயலுமா?

ஆதலின் எப்போதும் தீய வினையைச் செய்வதில்லை எனும் கொள்கையுடன், சிந்தித்துப் பணி ஆற்றினால் இவ்விதமான மாற்ற இயலாத குற்றங்களிலிருந்து ஒருவர் தப்பிக்கலாம்.

எப்போதும் கருமங்களை எண்ணித் தெளிந்து துணிந்து, துவக்க வேண்டும். நடக்கும், நிகழும் நிகழ்வுகளை நாம் மதியால் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். ஒருவேளை அவை விதி வசத்தால் மாறான பலனைத் தர நேரினும் கூட நாம் மாறாது நல்லதை மட்டுமே செய்தலை ஒழுகுதல் வேண்டும்.

முன், பின் வினைகள் என்பதில் முன் வினைகளின் பலனையே விதி வசத்தால் ஆனது என்பது. பெற்றோர், உற்றார், சுற்றம், இற்றைய வாழ்வின் பலன்கள் எல்லாவற்றிலும் விதியின் தாக்கம் உண்டு. ஒவ்வொரு செயல் பாட்டின் முடிவிலும் முன் வினைகளின் தாக்கம் பிரதிபலிக்கும். அவையே எதிர் பாராத முடிவுகள் தோன்றுவதற்கான காரணமும் ஆகும்.

எனவே நன்மையே செய்வோருக்கு, முன் வினைகளிலும் நன்மை செய்திருப்போருக்கு எல்லாமே கூடி வரும். இன்பங்கள் நிறையும்.

”வினை விதைத்தவன், பலன்களை அடையாமல் ஓடித் தப்பிக்க முடியாது”. “முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே விளையும்” , என்பதனால், செய்யும் ஒவ்வொரு செயலையும் எப்போதும் சீர் தூக்கிப் பார்த்து நல்லனவற்றை மட்டுமே செய்தல் அன்றிச் செய்வித்தல் வேண்டும்.

குறிப்புரை :
ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அஃது அழியாது நின்று அவரைப் பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும்.

அருஞ்சொற் பொருள் :
உற்றார் - சிறப்பு அடைந்தவர்கள், உறவினர், நண்பர்
உய் - உயிர் வாழ், நற்கதி அடை, துன்பம் நீங்கப் பெறு, இருள் நீக்கு
வீயாது - அழியாது, நீங்காது, இறக்காது, மாறாது, ஓயாது, ஒழியாது
அடும் - காய்ச்சும், சமைக்கும், வருத்தும், அழிக்கும், கொல்லும், உருக்கும், குத்தும்.

ஒப்புரை :

திருமந்திரம்: 435
தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே

திருமந்திரம்: 667
நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடி ஒருகை மணிவிளக் கானதே

திருமந்திரம்: 744
மனைபுகு வீரும் மகத்திடை நீராடி
எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு
வினையறி யாறு விளங்கிய நாலே

திருவாசகம்:
4. போற்றித் திருஅகவல் :
(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா)

அன்பு எனும் ஆறு கரை அது புரள
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண் துளி அரும்ப
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
கைதரவல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி 90

பட்டினத்தார். பொது:
விட்டேன் உலகம்; விரும்பேன் இருவினை; வீணருடன்
கிட்டேன்; அவர் உரை கேட்டும் இரேன்; மெய் கெடாத நிலை
தொட்டேன்; சுகதுக்கம் அற்றுவிட்டேன்; தொல்லை நான் மறைக்கும்
எட்டேன் எனும்பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே! 24

என் செயலாவது யாதொன்றும் இல்லை; இனித் தெய்வமே!
உன் செயலே யென்று உணரப் பெற்றேன்; இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை இறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே! 22

அழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன? ஆவதில்லை
தொழுதால் பயனென்ன? நின்னை ஒருவர் சுடவுரைத்த
பழுதால் பயனென்ன? நன்மையும் தீமையும் பங்கயத் தோன்
எழுதாப்படி வருமோ? சலியாதுஇரு என்ஏழை நெஞ்சே! 37

ஔவையார். ஆத்திசூடி:
59. தூக்கி வினைசெய்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

ஔவையார். மூதுரை:
எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22

ஔவையார். நல்வழி:
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 8

ஔவையார். நல்வழி:
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்? - வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்! 17

***

In English:

Chapter : 21

Fear for Evil Deeds

Thirukkural : 207

The sin of evil deed afflicts undying...




In Tamil

enaip pakai uRRArum uyvar; vinaip pakai
vIyAthu, pin senRu, adum.

Meaning :
Whatever enmity one have may escape from it; but not from the sin of evil deed done as that would never die but afflict only after.

Explanation :

Whatever and however bad the enmity one has may strive and escape from it somehow. But one cannot from the sins of committed evil deeds on others as that would stay forever undying and afflicting with no room for them to escape.

It means that one can strive and escape somehow from the enmity or troubles and problems cropping up in life without much damage. But one cannot from the committed sins of evil deeds to others as that won't allow escaping but will give only hardships and afflictions later without any way to destroy it.

The enmity and any trouble coming out not though the past deeds may be escaped or redressed. But there is no way for one to escape one's own prior deeds. The prior deed reaps and feeds. Therefore one must weigh one's each and every action and should carry out only the good ones is the implied meaning here in this Kural.

It is very difficult to correct the already committed deed. Sometimes it may not be possible to rectify at all. "The destiny cannot be changed", "All will happen as per the fate" and all such are only summarizes that the prior deeds cannot be altered for its results. For example, after committing a murder, Is it possible for anyone to provide back the life?

Therefore with the firm mind that not to do any evil deeds as the policy, if one thinks and does one's work at always, one can escape from committing such unchangeable offenses.

Always we must think well, plan and start any work. We must address thoughtfully and act on the current events and happenings. By any chance of the fate even if they result unfavorably, we must not change from our stand but only should carry on with only the good deeds and virtues.

Among the deeds of the prior and past the prior one is what also known as the fate. Parents, relatives, environment, the result of current life deeds all have the impact of fate. It reflects at the end of each and every deed. In fact it is the actual reason for any improper results.

Therefore for those who do only good deeds, for those who have done good deeds prior all will happen favorably. Happiness gets filled.

It is because "That who sowed the evil deed cannot escape from its fruits." "Whatever done in the forenoon only results in the afternoon", one should really weigh one's each and every action and perform or make others to perform only the good deeds at always.


Message :
One can never escape from the sin of evil deed committed. That would ever stay undying to afflict and suffer later.

***