Showing posts with label kedu. Show all posts
Showing posts with label kedu. Show all posts

Wednesday, February 17, 2010

திருக்குறள்: 210 (கெடான், கேடு செய்யான்...)

அதிகாரம்

: 21

தீவினையச்சம்

திருக்குறள் : 210

கெடான், கேடு செய்யான்...

In English

அருங் கேடன் என்பது அறிக - மருங்கு ஓடித்
தீவினை செய்யான் எனின்!

பொழிப்புரை :
கேடு அற்றவன் என்பது அறிக - [ஒருவன்] தடம் வழுவித் தீவினை செய்யாதவன் என்றால்.

விரிவுரை :
ஒருவன் நன்னெறித் தடம் வழுவித் தீவினை செய்யாதவன் என்றால், அவன் கேடு ஏதும் அற்றவன் என்று அறிவில் தெளியலாம்.

நல்வழித் தவறி பிறர் பால் தீவினை செய்யாதவனிற்குக் கேடு ஏதும் இல்லை என்பது உட்பொருள்.

தீவினை செய்யாது நன்னெறிகளில் நடப்போரே மக்களால் மகான்களாக, புனிதர்களாகப் போற்றிக் கொண்டாடப் படுகின்றார்கள். பிறருக்கு இன்னல் விளைவிக்காதவரையே பிற உயிர்களும் நாடிச் செல்லும். அன்பும், ஆதரவும் தரும் இதயங்களின் அரவணைப்பில் தான் உயிர்கள் இன்பம் பெறுகின்றன. கேடு இல்லா மனிதர்கள் நன்மையே செய்யாது போயினும் அவர் தம் இயல்பால் நன்மை செய்தவர்களாகவே ஆவார்கள். அத்தகையோரால் தான் இவ்வுலகம் நிலைத்து நிற்கின்றது.

நன்மக்கள் நிறைந்த இடத்தில் வாழும் வாழ்க்கை என்பதே கூட ஒருவருக்கு முன் செய்த நல் வினைப் பயனால் விளைவதே ஆகும்.

தீவினை செய்யாதே நன்னெறி நின்று கேடு அற்றவர்களாக உய்வோமாக.

குறிப்புரை :
நல் வழித் தவறிப் பிறருக்குத் தீங்கு செய்யாதவனிற்குக் கேடு ஏதும் இல்லை என்று அறிக.

அருஞ்சொற் பொருள் :
அருமை - அரியது, இல்லாமை, இன்மை
மருங்கு - வடிவம், எல்லை, சுவடு, தடம், செல்வம், நூல், இடை, விலாப்பகுதி, பக்கம்

ஒப்புரை :

திருமந்திரம்: 785
மனையிலஒன் றாகும் மாதமு மூன்றுஞ்f
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையற வோங்கி வௌiச்செய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே

திருமந்திரம்: 798
தெக்கண மாகும் வியாழத்துச் சேர்த்திசை
அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே

திருமந்திரம்: 806
நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வௌiயாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே

திருவாசகம்:
5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை)

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. 24

பட்டினத்தார். பொது: 36
விடக்கே! பருந்தின் விருந்தே கமண்டல வீண நிட்ட
முடக்கே! புழுவந்து உறையிடமே! நலம் முற்றும் இலாச்
சடக்கே! கருவி தளர்ந்துவிட்டால் பெற்ற தாயுந்தொடாத்
தொடக்கே! உனைச் சுமந்தேன் நின்னின் ஏது சுகமெனக்கே?

ஔவையார். ஆத்திசூடி:
101. வீடு பெறநில்.
105. வேண்டி வினைசெயேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்

ஔவையார். மூதுரை:
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 30

ஔவையார். நல்வழி:
நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான். 21

***

In English:

Chapter : 21

Fear for Evil Deeds

Thirukkural : 210

Doer of no evil will go un-ruined...




In Tamil

arung kEdan enpathu aRika - marungku Odith
thIvinai seyyAn enin!

Meaning :
That who slips not the virtuous path and commits no evil is to be known as the one free from ruins.

Explanation :

When one does not slip from the good virtuous path and carry out not any evils, then can be comprehended that such is free from ravages.

The implied meaning is that one who does not slip from good virtues and commit not any evils to others will not get ruined.

Those who live in the good virtues and do not commit any evil deeds are only considered by the people as the great souls and divine beings and thus get celebrated. All the livings only go to those who do not do any harm to others. Living beings enjoy only through the love and supporting hearts. Those who considered as free from ruins even if they do not any good deeds, still they are considered only as good and harmless due to their basic nature and character. This world stands stable still only due to such noble and great souls.

Even living with the community of good people is perhaps possible to one only through one's previous good deeds,

Let us prosper through the path of good virtues and not do any evil deeds to anyone.


Message :
Know that there is no any disaster for that which does not slip from the virtuous path and does not do any evils to others.

***

Monday, February 8, 2010

திருக்குறள்: 204 (கெடுவான் கேடு நினைப்பான்...)

அதிகாரம்

: 21

தீவினையச்சம்

திருக்குறள் : 204

கெடுவான் கேடு நினைப்பான்...

In English

மறந்தும் பிறன் கேடு சூழற்க! சூழின்
அறம் சூழும், சூழ்ந்தவன் கேடு.

பொழிப்புரை :
மறந்தும் [கூட] பிறன் கேடு அடையச் சூழ்ச்சி செய்யாதீர்! [அவ்வாறு] சூழ்ச்சி செய்தால், [நல்] அறம் சூழ்ச்சி செய்து விடும்; சூழ்ச்சி செய்தவன் கேடு பெற.

விரிவுரை :
மறந்தும் பிறர் கேடு அடையச் சூட்சி செய்யாதீர். அவ்வாறு சூட்சி செய்தால், சூட்சி செய்தவன் கேடு அடைய நல் அறம் சூட்சி செய்து விடும்.

நல் அறம் என்பது மறைப் பொருளாக, தெய்வீக சக்தியாக, நம்பிக்கைகளின் உருவகமாக, இயற்கையின் இயக்கச் சக்தியாக இங்கே உருவகிக்கப் பட்டுள்ளது. ஆதலின் அத்தகைய நல் அறச் சக்தி, ‘கேடு நினைப்பவன் கெட்டுப் போகும்படி’ செய்து விடும். ஒருவனுக்குக் கெட்ட எண்ணமானது பீடித்த உடனேயே நல்லறம் அவனை விட்டு நீங்கி விடுவதோடு மட்டுமல்லாது அவனெண்ணும் கெட்ட எண்ணங்களை அவனுக்கே முதலில் நல்கும் படி சூட்சியைத் துவங்கி விடுகின்றதாம்.

உயிர்களாகிய நாம் இயற்கை எனும் மாபெரும் சக்தியின், பரம் பொருளின் அங்கங்களே. அம் மாபெரும் காந்த சக்தியின் சிறு துகள்களே. எனவே அத்தகைய துகள்களாகிய நாம் ஒருங்கிணைந்து, நல் எண்ணம் எனும் ஒரு முகத்தோடு ஒன்றிப் பயணித்தால் மாத்திரமே இயற்கையின் மொத்த ஆற்றலின் பலன்களிலும் பங்கு பெற இயலும். அவ்வாறு நல்லெண்ணத்தோடும், நல் ஒழுக்கத்தோடும் திகழ்ந்தால்தான் அனைத்து வழிகளிலும் சாத்தியங்கள் நிகழும்.

எதிர்வினையாற்றுவதும், எதிர் மறை எண்ணங்களும் இயற்கைச் சக்தியின் இயல்பான ஈர்ப்புக்கு எதிரானவை. எனவே அவை நல்ல பலன்களையும், இசைவுச் சக்தியைத் தராமலிருப்பது மாத்திரமல்ல, எதிர் சக்தியையும், தடங்கலையும், எதிர் விளைவுகளையும் மாத்திரமே விளைவிக்கும். கேடு செய்ய நினைக்கும் எண்ணங்களும், திட்டங்களும், சூட்சிகளும், செயல்களும் எதிர் மறையானவை. எனவே அஃது கெட்ட பலன்களையே பன் மடங்கில் விளைவிக்கும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப - எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்.
(குறள்:666 )

என்பது கெட்ட எண்ணத்திற்கும் தான். மனிதர்கள் எண்ணும் எண்ணங்கள் ஆழ்மனத்தில் நல்லவை, கெட்டவை என்ற பாகு பாடின்றி விதைக்கப் பெற்று அவையே வாழ்வாகின்றது. மனிதர்கள் அவரவர் எண்ணியதையே பெறுகின்றார்கள் என்பது உளவியல் உண்மை. வினை விதைத்தவனே வினையை அறுப்பான். ஆதலாலும் பிறர் கெட எண்ணுகின்றவன் தானே கெட்டொழிவான் என்பதே இயற்கை விதி.

எனவே மறந்தும் பிறருக்குக் கெடுதல் விளைவிக்க எண்ணுதல் கூடாது என்பது இக் குறளின் கருத்து.

நல்லெண்ணங்களே நன்மைகளை விளைவித்து ஒருவரை முன்னுக்கு எடுத்துச் செல்லும். ஆகவேதான் எப்போதும் நேர்மறை மற்றும் நல்லெண்ணங்களே கொண்டு திகழ வேண்டும் என்பது அவசியம் என்று நன்னூல்களும், பெரியோர்களும், சாதனையாளர்களும் வலியுறுத்திக் கூறுகின்றார்கள்.

ஆக நல் வாழ்வு வேண்டுமாயின் வாழ்வில் மறந்தும் பிறருக்குக் கேட்டை எண்ணாதீர்.

குறிப்புரை :
தலையாய அறிவென்பது தமக்குத் தீயவை செய்தவருக்கும் கூடத் தீமை செய்யாது இருத்தலே.

அருஞ்சொற் பொருள் :
சூழ் - சூழ்ச்சி செய், கூடிச் சதி செய், ஆராய், கலந்தாராய், எண்ணு, உருவாக்கு, செய், வரை, திட்டமிடு, ஆலோசனை, கலந்தாய்வு, ஆராய்ச்சி, சுற்று, போர்த்து, உறையிடு, சுற்றி மொய், சுற்றியமை, மூடு, கவி

ஒப்புரை :

திருமந்திரம்: 313
கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்
கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே.

திருமந்திரம்: 314
நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.

திருமந்திரம்: 430
தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தாங்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே

திருவாசகம்:
1. சிவபுராணம் :

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

பட்டினத்தார். கைலாயம்: 3
சினந்தனை யற்றுப் பிரியமும் தான் அற்றுச் செய்கையற்று
நினைந்ததும் அற்று, நினையா மையுமற்று, நிர்சிந்தனாய்த்
தனந்தனி யேயிருந்து ஆனந்த நித்திரை தங்குகின்ற
அனந்தலில் என்றிருப்பேன் அத்தனே! கயிலாயத்தனே!

ஔவையார். ஆத்திசூடி:
42. கோதாட் டொழி. (பாவத்தை)

ஔவையார். கொன்றை வேந்தன்:
63. புலையும் கொலையும் களவும் தவிர்

ஔவையார். மூதுரை:
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

ஔவையார். நல்வழி:
உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்
கடல் ஓடி மீண்டு கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு. 6

***

In English:

Chapter : 21

Fear for Evil Deeds

Thirukkural : 204

Evil plotter only gets ruined...




In Tamil

maRanthum piRan kEdu sUzhaRka! sUzhin
aRam sUzhum, sUznthavan kEdu.

Meaning :
Even by mistake plot not the ruin for another. Thus If plotted so the Good virtue will plot the ruin for the plotter.

Explanation :

Even by mistake never plot on another to get ruined. If plotted so, the good virtue plots on the plotter to get ruined.

The good virtue is metaphorically mentioned here for the mystical, natural and the power of the God and the beliefs. Therefore such power of the good virtues will make only the plotter of ruins to get ruined. The good virtues not only leaves instantly one on one's conception of bad thinking, but also starts working against the evil thinker to grant only the bad very firstly to himself.

We all living beings are just part of the nature and great power. And small particles of that great natural magnetic power. Therefore only when we conceptually join and travel together with facing the same direction of that magnetic field of the good virtues and positive thinking, we will be able to participate in its effects and results in totality. Only when we nurture good thinking and live in good virtues, prosperity and success will flow from all avenues.

Negative thinking and evil deeds are against the natural law and in opposite to the natural magnetic power's attracting field. Therefore not only that they cannot provide good results and cooperative power but also will create only opposite and negative power, blockades and unpleasant, evil and ill results. The bad and evil thinking, ruining plots, conspiracies and deeds are only negative and damaging. Therefore they can only result the bad, evil and ill things in multitudes.

eNNiya eNNiyAngu eythuba - eNNiyar
thiNNiyar Akap peRin.
(Kural: 666)

also means for the bad thinking. All the thinking of human beings gets registered in their subconscious mind without any variance to good or bad and becomes later their actual life. It is also the Psychological fact that the human beings only get whatever they have thought or registered in their subconscious mind. Whatever sowed only will reap. Hence, the evil plotter gets only ruined himself. And that is nothing but only the law of nature.

Therefore even by mistake one should never think of doing evil to others is the message by this Kural.

Only good thinking can result in goodness and can take forward the thinker to the prosperity. This is the same reason that all good books, sages, wises and the winners insist that it is must and necessary for one to have the good and positive thinking at always.

Therefore if the good life is that you wish for yourself then never think of evil or plot any ruin for others even by mistake forever in your life.


Message :
Never plot ruin for others; Aware that If plotted so the ruin is only for the self.

***

Monday, July 6, 2009

திருக்குறள்: 32

அதிகாரம்

:

4 அறன் வலியுறுத்தல் திருக்குறள்

:

32


அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இலை; அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.


பொழிப்புரை (Meaning) :
அறத்தை விஞ்சிய ஆக்கமும் இல்லை; அதனை ஒழுக மறப்பதைக் காட்டிலும் கேடும் இல்லை.


விரிவுரை (Explanation) :
மனிதனுக்கு அறத்தை ஒழுகுவதினால் விளையும் ஆக்கத்தை மீறியது எதுவும் இல்லை. அவனுக்கு அறத்தைப் பேண மறப்பதினால் விளையும் கேட்டை மீறயதும் எதுவும் இல்லை. எனவே அறம் எனும் ஒழுக்கத்தை மனிதன் வழுவாது, தவாறு ஒழுக வேண்டியது அவசியமாகின்றது.

வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சான்றோராலும், ஆன்றோராலும் உய்த்துணர்ந்து செய்யப்பட்ட ஒழுங்கு முறைகளே அறம் எனப்படும் நெறிகள். அவை
ஒழுகப்படாது போனால் வாழ்வு கெடும் என்பதும் ஒரு நெறியே. உதாரணத்திற்கு தீவிரவாதம் என்பது அறநெறி அல்ல, ஆனால் அந்த முறையைப் பற்றுபவர்களால் அனைவருக்கும், அவருக்குமே அது கேட்டைத்தான் உண்டாக்கும். அவை ஆக்கபூர்வமான வழிகளல்ல.


குறிப்புரை (Message) :
அறத்தை ஒழுகினால் அதுவே மேன்மை; ஒழுகாவிடின் அதுவே பெருங் கேடு.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஊங்கு - விஞ்சிய, மீறிய, தாண்டிய
ஆக்கம் - செயல்பாடு, தொழில், ஒழுகுதல்.


ஒப்புரை (References) :

ஔவையார். நல்வழி: 1
புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயட் தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல்.

ஔவையார். நல்வழி: 22
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்
காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.

சிவவாக்கியர். அறிவு நிலை: 515
யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.

பட்டினத்தார். முதல்வன் முறையீடு:
புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமய்க் கழிந்தநாள் போதாதோ? 21

கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ? 22

பூதமொடு தேவருமாய்ப் போன்நாள் போதாதோ?
வேதனை செய் தானவராய் வீந்தநாள் போதாதோ? 23

அன்னை வயிற்றில் அழிந்தநாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்தநாள் போதாதோ? 24

தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ?
சேயாய்ப் பொருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ? 25

நோய் உண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ?
பேய் உண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ? 26

ஊனவுடன் கூன்குருடாய் உற்றநாள் போதாதோ?
ஈனப் புசிப்பில் இளைத்தநாள் போதாதோ? 27

பட்டகளையும் பரதவிப்பும் போதாதோ?
கெட்டநாள் கெட்டேன் என்று கேளாதும் போதாதோ? 28

நில்லாமைக்கே அழுது நின்றநாள் போதாதோ?
எல்லாரும் என்பாரம் எடுத்தநாள் போதாதோ? 29

காமன் கணையால் கடபட்டல் போதாதோ?
ஏமன் சுரத்தால் இடியுண்டல் போதாதோ? 30


***