Showing posts with label சிறப்பு. Show all posts
Showing posts with label சிறப்பு. Show all posts

Thursday, August 20, 2009

திருக்குறள்: 75

அதிகாரம்

: 8

அன்புடைமை

திருக்குறள்

: 75
Chapter : 8

Love

Thirukkural

: 75


"அன்புற்று அமர்ந்த வழக்கு" என்ப-வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

பொழிப்புரை :
”அன்புற்று அமர்ந்ததன் இயல்பு” என்பதே, வையகத்தில் இன்புற்றோர் எய்தும் சிறப்பு.

விரிவுரை :
உலகத்தில் இன்புற்றவர்கள் அத்தகைய சிறப்பைப் பெற்றதன் காரணம், அவர்கள் அன்பொடு இருந்ததன் இயல்பே.

அன்பொடு திகழ்ந்ததின் விளைவே வையகத்தில் இன்புற்றவர் பெற்ற சிறப்பு என்பது குறிப்பு.

துன்பமிலா இன்பம் எனும் உணர்வு நேசிப்பதிலும், நேசிக்கப்படுதலிலும், கவனித்தலிலும், கவனிக்கப்படுதலிலும், தெளிதலிலும் , பகிர்தலிலும், கொடுதலிலும், விடுதலிலும், ஆங்கே மற்றுமோர் உயிரை அன்புறத் தொடுதலிலும் மட்டுமே உண்டு. இவையெல்லாம் அன்பு கொண்டவருக்கு மாத்திரமே சாத்தியம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

மெய் அன்பொடு தயை கூர்ந்து தவத்தில் ”அமர்ந்த” அறத்தோரும், தவத்தோரும், அமரரும், முனிவரும் ஈண்டு பெறுவது இன்பம் எனும் சிறப்பன்றி வேறெது? அச் சிறப்பு அவர் மற்ற உயிர்களிடத்தும் மாறா அன்பு கொண்டமையால் தானே?

குறிப்புரை :
அன்பொடு திகழின் இன்புறும் வாழ்வு.

அருஞ்சொற் பொருள் :
வழக்கு - இயல்பு

ஒப்புரை :

திருமந்திரம்: 281
இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே.


திருமந்திரம்: 285
கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.


திருமந்திரம்: 286
நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று
உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே.


திருமந்திரம்: 453
இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைத்தொழிந் தானே.

***

In English: (Thirukkural: 75)

"anpuRRu amarntha vazhakku" enpa-vaiyakaththu
inpuRRAr eythum siRappu.

Meaning :
Bliss on the earth is thus the fruit for a loving life.

Explanation :

The reason for being special in the state of happiness for them in this world is that they have stayed with the Love always.

Endowed with Love has resulted them the happiness in this world is the message.

The Bliss, the emotion of un-abiding happiness, is there only in to Love and to Love by, to care and to care by, in sharing, in giving, in leaving, and also in touching with the Love. Is it necessary to say that all these are possible only for those who possess the Love?

Is it not that even those who took the penance, ascetics, saints and sages all they try and attain the meritorious state of Bliss? Is it not that all for their stable and true Love towards other beings?


Message :
Loving heart gets blissful Life.

***



Wednesday, August 19, 2009

திருக்குறள்: 74


அதிகாரம்

: 8

அன்புடைமை

திருக்குறள்

: 74
Chapter : 8

Love

Thirukkural

: 74

அன்பு ஈனும், ஆர்வம் உடைமை; அது ஈனும்
”நண்பு” என்னும் நாடாச் சிறப்பு.

பொழிப்புரை :
அன்பு ஈன்று தரும் ஆர்வம் உடைமையை; அது ஈன்று தரும் ”நட்பு” எனும் தேடாச் சிறப்பை.

விரிவுரை :
அன்பு பெற்றுத் தரும் ஆர்வம் உடைமையை; அந்த ஆர்வம் உடைமை பெற்றுத் தரும் “நட்பு” என்கின்ற முயற்சித்துத் தேடாத சிறப்பை, ஆச்சர்யங்களை.

அன்பு எதிலும் ஆர்வத்தை; விருப்பத்தை உண்டாக்கும். அதன்பால் தேடாமலேயே சிறப்பான நட்புக்களும் உண்டாகும்.

அன்பு என்பது என்பையும் பிறருக்கு ஈயும் தன்மை கொண்டது என்று முன்னர் சொல்லியமையால், அது பொருட் பற்றற்ற தன்மை கொண்டு விளைவதால், ஒருவேளை அவருக்கு வாழ்வில் ஆர்வம் இன்மையோ என்று ஐயம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே, இங்கே வாழ்வில் ஆர்வம் கொள்ளுதலையும் தரும் சிறப்பு அன்பிற்கு உண்டு என்கின்றார்.

ஆர்வம் என்பத்திற்கும் ஆசைக்கும் வேறுபாடு உண்டு. எதையும் அறிய விரும்புவது; விளைவது ஆர்வம். எதையும் தனக்கென வேண்டுவது ஆசை.

ஒருவரின் பால் அன்பு கூர்ந்தால், அவரைப் பற்றி அறிய ஆர்வம் கிளைத்தெழும். அந்த ஆர்வத்தின் மேலீட்டினால் அவரைச் சென்று அறியவும், அதனால் அவர் மட்டுமல்ல, பல நட்புக்களும் கிளைத்தெழும். சமயங்களில், முயற்சித்துத் தேடி விளையாத நட்பே மிகச் சிறந்ததாக, ஆழமானதாக அமைந்துவிடுவதும் உண்டுதானே.

எனவே அன்பு பிறரின்பால் வழங்குதலைக் கொண்டிருந்தாலும் அது ஆர்வத்தையும், ஆழ்ந்த நட்பையும் பெற்றுத் தர வல்லது.

நட்பு என்பதே பிற அன்பை நாடித் தேடி ஓடும் ஓர் ஆர்வம் தானே. அன்பைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டும் ஒரு வேட்கைதானே. அன்புடைமை, ஆர்வமுடைமை செய்து நட்புடைமையைப் பெற்றுத் தரும்.

பள்ளிக்குச் சென்று திரும்பும் குழந்தைகளைப் பெற்றோர் சென்று எதிர்கொண்டு அழைக்கும்போழ்து பாருங்கள் மக்களின் ஆர்வத்தையும், அதன்பால் ஏற்படும் துள்ளலையும், தாவலையும், பள்ளிச் செயலை விளக்கும் துடிப்பையும், தோழர்களை, நண்பர்களை அறிமுகம் செய்யும் பெருமையையும். பல சமயங்களின் அத்தகைய பள்ளித் தோழர்களின் மூலம் குடும்பங்கள் நட்புக் கொள்வதும், ஆச்சரியமான புது நட்புக்கள் மலருவதும் நாம் காண்பதுதானே.

குறிப்புரை :
அன்பு ஆர்வத்தையும் தொடர்ந்து ஆழ்ந்த நட்பையும் பெற்றுத் தரும்.

அருஞ்சொற் பொருள் :
நண்பு - நட்பு, நல்லன்பு, நல்லன்பும் பண்பும் கொண்ட உறவு, சினேகம்.
ஈனுதல் - பெறுதல்

ஒப்புரை :

திருமந்திரம்: 282
அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.


திருமந்திரம்: 416
அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே


திருமந்திரம்: 442
உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சு மவனே சமைக்கவல் லானே

ஔவையார். மூதுரை: 20
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரு முண்டு.


பட்டினத்தார்: 20
வான்றேடு மறையேயோ மறைதேடும் பொருளையோ
ஊன்றேடும் உயிரேயோ உயிர்தேடும் உணர்வேயோ
தான்தேட நான்தேடச் சகலமெலாம் தனைத்தேட
நான்தேடி நான்காண நானாரோ நானாரோ.


***

In English: (Thirukkural: 74)

anpu Inum, Arvam udaimai; athu Inum
"naNpu" ennum nAdAch chiRappu.

Meaning :
Love yields aspiration; that yields surprising Friendships.

Explanation :

Love yields the desires; that desires begets the unexpected Friendships, the pleasant surprises.

Love creates interest and desires on any thing. Pursuing that interests results in Greatness such as unexpected special friendships.

As mentioned earlier that Love offers even bones to the others, not having any materialistic interests or attachments, it should not give a wrong notion that Love do not have desire in Life. That’s why Valluvar is talking about Love’s creation of interest and desires which brings laurels in Life.

There is a difference between interest and desire. Trying to understand any thing is the Interest. Trying to possess any thing is the desire.

When Love starts on somebody, the interest starts to know more about him/her. That interest leads to him/her to get to know and acquaint. In the process not only the intended person but many new friendships may emerge. At times that emerged unknown friendship becomes the stronger, deeper, long lasting and greater too.

Therefore the Love though it dedicates oneself to others, it also has the power to generate interest, desire, friendship and laurels in Life.

Friendship by itself is nothing but the run of desires to seek, search for the Love of others. It is nothing but the longing and inducing desire to share the Love. Love generates the desire and that begets the friendship.

Just watch the kids returning from schools for their interest, enthusiasms, jumping, leaping, excitement in sharing their experience at school for the day, pride introducing their friends and classmates. We see that many a times
such loving introductions of classmates and their parents have generated ever-lasting friendship between families.


Message :
Love springs aspirations and that blossom surprising Friendships.

***

Friday, July 3, 2009

திருக்குறள்: 31

அதிகாரம்

:

4 அறன் வலியுறுத்தல் திருக்குறள்

:

31


சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ, உயிர்க்கு?


பொழிப்புரை (Meaning) :
சிறப்பைத் தரும்; செல்வத்தையும் தரும்; அறத்தை மீறிய ஆக்கம் எதுவோ, உயிர்கட்கு?

சிறப்பையும், செல்வத்தையும் பெற்றுத் தரும் அறத்தை விஞ்சிய ஆக்கம் மனித உயிர்களுக்கு வேறு ஏது? அதுவே.


விரிவுரை (Explanation) :
சிறப்பு என்பது மங்காப் புகழ் மட்டும் அல்ல, அது முக்தியை, வீடு பேற்றைக் குறிக்கும். அதாவது அறமானது இம்மையில் செல்வத்தையும், மறுமையில் வீடு பேற்றான முக்தியையும் பெற்றுத் தரும் செயல்பாடு. எனவே, மனித உயிர்கட்கு, அந்த அறத்தினை விஞ்சி இலாபம் தரும் செயல்பாடு வேறு யாது?

அறம் எனும் வழி முக்தியையும், செல்வத்தையும் பெற்றுத்தரும் எனும் அறிவு மாத்திரம் போதாது. அதைக் கடைப்பிடித்து ஒழுகினால் மாத்திரமே கிட்டும் என்பதே, ஆக்கம் என்று சொல்ல விளைந்ததின் உட்பொருள்.

மேலும், அற வழியைப் பேணுவதே உயிர்கட்கு ஆக்கம், அறமற்ற தீய வழிகள் நாசத்தை விளைவிக்கும் என்பதும் நுண்பொருள்.


குறிப்புரை (Message) :
அறமே மங்காப் புகழையும், முக்தியையும், செல்வத்தையும் ஒருங்கே தரவல்ல ஒழுங்கு.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஈனும் - பெற்றுத் தரும்
ஊங்கு - விஞ்சிய, மீறிய, தாண்டிய
ஆக்கம் - செயல்பாடு, தொழில், ஒழுகுதல்.


ஒப்புரை (References) :

ஔவையார். நல்வழி: 21
நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந்
தருஞ்சிவந்த தாமையாள் தான்.

ஔவையார். நல்வழி: 37
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி.

பட்டினத்தார். பொது: 24
விட்டேன் உலகம்; விரும்பேன் இருவினை; வீணருடன்
கிட்டேன்; அவர் உரை கேட்டும் இரேன்; மெய் கெடாத நிலை
தொட்டேன்; சுகதுக்கம் அற்றுவிட்டேன்; தொல்லை நான் மறைக்கும்
எட்டேன் எனும்பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே!

திருமந்திரம்: 2506
முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.

***