Saturday, January 2, 2010

திருக்குறள்:179 (வேட்காதோரைச் சார்வாள் திருமகள்...)

அதிகாரம்

: 18

வெஃகாமை

திருக்குறள் : 179

வேட்காதோரைச் சார்வாள் திருமகள்...

In English

அறன் அறிந்து வெஃகா அறிவு உடையார்ச் சேரும்
திறன் அறிந்து ஆங்கே திரு.

பொழிப்புரை :
அறம் [இஃதென] அறிந்து பிறர் பொருளை வேட்காத அறிவு உடையாரைச் சேரும்; [அவர்தம்] திறம் அறிந்து ஆங்கே திருமகள்.

விரிவுரை :
அறம் ஈதென்று அறிந்து பிறர் பொருளை வேட்காத அறிவு உடையாரை அவர்தம் திறத்தை அறிந்து ஆங்கே திருமகள் சேர்வாள்.

பிறன் பொருளை வேட்காமை அறமென்றே அறிந்து நிற்பவர் பால், அவர் தம் தகுதிக்கேற்ப திருமகள் அவர்களைச் சென்றடைவாளாம். பிறன் பொருளை வேட்காதவவரைத் திருமகள் சார்ந்து பயன் தருவாள் என்றால் மிகவும் பொதுவானதாக ஆகி விடும். இதில் அத்தகையோருக்கும் அவரவர் நேர்மைத் தகுதிக்கேற்ப நிற்பாள் என்று கூறுவதே சிறப்பானது, கவனத்தில் கொள்ள வேண்டியது.

அறம் ஈதென்ற தெளிவுற்ற மதியொடு, இதுவே கொள்கையென்ற திடமுற்ற மனதொடு, நேர்மைத் திறத்தொடு, தமது ஆற்றலால் செயல் ஆற்றுபவரைத்தானே வெற்றித் திருமகள் பற்றி நிற்பாள். கவனம் சிதைவுறாத மனமும், நல்லறம் செலுத்தும் சாலையுமே பயமற்ற செல்வத்தைக் கொடுக்கும். அதிருஷ்டமும், வெற்றியும் முன்வினையோ, பின்வினையோ எதாக இருந்தாலும் அவை நல்லெண்ணத்தால் மட்டுமே கை கூடும். வெற்றிக்கு உளவியலாளர்கள் கூறும் வழியும் இதுவே ஆகும். நல்லறத்தால் வரும் நல்லெண்ணமும், சிதறாத கொள்கைப் பிடிப்பும், இலக்கின் தெளிவும் வெற்றியைப் பெற்றுத் தரும். வெற்றிகள் இருக்குமிடமே திருமகள் இருக்குமிடம்.

முன்னேற விளைபவர் குறுக்குவழியால் பிறரின் திறமையைத் திருடி மேல் வர எண்ணினால் அவமானங்களையும், துன்பத்தையும் தான் இறுதியில் சந்திக்க வேண்டி இருக்கும். திசை மாறிய மனது இறுதி இலக்கை அடைவதும் இல்லை; தீய வழிகள் என்றைக்கும் சிறப்பை நல்குவதுமில்லை.

திருமகள் சென்ற இடமெல்லாம் செல்வ வளத்தையும் நலத்தையும் அள்ளிக் கொடுக்கும் தெய்வம் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். எனவே பிறன் பொருள் வேட்காமை என்பது சென்ற குறளில் சொன்னது போல் செல்வத்தின் சுருங்காமை அதாவது வற்றாமையை மாத்திரம் அல்ல வளத்தையும் கொடுக்கும் என்பது இங்கே தெளிவு.

குறிப்புரை :
பிறன் பொருள் வேட்கா நன்மக்கள் பால் அவர் தம் தகுதிக்கேற்ப திருமகள் சென்றடைவாள்.

அருஞ்சொற் பொருள் :
திறம் - கூறு, வகை, இயல்பு, சார்பு, சுற்றம், வழிமுறை, திறமை, ஆற்றல், சக்தி, சிறப்பு, மேன்மை, நேர்மை, நல்லொழுக்கம், கற்பு.

ஒப்புரை :

திருமந்திரம்: 1835
கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள்
பழிப்படு வார்பல ரும்பழி வீழ
வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே.

திருமந்திரம்: 1843
காண்ஆகத் துள்ளேஅழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்தறி வாரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே.

திருமந்திரம்: 2518
நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும்
எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப்
பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை
விண்அறி வாளர் விரும்புகின் றாரே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
35. அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல் :

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 516

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 517

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 518

ஔவையார். மூதுரை:
மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம் - திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம். 29

ஔவையார். நல்வழி:
நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான். 21

***

In English:

Chapter : 18

Non-Covetousness

Thirukkural : 179

Fortune benefits the non-covetous...




In Tamil

aRan aRinthu veHkA aRivu udaiyArch chErum
thiRan aRinthu AngkE thiru.

Meaning :
The Goddess of Luck reaches out appropriate to their uprightness to those wise who understood that as the righteous virtue and are free from covetousness.

Explanation :

The Goddess of fortune joins appropriate to their just to those wise who learnt that as the virtue and stood free from the covetousness on others.

It is said that the Goddess of fortune reaches out to those who believe that as the righteous virtue and follow the non covetousness sincerely. It would have been simpler if it was stated as the Goddess of fortune would join those with non covetous. Here it is mentioned specifically as 'depending upon their uprightness' or 'appropriate to their excellence / ability ' is very special and worth notable.

The Goddess of victory will join only those who accomplish the work with the clear mind about the virtue, strong commitment to the policy, sincere uprightness, determination and effort. Only the un-deviated mind and the good virtuous path can give the wealth of no fear. Luck and victory is possible only by positive thinking even though through the deeds of current or previous. This is the method prescribed by the psychologist to be successful in life. The good thinking coming out of good virtues, complete involvement and clear goals attains the victory. And the victorious place is supposed to be where Goddess of victory resides.

Those who aim the success in life, if they think of choosing the short cut through stealing others efforts have to face only the anguish and disgrace at the end. The deviated mind never reaches the destination as well. The evil ways never yield prosperity or eminence.

We already know that the Goddess of luck wherever reaches bestows the wealth and goodness in abundance. Therefore the non covetousness not only ensures the wealth not shrinking as said the previous Kural but also grows appropriately is made more clear here.


Message :
Appropriate to their just the Goddess of Fortune joins them that who are free from covetousness.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...