Showing posts with label படும். Show all posts
Showing posts with label படும். Show all posts

Thursday, January 21, 2010

திருக்குறள்:191 (பயனிலாது பேசுவோன் பழிக்கப்படுவான்...)

அதிகாரம்

: 20

பயனில சொல்லாமை

திருக்குறள் : 191

பயனிலாது பேசுவோன் பழிக்கப்படுவான்...

In English

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

பொழிப்புரை :
பலரும் வெறுக்கப் பயன் இலாதவற்றைச் சொல்லுபவன், எல்லாராலும் இகழப் படும் [நிலை பெறுவான்].

விரிவுரை :
பலரும் வெறுக்கப் பயன் இல்லாதவற்றைச் சொல்லுபவன் எல்லோராலும் இகழப் படுவான்.

இது ஒருவரை மாத்திரமன்று பலரையும் ஒரு சேரப் பயன் இல்லாதவற்றைச் சொல்லி நேரத்தை வீணடிப்போரை நேரடியாகக் குறித்தது. அதாவது மேடைகளில் பேசுவோர் மற்றும் காட்சிப் படுத்தலைத் தொழிலாகவும், வேலையாகவும் செய்வோர், நேரத்தை வீணடித்து அர்த்தம் அற்றவற்றைப் பிதற்றுவதைச் சாடுவதாயிற்று. அத்தகையோரைப் பார்வையாளர்கள், ஆர்வலர்கள், இடைப்பட்டோர் என அனைவரும் அவர் செய்த வெறுப்பிற்கு நிந்தனை செய்து இகழ்வர் என்பது பொருள்.

தமிழ்ச் சூழலில் மேடைகளில் கொல்லப் படும் நேரம் அளவிடற்கரியது. தனிமனிதப் புகழ்ச்சி, அடை மொழி அலங்காரங்களைச் சொல்லி முடிக்கவே அரை மணி நேரமும், மலர் மாலை இடுவதும், சோடா குடிப்பதும், பந்தா காட்டுவதும், குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வருவதையும், துவக்குவதையும், காக்க வைப்பதையுமே தனக்கான பெருமையாக எண்ணுவதும், அடுக்கு மொழியையும், சவடால்களையும் பேசி அரசியல் என்பதும் கீழ்த்தரமான கலாச்சாரங்கள். பிறகு யாருக்கும் பயன் இருக்கிறதோ இல்லையோ என்று கிஞ்சிற்றும் கருதாது சுய இலாபத்திற்கும், சுய தம்பட்டத்திற்கும் பேசுவது. அதற்கு மேலும் பேசும் ஒவ்வொருவரும் “நான் கடைசியாக ஒன்றே ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்” என்று அடுத்த அரை மணி இதையே மீண்டும் மீண்டும் பேசிப் பிதற்றிக் கொல்லுவதும் கொடுமையே. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மற்றவரின் நேரத்தைப் பொன்னாக எண்ணும் ஒழுக்கம் இல்லாமையே. அடுத்த காரணம் அத்தகையோரைக் கண்டிக்காது, அவரது பேத்தல்களையும் ரசித்துக் கொண்டு இருக்கும் மூடர்களே ஆகும். இத்தகைய போக்கு வள்ளுவர் காலத்திலும் இருந்திருந்தாலும், அன்றையச் சமூகம் அவ்வாறு பேசுவோரை நிந்தித்து, தண்டித்து அனுப்பி வைத்திருப்பார்கள் போலும். அவை காசுக்குக் கூட்டம் சேர்க்காத காலம்; உளறுபவரை ஊர் கூடித் துரத்திய காலம், அவ்வாறு பேசுவோரை ஒதுக்கி நேரத்தை மதித்த பொற்காலம். அவையே என்றைக்கும் நல் ஒழுக்கம் மிகுந்த கலாச்சாரம்.

இக் குறளின் கருத்து பலர் கூடிய வேளைகளில் மாத்திரம் அன்றித் தனிமனித உரையாடல்களிலும் பொருந்தும். நேரம், காலம் தெரியாது கழுத்தறுத்து, தேவை இல்லாதவற்றை, பொருளற்றவற்றை, வெறுக்கத்தக்கவற்றைப் பேசுபவோரை அல்லது உளறுவோரை எல்லாரும் இகழ்ந்து ஒதுக்கி விடுவர்.

பலர் வெறுக்கப் பயன் அற்றவற்றைப் பேசுவதால் அவ்வமயம் மாத்திரம் நேரம் கெடுவதில்லை. அவை பிறகு நல் எண்ண ஓட்டங்களைக் கெடுத்தும், சிதறவைப்பதாலும் அழியும் நேரம் அளவிடற்கரியது. எனவேதான் அனைவரும் அத்தகையவாறு பேசும் பயன் இல சொல்பவரை இகழ்வதோடு அவரை முழுவதும் தமது வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி விடுவார்கள். பலரால் ஒதுக்கப் படுவதால் அத்தகையோர் பிறகு வாழ்வை இழந்து தனித்து வருந்தும் நிலை ஏற்படும்.

ஆதலின் பேசுவதை இனிமையாகவும், இணக்கமாகவும், சுருக்கமாகவும், பொருளுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் பேசினால் மாத்திரமே பேசுபவருக்கும் பயன் கிட்டும்.

குறிப்புரை :
பலரும் வெறுக்கப் பயனிலாதவற்றைப் பேசுவோர் எல்லோராலும் பழிக்கப் படுவார்கள்.

அருஞ்சொற் பொருள் :
முனி - சினம்கொள், வெறு
எள் - இடித்துரை, கண்டனம், நிந்தை, இகழ்

ஒப்புரை :

திருமந்திரம்: 53
இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்
கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.

திருமந்திரம்: 61
பரனாய் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.

திருமந்திரம்: 63
பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்
துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே.

திருவாசகம். மாணிக்கவாசகர்.
3. திருவண்டப் பகுதி :

சொல்பதம் கடந்த தொல்லோன்
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன்
விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்
பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115

ஔவையார். ஆத்திசூடி:
39. கேள்வி முயல்.

ஔவையார். மூதுரை:
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8

***

In English:

Chapter : 20

No Vain Utterance

Thirukkural : 191

Speaker of useless words gets despised...




In Tamil

pallAr muniyap payan ila solluvAn
ellArum eLLap padum.

Meaning :
That who speaks useless words, to everyone's disgust, will be despised by all.

Explanation :

To the disgust of many that who speaks useless words gets despised by all.

This not only meant for one but for many or for all that who speaks useless words and wastes the time. That is actually pointing and condemning of the stage speakers and also the show-business people who speak useless and absurd words and waste everyone's time. Such people will be condemned and despised by the viewers, audiences and affected ones is the meaning here.

The time killed in Tamil stages is immeasurable. Praising of the individuals with their titles alone takes more than half an hour per person. Then follows the garlanding, drinking sodas, show offs, and coming late to the events thinking that as their own prestige to come only after the fixed time, and start late and making others to wait for themselves, then talking on rhymes and the ostentatious and only tall talks as the politics, all such are the prevailing lowest standard of any culture. Also delivering the speech regardless of its usage to anyone but only to the self and to self-glorify one is again part of such culture. Furthermore, the worst thing among them is that each and every one on the stage talking with the climax statement as "I want to tell this only one thing as my concluding talk" and then continuing for another half hour repeating this as many times. Fundamental reason for all these nonsense is the attitudes of the talkers not valuing the time of others. Next reason would be that instead of condemning such stupid and idiotic talks some fools encircling and appreciating the speaker as good, thinking it as the fun. Though these kind of scenario also should have been there during Valluvar period, but by then society seem to have thrown them out condemning outright for their absurdity. Those are the periods the masses were gathered on their own and not brought or bought for the money; the blabbers and gibbers were thrown out by the society and such were isolated by the society to appreciate everyone’s time. Those are the good culture of good virtues forever.

Meaning of this Kural also suits not only to the public speaking but also to the individual conversations. Without knowing the time or appropriateness those who speak or blabber and bore with unnecessary, absurd and disgusting words, will be condemned and isolated by all.

The time is not only getting wasted during the useless and disgusting talks but also gets wasted in immeasurable amount aftermath through its inflicting damages on the thinking and the distraction created there upon. That is why all the wise not only condemn and despise such speakers of useless speech but also isolate them from their life and interactions. Those isolated talkers of such will suffer their rest of life without any interaction and business to do with others.

Therefore making the talk as short, sweet, harmonious, meaningful and useful only will benefit even the speaker himself.


Message :
Those who speak useless words, to the disgust of many, get despised by all.

***

Sunday, December 20, 2009

திருக்குறள்:169 (எதிர்வினைப் பலன்கள் ஏன்?...)

அதிகாரம்

: 17

அழுக்காறாமை

திருக்குறள் : 169

எதிர்வினைப் பலன்கள் ஏன்?...

In English

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான்
கேடும், நினைக்கப் படும்.

பொழிப்புரை :
பொறாமையுடைய நெஞ்சத்தானின் ஆக்கமும், நேர்மை உடையோனின் கேடும் ஆராயத் தக்கவை.

விரிவுரை :
பொறாமை உடைய நெஞ்சத்தானின் வளமும், பொறாமையற்ற நேர்மை உடையோனின் கேடும் ஆராயத் தக்கவை.

அவ்வாறான நல் அறத்திற்கு எதிர்மறை வினை விளைப் பலன்களுக்குக் காரணம் முன் வினைப் பயனென்பது ஆராயத் தலைப்படின் வெளிப்படும்.

இக வாழ்வின் விளைவுகளுக்கு, இன்றைய வினைகள் மாத்திரமன்றி முன் வினைப் பயனும் காரணமாகின்றது. இதையே விதியென்றும் கூறுவதும் உண்டு. நல்லோர் துன்புறுவதும் அல்லோர் இன்புறுவதும் காலத்தின் கோலமல்ல, அவரவர் முன்வினையின் பலன்களுக்கு ஏற்பவே.

இடைப்பட்ட இக வாழ்வில் வினைப் பயன்கள் பல சமயங்களில் தாமதாகவே செயல் படுவதும் கண் கூடு. எனவே இடைப் பட்ட பலாபலன்கள் என்பவை இறுதியானதாகவும், நிலையானதுவாகவும் எப்போதும் இருப்பதுமில்லை. காலச் சுழற்சியில் இவை மாறிவிடும் மாயங்கள் என்றே நிரூபணமாகி இருக்கின்றன.

எனவே சோதனைகளும், வேதனைகளும் நல்லோர்பால் அதிகம் உண்டாவது அவரை இன்னும் பண் படுத்தவே என்பதும், அவற்றிலும் அவர் வெற்றி பெற்றால் இறுதியில் மறுபிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வீடு பேறு எனும் முக்தியை அடைவார் என்பது திண்ணம்.

அதே சமயத்தில் பொறாமை எனும் தீய குணம் கொண்டோர் பெற்றிருக்கும் ஆக்கங்கள் அவர் செய்த முன் வினைப் பயனே என்றாலும், பல சமயங்களில் இறுதிப் பலன் வேறுபடுவதும் உண்டுதானே.

கொள்ளை அடிப்போர் வள்ளல்கள் போலும், கோவிலை இடிப்போர் சாமியைப் போலும், காட்டிக் கொடுப்போர் வீரர்கள் போலும், கூட்டிக் கொடுப்போர் தொண்டர் போலும், தமிழே அல்லாதோர் தமிழர் போலும், தன்னலமிக்கோர் தலைவர்கள் போலும், பிள்ளைகள் அற்றோர் தந்தைகள் போலும், பேதலியெல்லாம் மேதைகள் போலும், அறிவிலி மண்டுகள் அறிஞர்கள் போலும், ஆற்றல் அற்றவர் கவிஞர்கள் போலும், கொலைகளைச் செய்வோர் கலைஞர்கள் போலும், குடும்பம் நடத்துவோர் துறவிகள் போலும், காமத் தேடிகள் அர்ச்சகர் போலும், கயமை உடையோர் நேர்மையர் போலும், குற்றம் இழைப்பவர் நீதியர் போலும், குறைகள் அற்றவர் கைதிகள் போலும், பிழைக்க வந்தோர் மன்னர்கள் போலும், பெருமைச் சந்ததி அகதிகள் போலும், சுயநலப் பேதைகள் அரசியல் ஆளவும், சொந்த பந்தம் மந்திரி ஆவதும், லஞ்சம் பெறுவோர் சஞ்சலம் அறுப்பதும், வஞ்சனை செய்வோர் கொஞ்சி மகிழ்வதும்,... (சந்தம் நன்றாக வருவதால் இதைக் கீழ்க் கண்டவாறு கவிதை வடிவில் முயற்சிக்கிறேனே...)

எதிர்வினைப் பலன்கள் ஏன்?
(மகாகவி பாரதிக்குச் சமர்ப்பணம்)

கொள்ளை அடிப்போர் வள்ளல்கள் போலவும்
கோவிலை இடிப்போர் சாமியைப் போலவும்
காட்டிக் கொடுப்போர் வீரர்கள் போலவும்
கூட்டிக் கொடுப்போர் தொண்டர்கள் போலவும்
தமிழே அல்லாதோர் தமிழர்கள் போலவும்
தன்னலம் மிக்கோர் தலைவர்கள் போலவும்

பிள்ளைகள் அற்றோர் தந்தைகள் போலவும்
பேதலி யெல்லாம் மேதைகள் போலவும்
அறிவிலி மண்டுகள் அறிஞர்கள் போலவும்
ஆற்றல் அற்றவர் கவிஞர்கள் போலவும்
கொலைதனைச் செய்வோர் கலைஞர்கள் போலவும்
குடும்பம் நடத்துவோர் துறவிகள் போலவும்

காமத் தேடிகள் அர்ச்சகர் போலவும்
கயமை உடையோர் நேர்மையர் போலவும்
குற்றம் இழைப்பவர் நீதியர் போலவும்
குறைகள் அற்றவர் கைதிகள் போலவும்
பிழைக்க வந்தோர் மன்னர்கள் போலவும்
பெருமைச் சந்ததி அகதிகள் போலவும்

சுயநலப் பேதைகள் அரசினை ஆள்வதும்
சொந்தமும் பந்தமும் மந்திரி ஆவதும்
பதவியில் இருப்போர் போதையில் ஆழ்வதும்
கோழையர் கூட தேர்தலில் ’வெல்வதும்’
லஞ்சம் பெறுவோர் சஞ்சலம் அறுப்பதும்
வஞ்சனை செய்வோர் கொஞ்சி மகிழ்வதும்

பாதணி ஆண்ட பாரதம் என்பதும்
பாதச் செருப்பாய் உழைப்பேன் என்பதும்
வாக்கை ’வாங்கி’ வெற்றி என்பதும்
’வாரிசே’ ’மக்கள் ஆட்சி’ என்பதும்
தம்மைப் போற்றின் பேரரசு என்பதும்
தமக்கும் வேண்டும் பரிசில்கள் என்பதும்

’நோ-பல்’லைக் கோரிப் பல்லை இளிப்பதும்
’சா’கித்தியம் நாடிச் சாடை உரைப்பதும்
கிட்டிய வரையில் இலாபம் பார்ப்பதும்
திட்டம் தீட்டியே திருடிச் சேர்பதும்
சங்கதி எதுவும் இல்லை எனினும்
சாதித்தோம் என்றே சத்தியம் செய்வதும்

சந்தியில் நிற்போர் சாவினை ஏகினும்
சாகச நாடகம் நடத்தி முடிப்பதும்
சந்திலே புகுந்து சிந்து படிப்பதும்
சமயம் பார்த்து நொந்து நடிப்பதும்
முதலைக் கண்ணீர் அழுகை விடுப்பதும்
முத்தமிழ்ச் சொத்தை முழுவதும் அடிப்பதும்

உதவா திட்டத்தை அமல் படுத்துவதும்
உலக வங்கிக்கே அடகு வைப்பதும்
ஊழலே வாழ்வாய் பிழைத்துக் கிடப்பதும்
ஊரை அடித்து உலையில் வைப்பதும்
ஆட்சியில் அமர்ந்தால் ’ஆண்டவன்’ என்பதும்
ஆணவம் கொண்டு ஆடித் திளைப்பதும்

துன்புறு மாந்தரைப் பங்கு வைப்பதும்
தொட்டவர் எல்லாம் சுயநலம் பார்ப்பதும்
தூங்குவோர் விழித்தால் திசை திருப்புவதும்
துணிந்தோர் மனதில் மடமை வளர்ப்பதும்
தொடரும் நாடகம் நியாயம் என்பதும்
நிகழ்ந்தவை எல்லாம் நல்லன என்பதும்

பத்தினியர் எல்லாம் பரத்தையர் ஆவதும்
உத்தமர் எல்லாம் உரிமை இழப்பதும்
தீங்கிற்குத் தீங்கே தீர்வு என்பதும்
தீவிர வாதத்திற்கு மருந்ததே என்பதும்
தேசப் பிதாவை கேலி செய்வதும்
தேசத்தை ’நடிகர்’ வசமே விடுப்பதும்

வேலையும் அற்றுச் சாலையில் இருப்பதும்
விதியெனெ நொந்து வீழ்ந்து கிடப்பதும்
மதுவினில் மயங்கி மானம் இழப்பதும்
’மதத்தினை’ வளர்த்து மானுடம் கெடுப்பதும்
பழமை வினையின் பழியே என்பதா?
பாமர மனிதரின் பேதமை என்பதா?

வானமும் பூமியும் நிச்சயம் என்றால்
வளர்பிறை கதிரும் சத்தியம் என்றால்
அரசியல் பிழையை அறந்தான் விடுமா?
அடுக்கிய பாவம் அதுவாய்க் கெடுமா?
முன்வினை பின்வினை என்பது மெய்யா?
முதுமொழிக் கூற்று அனைத்தும் பொய்யா?

பொய்யும் புரட்டும் உயர்நிலை பெறுமா?
பொருளினைச் சுருட்டின் புகழ்தான் வருமா?
அழுதே நின்றால் கருணை வருமா?
அனுதாபம் ஒன்றே வாழ்வைத் தருமா?
வஞ்சித்து வாழ்ந்தால் வாழ்க்கை ஆகுமா?
வாடித் துடித்தால் துன்பம் போகுமா?

நெஞ்சின் அயர்ச்சி நிலையைத் தீர்க்குமா?
நினைவுத் தளர்ச்சி கவலை போக்குமா?
வேடிக்கை கண்டால் உணவு தேறுமா?
வேதனை எல்லாம் தானாய் மாறுமா?
முயற்சியே இன்றி வெற்றி கிட்டுமா?
முடங்கிப் படுத்தால் மேன்மை எட்டுமா?

சந்ததி என்பது சுயமாய் வருமா?
சங்கடம் என்றால் சஞ்சலம் விடுமா?
இயங்காது இருத்தல் இயற்கை ஆகுமா?
இறந்து போவதே பொறுமை ஆகுமா?
திருந்தா அறிவால் பொறுப்புத் தீருமா?
தெய்வம் இகழ்ந்தால் விருப்பங் கூடுமா?

தீமை வளர்த்தல் தெளிவுடைப் பொருளா?
தீராத் துயரம் தெய்வத்தின் அருளா?
எதிர்மறைப் பலனே இயற்கையின் விதியா?
இரவும் பகலும் இறைவனின் சதியா?
வாய்மை என்பது ஊமையின் மொழியா?
வாய்ப்பினை இழப்பது அறிவுடைச் செயலா?

உழைத்தவர் இனத்தே பட்டினிச் சாவா?
உலுத்தர் கூட்டம் கோட்டையில் வாழ்வா?
கோட்டை என்பது கொள்ளையர் அறையா?
கூடித் திருடும் கூட்டணிக் கடையா?
தூய்மை என்பது தொலைந்த சரக்கா?
துயரம் என்பது தொடரும் கிறுக்கா?

இதயம் இருப்பது மனிதரின் பிழையா?
இல்லை என்பதே இருப்பவர் தொழிலா?
வாழ்க்கை என்பது அனுபவச் சிறையா?
வாழ்வது என்பதே சாகசக் கலையா?
நெஞ்சு பொறுக்கு தில்லையே இந்த
நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால்...

***


குறிப்புரை :
எதிர் பலன்களான பொறாமை உடையவன் பெறும் நலமும், பொறாமை அற்றவன் பெறும் கேடும் ஆராயத் தக்கவை.

அருஞ்சொற் பொருள் :
அவ்விய - பொறாமையுடைய
செவ்வியான் - நேர்மையுடையோன்
நினை - எண்ணு, சிந்தி, மனம்கொள்,

ஒப்புரை :

சிலப்பதிகாரம்: 15: 91-93:
இம்மைச் செய்தன யான்அறி நல்வினை:
உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது.

பட்டினத்தார்:
என்செய லாவதி யாதொன்று மில்லை யினித் தெய்வமே
உன்செய லேயென் றுனரப்பெற் றேனிந்த வூனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்று மில்லைப் பிறப்பதற்கு
முன்செய்த தீவினை யோவிங்ங நேவந்து மூண்டதுவே.

திருமந்திரம்: 2686
மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி
பன்னிய ஞானம் பரந்து பரத்தொளி
துன்னிய ஆறுஒளி தூய்மொழி நாடொறும்
உன்னிய வாறுஒளி ஒத்தது தானே.

திருமந்திரம்: 2667
விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்
உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற
வளங்கொளி எங்கும் மருவிநின் றானே.

திருமந்திரம்: 2679
மலையும் மனோபவம் மருள்வன ஆவன
நிலையில் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம்சித்த மாகும்
நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே.

திருநாவுக்கரசர். தேவாரப் பதிகம்:
6.40 திருமழபாடி - திருத்தாண்டகம்

சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ்
சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர்
இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும்
என்றுணையே என்னுடைய பெம்மான் தம்மான்
பழிப்பரிய திருமாலும் அயனுங் காணாப்
பரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்த
வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 407

ஔவையார். ஆத்திசூடி:
99. வாதுமுற் கூறேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

ஔவையார். மூதுரை:
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி - தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன். 19

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22

ஔவையார். நல்வழி:
தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி. 30

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி. 37

***

In English:

Chapter : 17

Un-enviousness

Thirukkural : 169

Why opposite benefits?...




In Tamil

avviya nenjaththAn Akkamum, sevviyAn
kEdum, ninaikkappadum.

Meaning :
Prosperity of the envious mind and the adversity of the righteous mind are to be pondered.

Explanation :

The exuberance of the jealous and the destitution of the righteous hearts are to be considered and analyzed.

Reason for such opposite results of the virtues or other deeds when analyzed will be known that they are due to past or the previous birth deeds of the individuals.

Yields for the current life are not only by the result of current deeds but also due to the previous births deeds. This is what also known as fate. The Good people suffering and the others enjoying are not time's mirage but depend by their previous births deeds.

The yield of the intermediary current life works only lately at most of the times. Therefore the interim result not necessarily is the ultimate or permanent one at always. It has been proved that these results would change over a period of time.

Therefore, the trials and the afflictions are occurring more to the virtuous people only to make them yet proper and righteous. It is certain that when those people pass through and win over those tests they get the chance to get salvation from the cycle of births ultimately.

However at the same time, it is true that the people of envy though they may enjoy certain betterments due to their previous birth deeds, many a times their end results may vary.

Why opposite results?
(Dedicated to Mahakavai Subramanya Bharathy)

The robbers looking like the philanthropist
The temple demolishers looking like the God
The betrayers looking like the fighters
The pimps looking like the volunteers
The non-Tamilians looking like the Tamils
The selfish mongers looking like the leaders

The childless looking like the fathers
The perplexed looking like the geniuses
The mindless fools looking like the experts
The no prowess looking like the poets
The murderers looking like the artists
Those who run domestic life looking like the ascetics

The sex maniacs looking like the priests
The meanies looking like righteous
The offenders looking like the judges
The righteous looking like the convicts
The immigrants looking like the kings
The great lineage looking like the refugees

The selfish naives running the government
The kin and kith becoming the ministers
Those in power drowning in intoxication
Even the cowards 'winning' the elections
That who take bribes getting unperturbed
The cunning ones fondling and enjoying

Calling the Bharath as the sandals ruled
Telling that I would serve as the slippers
Buying the 'Vote' and declaring as the winnings
Saying 'Heirs' are the democracy
Declaring 'The Big King' for the boot-lickers
Insisting 'Prizes' for the self too

Wishing the 'Nobel' (/No-teeth) and smiling sheepishly
Wanting the 'Sahithyam' (/Death) and talking indirectly
Making the profit to the extent possible
Planning cunningly and stealing to save
Though nothing is the real stuff
Promising that as the great accomplishments

Though they in crossroads met with the death
Pretending and ending though high dramas
Singing the tunes in the available gaps
Then shedding the crocodile tears
Looting the tri-Tamil properties

Forcing the useless schemes and plans
Mortgaging only at the World Bank
Making the life only through corruption
Cooking by plundering through places
Terming the power chance as 'the God ruled'
Playing through the haughtiness

Dividing to share the afflicted people
Contacted all seeking self gain
Diverting the attention if at all awakened
Growing stupidity to those show bravery
Justifying the drama that continuing
Saying all well as what happened

Chaste ladies turning as whores
Nobles losing all their rights
Telling ill as the just for all the ills
Saying terrorism as the solution for itself
Ridiculing the father of the nation
Handing over the nation to the 'Actor's

Staying jobless in the streets
Calling as fate and falling in distress
Boozing with the liquors to doze & lose dignity
Growing the 'Religion /rut' and spoiling the humanity
Is it the revenge of previous deeds?
Is it the ignorance of the laymen?

If the sky and earth is certain
If the growing moon and sun is promise
Will the virtues ignore political mistakes?
Will the accumulated sins destroy by themselves?
Prior and later deeds are they true?
Are the old sayings just the lies?

Will the lies and twists ever go heights?
Will stealing the properties fetch ever the fame?
Will the kindness come for always crying?
Will sympathy alone make up the life?
Will living by deceits be the life?
Will withering and suffering remove the agony?

Will hearty depression give away the discretion?
Will the wearing memory remove the worries?
Will the fun watching fill the stomach?
Will all the distress change by themselves?
Will there be victory without any effort?
Will the lame sleep ever touch the eminence?

Will the lineage come automatically?
Will the perturbation leave by discomfort?
Will it be natural to stay inactive?
Will the dying alone mean the patience?
Will the irreparable mind ends the responsibility?
Will the despising the God attain the wishes?

Is that clear affair to fostering the evil?
Is that Gods grace the endless agony?
Is that natural law the opposite results?
Is that Gods deceit the day and night?
Is that the Truth the language of dumb?
Is that sensible to miss any opportunity?

Is the death of starving for the toiled?
Is the life at forts for the looting folks?
Is the fort the room for the plunderer?
Is that the office for the robbing front?
Is cleanliness a gone away stock?
Is misery the continuing madness of blocks?

Is the heart the mistake of humanity?
Is the empty hand the duty of riches?
Is the life the prison for experiences?
Is the living itself an extraordinary art?
The heart is unable to bear on these…
Unstable human beings ever could think of…

***


Message :
The opposite results such as envious mind's prosperity and the un-envious mind's affliction are worth to be contemplated.

***

Tuesday, December 1, 2009

திருக்குறள்:154 (நிறைமை நிறைக்கும் பொறுமை...)

அதிகாரம்

: 16

பொறையுடைமை

திருக்குறள் : 154

நிறைமை நிறைக்கும் பொறுமை...

In English

நிறை உடைமை நீங்காமை வேண்டின், பொறை உடைமை
போற்றி ஒழுகப் படும்.

பொழிப்புரை :
நிறைமை உடைமை நீங்காது இருக்க வேண்டின், பொறுமை உடைமையைப் போற்றி ஒழுகப் படவேண்டும்.

விரிவுரை :
ஒருவர் முழுமைத் தன்மை கொண்டிருப்பதை நீங்காது இருக்க வேண்டின், பொறுமை எனும் உடைமையைப் போற்றி ஒழுகுதல் வேண்டும்.

அதாவது நிறை எனும் முழுமை, பொறுமை என்பது இல்லாது போயின் குறை உடைமை ஆகிவிடும் என்பது மறை பொருள். பொறுமை எனும் குணம் நிறைமை எனும் மாந்தரின் முழு நிலைமைக்கு இன்றி அமையாதது.

அள்ளக் குறையாது அனைத்துக் குண நலனும் நிறையுடை மாந்தர் பொறுமை எனும் குணத்தை இழப்பாராயின், அவரிடம் குறை ஏற்பட்டு நிறையுடை எனும் தகுதி இழப்பு ஏற்படுகின்றது.

எனவே நிறை குடம் தழும்பாது என்பதே போல், நிறையுடை மாந்தர் எதிலும் பொறுமை இழத்தல் கூடாது.

குறிப்புரை :
பொறுமை இழக்காத மாந்தரே நிறைவுறு மாந்தராய்த் திகழ முடியும்.

அருஞ்சொற் பொருள் :
நிறை - நிரம்பு, மிகு, பரந்திரு, முழுமை, முழுமையடை, சிறப்பு, பெருமை, மாட்சிமை, எடை, தராசு,
நிறுத்துதல், நிலைப்படு, உறுதிப்படு, திண்மை, கற்பு நெறி, வலிமை, மனத்தை ஒருமைப் படுத்துதல்.

ஒப்புரை :

திருமந்திரம்: 542.
வல்வகை யானும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும்
கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு
எல்லையி லாத இலயம்உண் டாமே.

திருமந்திரம்: 1199.
சத்தியென் பாளரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே.

திருமந்திரம்: 1234.
சத்தியி னோடு சயம்புவம் நேர்படில்
வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத்து ஒருவரும்
சித்தது மேவித் திருந்திடு வாரே.

திருமந்திரம்: 1244.
தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பிலி
பூங்கிளி தங்கும் புரிகுழ லாள்அன்று
பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.

திருமந்திரம்: 1385.
மண்டலத்து உள்ளே மலர்ந்தெழு தீபத்தை
கண்டகத்து உள்ளே கருதி யிருந்திடும்
விண்டகத்து உள்ளே விளங்கி வருதலால்
தண்டகத்து உள்ளவை தாங்கலும் ஆமே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
3. திருவண்டப் பகுதி

உள்ளம் கொண்டோ ர் உருச்செய் தாங்கு எனக்கு
அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய
கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில்
கருணை வான்தேன் கலக்க 180
அருளொடு பரா அமுது ஆக்கினன்
பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே

ஔவையார். ஆத்திசூடி:
47. சுளிக்கச் சொல்லேல்.
58. துன்பத்திற் கிடங்கொடேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
31. சூதும் வாதும் வேதனை செய்யும்

ஔவையார். மூதுரை:
தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9

***

In English:

Chapter : 16

Forbearance

Thirukkural : 154

Integrity Integrating patience...




In Tamil

niRai udaimai nIngkAmai vENTin, poRai udaimai
pORRi ozukap padum.

Meaning :
Should you wish your integrity to be intact, your patience must be upheld and preserved.

Explanation :
If one wishes not to evade but retain his integrity, then he should upheld and preserve his patience.

The implied meaning is that without patience the integrity is incomplete and becomes short fallen. The patience is the most necessary quality for those wise with integrity to keep it complete.

Those who have all the qualities in full with integrity when they lose the patience fall short in the fullness of their integrity.

Therefore, as in the saying "full pot does not shake", people of integrity should not lose their patience in anything.

Message :
One who does not lose the patience only can stand as the person of integrity.

***

Sunday, October 11, 2009

திருக்குறள்: 114 (செயல்கள் சொல்லும் நீதி...)

அதிகாரம்

: 12

நடுவு நிலைமை

திருக்குறள் : 114

செயல்கள் சொல்லும் நீதி...

In English

தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர்
எச்சத்தால் காணப் படும்.

பொழிப்புரை :
சான்றோர்/நடு நிலையாளர் எனச் சொல்லத் தக்க தகுதியுற்றவர், தகுதி இல்லாதவர் என்பது அவர் அவர் செய்துள்ள வினைப்பலனால் தெரிய வரும்.

விரிவுரை :
நடுநிலைமைமிக்க சான்றார் எனத்தக்க தகுதியுற்றவர், தகுதி அல்லாதவர் என்பவை அவரவர் செய்துள்ள வினைப் பயன்களால் காணப்படும்.

நடுநிலை தவறிய, அநியாயமான பொருள் ஈட்டல்கள், ஆக்கங்கள் ஊதாரி மக்களால் செலவு செய்யப்படுவதும், அவர் கண்ணின் முன்னேயே அழிவுறுவதும், பேரிடர் படுவதும் அவை ஒழுக்கமற்றவரின், ஒழுக்கமற்ற முறையில் கிட்டியவை என்பதை உணர்த்திவிடும். அதைப் போலவே, நடுநிலை மிக்க நல்லார் ஒருவரின் சொத்துக்கள் அழிவுபடாமையும், அவரது வாரிசுகளிடம் பிரதிபலிக்கும் நல்ல குணங்களாலும் அறியமுடியும். அத்தகைய நல்லோர் செய்வித்த பொருட்கள் காலத்திற்கும் நின்று நன்மை பயப்பதைக் காணுங்கால் அவர்தம் ஒழுக்கநெறியும், மேன்மையும் புலப்படாதா?

திருடிச் சேர்த்தவை, கொள்ளையடித்துச் சம்பாரித்தவற்றைக் கொண்டு எவனும் நிம்மதியாக வாழ்ந்ததாய்ச் சரித்திரமில்லை. அதுவே அவனை அழித்துவிடுவதை, தீயவழியில், அராஜகத்தில் மேலும் அவனைச் செலுத்துவதை நாம் அன்றாடம் காணலாம்.

எனவே செயல்களின் தன்மையைக் கொண்டே ஒருவர் நடுநிலையளரா அல்லவரா என்பதை அறியலாம். அவரவர் செயல்பாடுகளுக்குத் தக்கவே சமுதாயம், ஊர், உலகம் அவரைச் சீராட்டிப் பாராட்டவோ அன்றில் தூற்றிக் கரிக்கவோ, ஒதுக்கவோ செய்கின்றது. ஆகவே அதனாலும் நடுநிலையாளரை அடையாளம் காண்பது மிகவும் எளிது.

குறிப்புரை :
செயலின் பலனைக் கொண்டே நடுநிலையாளரை அடையாளம் காணலாம்.

அருஞ்சொற் பொருள் :
தக்கார் - நடுநிலையாளர்

ஒப்புரை :

திருமந்திரம்: 322
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவார்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவார்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.

திருமந்திரம்: 922
நாடும் பிரணவம் நடுஇரு பக்கமும்
ஆடும் அவர்வாய் அமர்ந்தங்கு நின்றது
நாடும் நடுவண் முகம்நம சிவாய
ஆடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே.

திருமந்திரம்: 1624
ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

ஔவையார். ஆத்திச்சூடி:
54. தக்கோ னெனத்திரி.
57. தீவினை யகற்று.

ஔவையார். கொன்றைவேந்தன்:
26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

ஔவையார். மூதுரை:
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

ஔவையார். நல்வழி:
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். 1

***

In English:

Chapter : 12

Impartiality

Thirukkural : 114

The deed's Justice...

thakkAr thakavu ilar enpathu avar avar
echchaththAl kANap padum.

Meaning :
Just or unjust is the person appears through their respective residues.

Explanation :

Whether one qualifies as the just and or otherwise is known through their deeds.

Unjustifiably and unfairly earned wealth and creations get spoilt by the spent thrift offspring; get destroyed before their own eyes, yield disasters and all such will show up that all came from the undisciplined in the illegal ways. On the other hand one can easily witness the properties of the just and wise not getting destroyed and the good qualities and characters reflecting in their progenies. When the creations of such ever last usefully, won’t their greatness and goodness discern?

The robbed and stolen things and the plundered earnings by one in no history have ever let them live in peace. Instead that itself destroys them completely or again pushes them to continue the bad things forever is what we see.

Therefore by the qualities of the deeds itself one can easily identify whether the person is of the just or not. Society recognizes individuals only through their respective activities to tend and appreciate or to slander and avoid them. Therefore through that too it is very easy to figure out the just people.


Message :
Through the deeds by itself a just person can be identified.

***