Showing posts with label aRindhu. Show all posts
Showing posts with label aRindhu. Show all posts

Tuesday, December 15, 2009

திருக்குறள்:164 (கேடினைத் தரும் இழுக்கு பொறாமை...)

அதிகாரம்

: 17

அழுக்காறாமை

திருக்குறள் : 164

கேடினைத் தரும் இழுக்கு பொறாமை...

In English

அழுக்காற்றின் அல்லவை செய்யார் - இழுக்கு ஆற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

பொழிப்புரை :
பொறாமையினால் [அறம்] அல்லாதவற்றைச் செய்யார்; [அவ்] இழுக்கு நெறியின் பால் ஏற்படும் குற்றத்தின் கடும் போக்கு அறிந்து [உணர்ந்தோர்].

விரிவுரை :
பொறாமை எனும் இழுக்க நெறியின்பால் ஏற்படும் குற்றத்தின் கடும் விளைவை அறிந்து, அறிவுடையோர் அதன்பால் அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

பிறரின் வளர்த்தி, வெற்றி, உடைமை கண்டு பொறுக்காத தன்மையாகிய பொறாமை அதால் எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கி ஒருவரின் இயற்கையான முன்னேற்றங்களையும் தடுத்து விடும். மேலும் பொறாமை விளைவித்த சோம்பலும், முடக்கமும் அடைந்து கிடக்கும் மனதில் வியாதிகளாக களவு, பொய், சூது, வஞ்சகம், சூட்ச்சி, வாதம், குறுக்குப் புத்தி, ஆத்திரம், சுய பச்சாதாபம், மயக்கம் அனைத்தும் ஒன்றோடு ஒன்றாய்ப் பின்னிப் பிணைந்து உருவாகும். அவற்றால் தீயவற்றைத் தவிர வேறு எதையும் பெற்றுத்தர இயலாது.

பொறாமை என்பது சிந்தனையின் பால் விளையும் புற்று நோய் போன்றது. அது கிளைக்கின்ற எண்ணங்களில் எல்லாம் பரவி நன்மைகளைக் கொன்று இன்னலை மட்டுமே தரும்.

எனவே பொறாமைக் குணம் ஒருவரின் வாழ்வு நோக்கத்தை மறக்கடித்து அன்றில் மறுதலித்து தீய வழியில் அவரைச் செலுத்தி இம்மைக்கும், மறுமைக்கும் கேட்டை விளைவிக்கும். நேர்மறை வினையால், ஒழுக்கத்தால் அடைய வேண்டிய வீடுபேறு என்பது இப்பிறவியில் அவருக்குக் கிட்டாமலே போய்விடும்.

ஆதலினால் பொறாமையின் இத்தகைய கடும் விளைவுகளை உணர்ந்த நல்லறத்தைப் பேணும் அறிவுடையோர், பொறாமை எனும் எண்ணம் வாராமல் வாழ்தலையே தமது கடமையாகக் கொள்வர். பொறாமைக் குணத்துக்குரிய கேடுகளையும் பரிசீலித்துத் தமது செயல்பாடுகளில் அவற்றைச் செய்யாது தவிர்ப்பர்.

குறிப்புரை :
பொறாமையின் தீவிளைவை அறிந்தோர் அதன் பொருட்டு அறமற்றதைச் செய்யார்.

அருஞ்சொற் பொருள் :
ஏதம் - குற்றம், துன்பம், கேடு, அழிவு, சிக்கவை, செய், நிகழ்து, துன்புறுத்து, அழி, சேர், மிகுதியான, விஞ்சிய, பெரிய
படு - உண்டாகும், மனதில் தோன்றும்,
பாக்கு - போக்கு (தொழிற்பெயர் விகுதி)

ஒப்புரை :

திருமந்திரம்: 2422
ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோசு மறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்
ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே.

திருமந்திரம்: 2692
போது கருங்குழற் போனவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்துஅப் பாலுற்ற தூவொளி
நீதியின் நல்லிருள் நீக்கிய வாறே.

மாணிக்கவாசகர். திருவாசகம்.
24. அடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம்

(திருப்பெருந்துறையில் அருளியது - கலவைப் பாட்டு)

செழுக்கமலத் திரளனநின் சேவடி நேர்ந்தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர் யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய் உன் அடைக்கலமே. 408

வெறுப்பனவே செய்யும் என்சிறுமையைநின் பெருமையினாற்
பொறுப்பவனே அராப் பூண்பவனேபொங்க கங்கைசடைக்
செறுப்பவனே நின்திருவருளால் பிறவியைவேர்
அறுப்பவனே உடையாய்அடியேன்உன் அடைக்கலமே. 409

பெரும்பெருமான்என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத்
தரும்பெருமான் சதுரப்பெருமான் என் மனத்தினுள்ளே
வரும்பெருமான் மலரோன் நெடுமாலறியாமல் நின்ற
அரும்பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 410

ஔவையார். ஆத்திசூடி:
46. சீர்மை மறவேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
31. சூதும் வாதும் வேதனை செய்யும்

ஔவையார். மூதுரை:
கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14

ஔவையார். நல்வழி:
வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. 23

***

In English:

Chapter : 17

Un-enviousness

Thirukkural : 164

Devastating evil enviousness...




In Tamil

azhukkARRin allavai seyyAr - izhukku ARRin
Etham padupAkku aRinthu.

Meaning :
Those who know the serious afflictions as the result of offensive enviousness will not commit any non virtuous deeds.

Explanation :
Having known the grave miseries of the offensive and sinful enviousness, the wise will never perform any unrighteous acts due to envy.

The envy or the un-bearing on others for their progress, prosperity or success leads to negative thinking and destroys even one's natural growth. Also it makes one to be lazy and to stop any activity due excessive secretion of emotions such as lie, deceit, fraud, forgery, narrow-mindedness, shortsighted and bewilderment in intertwining each other. Such emotions can yield nothing but only ill deeds.

Jealous is like the cancer disease in the thinking. Therefore it spreads in all thinking and kills all the goodness and yields only miserable afflictions.

Hence the trait of enviousness in one numbs and spoils the life determinations and leads him to do ill deeds and thus makes afflictions for his entire life and after. Thus that further leads to destroy any hope of liberation for his life, which should have been possible otherwise in normal course through sincere practice of positive and virtuous deeds.

Therefore, the wise that follow the good virtues with awareness for all these devastating issues of enviousness, will ensure that as their duty to lead a life with no envy at all. By analyzing all the bad qualities of the envy, they will ensure to avoid them in their deeds.

Message :
Those who are aware of the afflictions of enviousness will not do the ill deeds because of that.

***

Sunday, November 8, 2009

திருக்குறள்:136 (உள உறுதி ஒழுக்கம் தவறாது...)

அதிகாரம்

: 14

ஒழுக்கமுடைமை

திருக்குறள் : 136

உள உறுதி ஒழுக்கம் தவறாது...

In English

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்; இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

பொழிப்புரை :
ஒழுக்கத்தினின்று வழுவார் வலியோர்; இழுக்கத்தின் அழிவின் கடும்போக்கு அறிந்து.

விரிவுரை :
ஒழுக்கமற்ற இழுக்கதினால் ஏற்படும் அழிவின் கடுந்தன்மையை அறிந்த மன வலிமையுற்றோர் ஒழுக்கத்தினின்று வழுவுதை, நீங்குவதைச் செய்யார்.

ஒன்றைச் செய்வதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று அதனால் ஏற்படும் நன்மை கருதி அதன்பால் விருப்புக் கொண்டு செயலை மேற்கொள்ளுவது. இன்னொன்று அக்காரியத்தைச் செய்யாது இருந்தால் ஏற்படும் தீமையை உணர்ந்து, அஞ்சி, அதைத் தவிர்க்க அச் செயலை மேற்கொள்ளுதல். அதாவது நன்மை உங்களை ஈர்க்காது போயினும், அதன் துன்பம் உங்களைத் துரத்திச் செய்விக்கத் தூண்டும்.

அதைப்போன்றே ஒழுக்கமற்ற நிலையான இழுக்கத்தினால் ஏற்படும் தீமையின் தீவிரத்தன்மையை உணர்ந்து, அதற்கு அஞ்சி, மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, ஒழுக்கத்தைத் தவற விட்டுவிடாது மேற்கொள்ளுவர் மன வலிமையுடைய அறிவுடையோர். அறிவு இருப்பினும் கூட மனத் திடம் இல்லாது போயினால் ஒருவர் ஒழுக்கத்தை மேற்கொள்ளுவதில் மயக்கமும், தயக்கமும், சில வேளைகளில் பயமும், சோம்பலும் அடையக் கூடும். ஆனால் மனத்திடமுற்றோர் கொள்கைப் பிடிப்போடு, ஒழுக்கம் நீங்கினால் உண்டாகும் துன்பத்தை மனத்தால் உணர்ந்து, அவ்வொழுக்கத்தைத் தவறாது காப்பர்.

ஆக ஒழுக்கத்தைத் தவற விடாது ஒழுகுவதற்கு மனவலிமை, மனத்திடம் அவசியம் என்பது மறை பொருள். மனத்திடம் ஒழுக்கத்தின் மேல் வைக்கும் காதலினால் அன்றில் அதை ஒழுகாதபோழ்து உண்டாகும் கடும் துன்பத்தை எண்ணி உணர்ந்தால், தானாகவே தோன்றிவிடும்.

குறிப்புரை :
ஒழுக்கம் வழுவினால் உண்டாகும் கேட்டை நினைந்துணர்ந்து மனத்தைத் திடப்படுத்தி ஒழுக்கத்தைத் தவறாது மேற்கொள்ளுதல் வேண்டும்.

அருஞ்சொற் பொருள் :
ஒல்கு - தளர், சோர்வடை, மெலி, குழை, நடுங்கு, சுருங்கு, ஒதுங்கு, வளை, தொடு, காயப்படு, வறுமையடை,
ஊறுபடு
உரவோர் - வலியோர்
ஏதம் - குற்றம், துன்பம், கேடு, அழிவு
படுபாக்கு - தீவிரப் போக்கு, கடும்நிலை, கடும்போக்கு

ஒப்புரை :

திருமந்திரம்: 2097
இருந்தேன் மலர்அளைந்து இன்புற வண்டு
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வருந்தேன் நுகராது வாய்புகு தேனை
அருந்தேனை யாரும் அறியகி லாரே.

திருமந்திரம்: 2098
கருத்தறி யாது கழிந்தன காலம்
அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
ஒருத்தன்உள் ளான் உல கத்துயிர்க்கு எல்லாம்
வருத்திநில் லாது வழுக்கின் றாரே.

திருமந்திரம்: 2099
குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தென நாள்களும் வீழ்ந்து கழிந்த
விதிர்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில்
கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.

திருமந்திரம்: 2100
கரைஅருகு ஆறாக் கழனி வளைந்த
திரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின்
நரைஉரு வாச்செல்லும் நாள்கில வாமே.

திருமந்திரம்: 2101
வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து
இரவுஅறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை
அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று
விரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே.

திருமந்திரம்: 2102
மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.

ஔவையார். ஆத்திச்சூடி:
64. தொன்மை மறவேல்.
71. நூல் பல கல்.

ஔவையார். கொன்றை வேந்தன் :
91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்

***

In English:

Chapter : 14

Virtuousness

Thirukkural : 136

Strong mind never fails discipline...




In Tamil

ozhukkaththin olkAr uravOr; izhukkaththin
Etham padupAkku aRinthu.

Meaning :
The strong minded never fail in discipline; having aware of the indiscipline’s serious afflictions.

Explanation :
Having known the serious afflictions of the indiscipline, the strong minded never fail in following the good discipline.

There are two reasons or ways to do things. One is by considering the good results it would benefit, showing interest and doing it. The other one is by considering if the work is not done what would be the afflictions it may cause and then carrying out the work out of scare and to avoid the bad afflictions. That is, even though its good results not attract you, its bad afflictions will force you to carry it out.

Same way, by considering and understanding the bad afflictions caused by the indiscipline, afraid of the same, making up the mind, without missing the discipline executing the work will be adopted by the strong minded wises. Though wise in knowledge but when there is no strong mind one may have apprehensions and boredom to adopt the discipline, but when they have the strong and principled mind, they think and realize the problems afflicted by indiscipline, and follow and preserve the discipline without fail.

Therefore to adopt the discipline without fail, there must be strong and principled mind is the implicit meaning here. When there is love towards the discipline and principles or when there is apprehension about the indiscipline's serious woes, the strong mind automatically emerges.

Message :
Realizing the adversities of indiscipline become strong minded to follow the discipline scrupulously.

***