Showing posts with label தலை. Show all posts
Showing posts with label தலை. Show all posts

Sunday, November 29, 2009

திருக்குறள்: 151 (இகழ்வாரைப் பொறுக்கும் பெருந்தன்மை...)

அதிகாரம்

: 16

பொறையுடைமை

திருக்குறள் : 151

இகழ்வாரைப் பொறுக்கும் பெருந்தன்மை...

In English

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.

பொழிப்புரை :
[தன் மேல் குழி வெட்டித்] தோண்டுபவரையும் தாங்கும் நிலம் போல, தம்மை இகழ்பவரைப் பொறுப்பது தலையாய பண்பு.

விரிவுரை :
தன்னை அகழ்ந்து பிளப்பவரையும் தாங்கிக் கொண்டிருக்கும் நிலம்போல, தம்மை இகழ்ந்து தூற்றுபவரையும் பொறுத்துக் கொள்வது மனிதருக்குத் தலையாய பண்பாகும்.

தம்மை இகழ்பவரையும், துன்புறுத்துவோர் நிகழ்த்தும் இன்னல்களையும் பொறுத்துக் கொள்ளுவதால் பண்படப் போவது தாமே என்ற நல்லெண்ணம் கொண்டால், அவர்களையும் மதித்து, அவர்தம் இகழ்ச்சியையும் தாங்கும் தன்மை வந்து விடும். தாழ்த்தினாலும், வீழ்த்தினாலும், தட்டினாலும், குட்டினாலும், பிட்டாலும், சுட்டாலும், சுருக்கினாலும், விரித்தாலும் புடம்போடப்படும் தங்கங்கள் பொறுமை இழப்பதில்லை. அழுத்தங்களைத் தாங்கிய ஆன்மாக்களே நல் வைரங்களாகி மின்னுகின்றன.

எனவே இகழ்பவரை நோவதால் விரிசல்களே பெருகும். ஆக்கபூர்வ எண்ணம்போய் தாக்கும் தன்மை வந்து பாழே மிஞ்சும். இவை பொறுமை அற்ற சிறியோர் மேற்கொள்ளும் வழி. மாறாக பொறுமை கொண்டு, காரியத்திற்குதவாத வாதத்தைத் தள்ளி, தேவையற்ற வசவுகளைப் புறந்தள்ளி, உண்மைகளை மட்டும் உய்த்துணர்வதே மேம்பட எண்ணும் மேலோர் கொள்ளும் வழியாகும். அறியாமையால் தூற்றுவோரையும், பிதற்றுவோரையும், அறிவற்று உளருவோரையும் பொருட்படுத்தாது அன்பும், கருணையும் கொண்டு விட்டுவிடுவதால், நேரமும் காப்பாற்றப்பட்டு, நேரிய சிந்தனைப் பாழ்படாது செயலாற்ற இயலும்.

பொறுமை, அமைதி, அஹிம்சை என்பவை தோற்கும் செயற்பாடுகள் அல்ல. அவையே உண்மையில் வெற்றிகள், வெற்றியின் படிக்கட்டுக்க்கள்.

வெற்றிகள் குவிந்து, உங்களின் செயற்பாடுகள் சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் நாளில், அவதூறு பேசியவர்களெல்லாம் நாணித் தலை குனிவர். பொறுமையின் பெருமை அன்று உங்களையே சாரும்.

எனவே இகழ்பவரைத் தாங்கும் நற்குணமாகிய பொறுமையைக் கொள்ள, எதையும் தாங்கும் பூமியைப் போன்ற பெருந்தன்மை வேண்டும் என்பதே இங்கு மறை பொருள்.

குறிப்புரை :
தம்மை இகழ்பவரைப் பொறுத்தல் தலையாய அறம்.

அருஞ்சொற் பொருள் :
வரையான் - வரையறுத்தவன், வரைமுறைக்குள் இருப்பவன்.
நயவாமை - விரும்பாமை

ஒப்புரை :

பழமொழி:
பொறுத்தார் பூமி ஆழ்வார்.

திருமந்திரம்: 539..
பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் . நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.

திருமந்திரம்: 1109.
அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே. 35

திருமந்திரம்: 1116.
பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முற்றி அருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே. 42

திருமந்திரம்: 1117.
உள்ளத்து இதயத்து நெஞ்சத்தொரு மூன்றுள்
பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது
வள்ளல் திருவின் வயிற்றுனுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே. 43

மாணிக்கவாசகர். திருவாசகம்:
6. நீத்தல் விண்ணப்பம் :

மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தர கோச மங்கைக்கு அரசே
பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே. 110

ஔவையார். ஆத்திசூடி:
24. இயல்பலா தனசெயேல்.
30. அறனை மறவேல்.
35. கீழ்மை யகற்று.

ஔவையார். கொன்றை வேந்தன்:
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

ஔவையார். மூதுரை:
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 4

***

In English:

Chapter : 16

Forbearance

Thirukkural : 151

Scorn bearing magnanimity...




In Tamil

akazvAraith thAngkum nilam pOla, thammai
ikazhvAraip poRuththal thalai.

Meaning :
Like the earth which bears those who digs on her, bearing those who scorn on our self is the prime of virtues.

Explanation :
Like the earth bearing those dig on her, forbearing those scorn on our self is the primary of virtues.

When you take it in good sense and think that bearing with those who despises you and their ill treatments is only going to refine yourself, you automatically get the quality to respect them too and forbearance to with stand their scorns. Though lowered or laid, stroked or pocked, split or burnt, shortened or extended the purifying gold ones never lose their endurance or disposition. The souls which withstood the pressures only shine ever as diamonds.

Therefore, by hurting the scorners only the split widens and differences grow. The positive sense goes away but offending sense comes and only ruins remain. These are the methods adopted by small and petty minded who do not have patience. Instead with the patience, avoiding the useless arguments, rejecting the unnecessary slanders and perceiving only the truths are the ways adopted by the wise who wish to get improved. Considering with love, kind and compassion and by ignoring those slandering and blabbering ignorant, those non-sense uttering idiots, one can save the time and also without affecting the positive mind can continue the work as well.

Forbearance, peace and non-violence are not the deeds of failure. These are the real winnings and steps to the victory.

When you have gathered winnings and your triumph is acknowledged by the society, those who scorned will stand in shame with bowing their head. The greatness of forbearance will be yours on that day.

Therefore to have the good bearing with the scorners, one should have the greatness like the earth which withstands anything is the implicit meaning here.

Message :
To bear the scornful men is the prime virtue.

***

Friday, July 31, 2009

திருக்குறள்: 57


அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள்

: 57
Chapter : 6

Wife, Life's Partner

Thirukkural

: 57


சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை.


பொழிப்புரை (Meaning) :
மகளிரைச் சிறை வைத்துக் காக்கும் காப்பு என்ன பயனைத் தரும்? அவர் தம் நெஞ்சில் நிறைந்து நின்று காக்கும் காப்பே தலையானது.


விரிவுரை (Explanation) :
பெண்டிரைக் கணவர் சிறை வைத்துக் காக்கும் காப்பு என்ன பயனைத் தரும்? அவரின் நெஞ்சில் நிறைந்து நின்று அதனால் தற் காப்பில் அவர் தன் கற்பைக் காத்துக் கொள்ளுதலே தலையான காவல் ஆகும்.

கணவன் என்பவன் முன் சொன்னதே போல், கற்பெனும் கண்ணியக் காவலன் என்று இல்லாளுக்கு இருப்பினும் அதற்குப் பொருள் பிறரால் மனைவியருக்குத் துன்பம் வராது காப்பவர் என்று பொருள். அதைத் தவறாகப் புரிந்து கொண்டு இல்லாளை மனைக்குள் வைத்துச் சிறைப்படுத்திக் காவல் காத்து அவர் தம் கற்பைக் காவல் புரிவது என்பது ஒரு பயனையும் தராது. ஏனென்றால் பெண்ணின் கற்பிற்குக் காவல் உண்மையில் அவரது மனத் திடனே. எனவே அம் மனத் திடத்திற்குத் தக்க வகையில் கணவன் நல்லோனாய் அவர்தம் மனம் நிறையும்படி நடந்து கொண்டானேயானால் மடந்தை ஏன் வேறு எண்ணங்களுக்கோ அன்றில் வேறு யாரையோ நாடிச் செல்லப் போகின்றாள்? கணவனே தனக்கு எல்லாம் என்று நெஞ்சம் நிறைந்து அவர் கற்பென்னும் திண்மையுற்று விழங்குவார் என்பது நிச்சயம்.

பெண் பிள்ளைகளை வீட்டில் பூட்டி வைத்து கற்பைக் காப்பாற்ற இயலாது என்பதே உண்மை. அவர்கள் தங்களைக் தாங்களே காத்துக் கொள்ளுமளவிற்கு மனத் திடன் கொள்ளுமாறு செய்தலே இல்லத் தலைவனின் கடமை ஆகும்.

இக்குறளின் மூலம் பெண்ணடிமை செய்தல் ஆகாது என்பதைத் திருவள்ளுவர் தெளிவு செய்கின்றார். உண்மையில் ஒருவருக்குத் தலையாயக் காப்பு என்பது அவர் தம் உள்ளமே, வெளியில் இருந்து பெறுபவையெல்லாம் அதற்கு அப்புறமே.

ஒரு பெண் கற்பு நெறி தவறிச் செல்ல மனத்தே தவறி எண்ணிவிட்டால் எந்தச் சிறையாலும் காவல் காக்கவும் இயலாது, தடுக்கவும் இயலாது. எனவேதான் மனத்திட்பம் கொள்ளுதல் பெண்ணிற்கு அவசியம்.

அதே போல் பெண்ணே தன்னைச் சிறையில் அடைத்துக் கொண்டு உலகத்துடன் ஒன்றி வாழாது இருப்பதும் பயன் தராது. அது பிறத்தியான் தனக்குக் கெடுதலை எளிதாகச் செய்து கொள்ளும்படி அமைய வாய்ப்புண்டு. எனவே தன் உள்ளத்தில் திடத்துடன் விளங்குவதே எந்தச் சூழ்நிலையிலும் தன் கற்பைத் தானே காத்துக் கொள்ளும் வலிமையைப் பெண்ணிற்குக் கொடுக்கும்.


குறிப்புரை (Message) :
மகளிர் தம்மைக் தாமே காத்துக் கொள்ள மனத் திடத்துடன் நிறைந்திருப்பதே கற்பிற்குச் சிறந்த காவல், சிறையில் அடைத்துக் கொள்ளும் காப்பு பயனற்றது.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
நிறை - மிகுதி, பூரண, முழுவதும்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 435
தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே

திருமந்திரம்: 436
அரைகின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரகின் றவைசெய்த காண்டகை யானே.

திருமந்திரம்: 437
ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே

***


Tuesday, July 21, 2009

திருக்குறள்: 47


அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

47


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.


பொழிப்புரை (Meaning) :
இல் வாழ்க்கையை நல் இயல்பான நன் நெறிகளோடு வாழ்பவன் என்போன், முக்தியாகிய வீடு பேற்றை முயல்வோர் எல்லாருள்ளும் தலைமையானவன் ஆவான்.


விரிவுரை (Explanation) :
இல்லற வாழ்க்கையை அதன் நல் இயல்போடு; நல் அறத்தோடு வாழ்கின்றவன், வீடு பேறு முக்தியினை முயல்கின்ற அனைவருள்ளும் தலைமை ஆனவன் ஆவான். அதாவது இல் வாழ்வை நல் இயல்போடு வாழும் முறைமையே முக்தியைப் பெறும் வழிகளில் தலை சிறந்தது என்பது பொருள்.

முக்தியினைப் பெறுவதே மனித வாழ்வின் நோக்கம். எனவே அதுவே அனைவரின் முயற்சியும் ஆகும். ஆயின் அதை அனைத்தையும் துறந்து முயற்சிப்பதைக் காட்டிலும் அன்றில் இல்லறமற்ற வேறு எத்தகைய முயற்சிகளைக் காட்டிலும், நல் இல்லற வாழ்வோடு முயற்சிப்பதே மிகவும் சிறப்பு மிக்கதாகும். பற்றறுத்தவர்கள், பிரம்மச்சாரிகள், தவசிகள் இவர்கள் எல்லாரையும் விட இல்லறத்தானின் முயற்சியே தலை சிறந்தது என்பது பொருள்.

காரணம் இல் வாழ்வானே இயற்கை நியதியாகிய மனிதத் தொடர்ச்சிக்கு வித்திடுபவன். அத்தோடு இல் வாழ்க்கையையே தவமாகச் செய்கின்றவன். சந்தடி வாழ்க்கையை ஒதுக்கி அமைதி தேடப் பற்றறுக்காமல், வாழ்வியல் பிரச்சினைகளின் ஊடே அமைதியைப் பேணி வாழ்வதே இயல்பான வாழ்க்கை முறை. அம்முறையிலும் ஒழுக்கத்துடன் திகழ்ந்து அனைவரையும் பேணி, தன்னை நம்பியோருக்கும் வாழ்வு அளித்து, மற்றையோரைக் காட்டிலும் அதிகச் சுமைகளைத் தாங்கி செயல்படுகின்றான். எனவே அவன் முக்திக்கு முயலுவானே ஆகில் அவனுக்கே முன்னுரிமை என்பது நியாயம் தானே.


குறிப்புரை (Message) :
ஒழுங்கான இல்லற வாழ்வே வீடு பேற்றினைத் தரும் சிறந்த வழி.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
இயல்பினான் - இயல்பை ஒழுகினான்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 326
காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்
மாமல மும்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.

திருமந்திரம்: 327
வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.

திருமந்திரம்: 328
உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே.

திருமந்திரம்: 329
மயக்கும் சமய மலமன்னு மூடர்
மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.

***

Friday, July 17, 2009

திருக்குறள்: 43


அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

43


தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான், என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.


பொழிப்புரை (Meaning) :
மறைந்த மூதாதையர் (பிதிரர்), தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் மற்றும் தான் என்று ஆங்கே ஐ வகையினரையும் ஒழுகி ஓம்புதல் தலையாய கடமை.


விரிவுரை (Explanation) :
வாழ்ந்து மறைந்த மூதாதையர் அதாவது பிதிரர், இறை, வருகை தந்துள்ள விருந்தினர், சுற்றத்தார் எனும் சொந்தங்கள் மற்றும் தான் எனும் இந்த ஐ வகையினரையும் நெறி கெடாமல் ஒழுகி ஓம்புதல் தலையானது, இல் வாழ்க்கையில்.

தென் புலத்தார் என்பது தன் குலத்தின் இறந்த முன்னோர்களைக் குறிக்கும். தென் திசை கடல் கோள்களால் ஆட்பட்டமையால் அத் திசை இறந்தோருக்கு என்றாகியது. இறந்தோருக்குச் செய்யப் படும் நீர்க் கடன்கள் என்பவை அவர்களின் ஆத்ம சாந்திக்காக என்றாலும் அது உண்மையில் அவர்களை நினைவு படுத்திக் கொள்ளும் ஓர் அறச் செயலாகும். அதைப் போலவே இறை ஒழுகுதலின் அவசியத்தை ஏற்கனவே பேசி இருக்கின்றார். விருந்தினர் எனப்படுபவர் நாடி வந்துள்ள நண்பர்கள் அன்பர்கள் எனவே அவர்களை மனம் புண்படாத வாறு ஓம்புதல் பண்பு. சுற்றத்தார் என்பது தம்மைச் சுற்றியுள்ளோர் என்று பொருள் படும்படியான பிறப்பு மற்றும் திருமணத்தினால் உண்டான இயற்கையான உறவுகள், தொடர்புகள். அவர்களே உண்மையில் ஒருவரின் உடனடிச் சமூகம். இறுதியில் சொல்லப்பட்ட ’தான்’. அதாவது மற்றவர்களுக்கு முதலில் மதிப்பு, பிறகே தான் என்பதைக் குறித்தல் வேண்டும் என்பது ஒரு கலாச்சாரத்தின் பண்பு. ஆகவே வள்ளுவர் ‘தான்’ என்பதை இறுதியில் கூறி உள்ளார். ஆனால் உண்மையில் தன்னைப் பேண வேண்டியது ஒருவரின் முதல் கடமை. தான் நன்றாக இருந்தாலே மற்றவர்களைப் பேண இயலும்.

எனவே இந்த வகையிலான ஐந்து இடத்தோரையும் பேணி ஒழுகுதல் இல்லறத்தானின் தலையாய கடமை ஆகும் என்கின்றார் வள்ளுவர்.


குறிப்புரை (Message) :
முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் மற்றும் தன்னைப் பேணுதல் இல்லறம் ஒழுகுபவரின் தலையாய கடமை.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
தென்புலத்தார் - பிதிர்கள், சொந்த மூதாதையர்
ஒக்கல் - சுற்றத்தார்
ஆறு - ஒழுக்கம்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 254
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே.

திருமந்திரம்: 286
நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று
உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே.

திருமந்திரம்: 287
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி
அன்பில் அவனை அறியகி லாரே.

திருமந்திரம்: 288
ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில்
ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே.

திருமந்திரம்: 289
விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும் என் ஆருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.

ஔவையார். மூதுரை: 17
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.

ஔவையார். நல்வழி: 10
ஆண்டாண்டு தோரும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்.

Friday, June 12, 2009

திருக்குறள்: 9. எண்குணத்தானை வணங்கலே தலை!

அதிகாரம்

:

1.

கடவுள் வாழ்த்து

திருக்குறள்

:

9.

எண்குணத்தானை வணங்கலே தலை!

 

 

 

In English

 


கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
றாளை வணங்காத் தலை.

 

கோள் இல் பொறியிற் குணம் இலவே-எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை.

 

பொழிப்புரை :

இயக்கமற்ற ஐம்பொறிகளினால் பயன் ஏதும் இலாததைப் போன்றே, எட்டுக் குணங்களைக் கொண்ட இறைவனது தாளை வணங்காத தலையும் பயனற்றது.

 

விரிவுரை :

இயங்கு கோள் அற்ற பொறிகளினால் பயன் இராதே; அதைப் போன்றே எட்டுக் குணங்களைக் கொண்ட இறைவனின் தாளை வணங்கி ஒழுகாத தலையும் பயன் தராது.

 

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளில் குறைபாடு இருப்பின் அவற்றால் பயன் இராது. அதைப்போன்றே இறைவனைச் சிந்தியாத, வணங்கி ஒழுகாத தலையினாலும் பயன் இராது. இதில் தலை என்பதற்கு தலைமை என்றும், சிந்திக்கும் சக்தி என்றும், தலை எனும் உடலின் முக்கிய அங்க உறுப்பையும் பொருள் கொள்ளலாம்.

 

உடலுக்குத் தலையானது தலை, எனவேதான் அதைத் தமிழில் தலை என்றார்கள். அத்தகைய தலையே இறைவனை ஒழுகாவிடின் பயனற்றது என்ற வள்ளுவரின் நயம் அறிவீர்களாக.

 

எண் குணத்தான் என்பதற்குச் சுலபமாக அதாவாது எளிதாக எண்ணிக்கையற்ற, ஒப்பற்ற பண்புகளைக் கொண்டவன் என்றுச் சொல்லலாம். ஆயின் எட்டு வகையான குணங்களை இறைவனுக்கான அடிப்படைக் குணங்களாக அன்றைய எல்லா மதங்களிலும் கூறப்பட்டிருப்பதால் அதையே திருவள்ளுவரும் குறிப்பிடுகிறார் என்றே கொள்ள வேண்டும்.

 

 இறைவனின் எண் குணங்கள்: 1. தன்வயத்தன் ஆதல் 2. தூய உடம்பினன் ஆதல் 3. இயற்கை அறிவு, உணர்வினன் ஆதல் 4.முற்றும் உணர்தல் 5. இயல்பாகவே பாசங்கள் நீங்குதல் 6. பேரருள் உடைமை 7.முடிவிலா ஆற்றல் உடைமை 8.வரம்பு இல் இன்பம் உடைமை.

 

(தன்வயத்தன், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, கட்டின்மை, பேரருள், எல்லாம்வன்மை, வரம்பிலின்பம்)

 

குறிப்புரை :

எண் குணத்து இறைவனைச் சிந்தித்துப் பணியாத தலை அர்த்தமற்றது.

 

அருஞ்சொற் பொருள் (Synonyms) :

கோள் இல்: குறிக்கோள் அற்ற, செயற்கோள் அற்ற

பொறி: இந்திரியம்

குணம் இல: குணமற்ற, பயனிலாத

 

ஒப்புரை :

திருமூலரும் தனது திருமந்திரத்தின் கடவுள் வாழ்த்தில் கடவுளிற்கு எண் குணத்தைக் குறிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

திருமந்திரம்: 1 (கடவுள் வாழ்த்து)
ஒன்ற அவன்தானே இரண்டு அவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழு பார்ச்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே.

 

திருவிளையாடல் திரைப்படத்தில் ஔவை பாடும் கண்ணதாசனின் பாடலும் இங்கே பொருத்தம் கருதி நினைக்கத்தக்கது. மேலே சொன்ன திருமூலரின் பாடலுக்கு ஓரளவு ஒத்துப் போவது. ஆனால் அவர் சொன்ன எட்டும் நாம் மேலே விளக்கப் பகுதியில் கண்டவாறு என்று அறியவும். திருமூலரின் ஒன்றிலிருந்து ஏழுவரைக்கும் ஆன விளக்கம் விரிவு கருதி இங்கே குறிக்கப்படவில்லை.

 

ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிரு கை வேலவனைப் பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவையொன்றுதான் என்று சொன்னான்வன்
தான்பாதி உமைபாதி கொண்டானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்
காற்றானவன் ஒளியானவன்
நீரானவன் நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன் அன்பின்
ஒளியாகி நின்றானவன்...

 

எண்ணற்ற குணத்தான் என்ற பொருள் தரும் பாக்கள்:


மாணிக்கவாசகர் : திருவாசகம்: 21
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
...

மாணிக்கவாசகர்: கீர்த்தித் திரு அகவல்.
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
...

 

அட்டாங்க யோகத்தைக் கடைப்பிடித்து சித்தர்கள் அட்டமா சித்தி கைவரப் பெற்றவர்கள் என்பார்கள். அட்டமா சித்திகளும் எட்டு என்பதால் இங்கே குறித்துள்ளேன். அவை எண் குணத்தைப் பிரதிபலித்தாலும் இறைவனின் எண் குணங்கள் இவற்றையும் மீறியது எனத் தெளியவும்.

 

1.அணிமா: நுண்மை, அணுத்தன்மை. அணுவினும் மிக நுண்ணிய வடிவு பெறல். சிறிதாதல்.
2.மகிமா: பருமை. மேருவினும் பேருருப் பெற்று நிற்றல். பெரிதாதல்.
3.லகிமா: மென்மை. சேறு முதலியவற்றில் இயங்கினும் அழுத்திலின்றிக் காற்றினும் மெல்லிய வடிவுற்று நிற்றல். இலேசாகுதல்.
4.பிராத்தி: விரும்பியதெய்தல். மனத்தால் விழையப்பட்டன அனைத்தும் விழைந்தவாறே பெறுதல். எல்லாவற்றையும் ஆளுதல்.
5.கரிமா: விண்டன்மை. புலன்களை நுகர்ந்தும் அவற்றில் தொடக்குண்ணாமை. பொன் போலப் பளுவாதல்.
6.வசித்துவம்: கவர்ச்சி. உலகனைத்தையும் தன் வயமாக்கல். எல்லாரையும் தன் வசப்படுத்துதல்.
7.பிரகாமியம்: நிறைவுண்மை. கூடுவிட்டுக் கூடுபாய்தல்.
8.ஈசத்துவம்: ஆட்சியனாதல். பிரமன் முதலியோர் மாட்டும் தன் ஆணை செலுத்தி நிற்றல். அனுபவித்தல்.

 

சமண மதத்திலும் கடவுளை எண்குணத்தான் என்கிறார்கள். அவை:


1.     முற்றுமுணர்தல் (எல்லையற்ற ஞானம்)
2.     முடிவிலா ஆற்றல்
3.     எல்லையற்ற பார்வை
4.     எல்லையற்ற ஒழுங்கு
5.     அழியா இயல்பு
6.     சார்பின்மை
7.     பற்றின்மை
8.     அருவத்தன்மை (உருவிலி)

 

•••

 


 

Chapter

:

1.

The Praise of The God

Thirukkural

:

9.

The head is to worship the eight characteristics, the God!

 

 

 

In Tamil

 


 

 

kOL il poRiyiR kuNam ilavE eNN kuNaththAn
thALai vaNangAth thalai.

 

Meaning :

Like the palsied sense, the head that doesn’t bow and pray the feet of the eight characteristics GOD, is useless.

 

Explanation :

Non functional devices are useless; similarly, a head that does not worship the feet of the Lord, which has eight qualities, is useless.

 

If there is a defect in the ear, mouth, eye, nose and ear machines, they are useless. In the same way, a head that does not think or worship the Lord is useless. The head can mean the chiefdom and the power to think, and also mean the head the main organ of the body.

 

The head is the prime or crown of the body, that is why it is called the head in Tamil. Such a head itself is useless if it does not worship the Lord, is the niceties of Valluvar to cherish.

 

It is easy to say that contemplate or countless is a quality, that is, one can easily say that one has innumerable and incomparable qualities. But it should be noted that Thiruvalluvar also mentions the eight types of qualities of, as the basic qualities of God as in all the religions of the day.

 

Number qualities of the Lord:


1. Peerless – Superiorless – Self-absorbing
2. Always in Chaste form as Onkara
3. Natural Sensed
4. Omniscient
5. By nature, bondless
6. Height of Grace
7. Omnipotent
8. Limitlessly Blissful

 

(Spontaneity, purity, natural knowledge, omniscience, boundless, gracious, omnipotence, blissful)

 

Message :

The head that does not contemplate and bow the God of eight characteristics is useless.

 

References :

It is noteworthy here that Tirumular also refers to the eight qualities of God in his Thirumanthiram God Greetings.

 

Thirumanthiram: 1 (KadavuL vAZhthu)
Ondra avanthAnE iraNdu avan innaruL
Nindranan moondrinuL nAngu uNarndhAn aindhu
Vendranan Aru virindhanan Ezhu pArch
Chendranan thAn irundhAn uNarndhu ettE.

 

Kannadasan’s song sung by Auvai in the movie Thiruvilaiyadal is also relevant here. Somewhat in line with Tirumular’s song above. But know that what he said is what we saw in the description section above. The description of Tirumular from one to seven is not mentioned here in detail.

 


He is the only one;
Double in form
Three in the formed Senthamizh
The four in the good scripture
Fifth as Namachchivaya
Six in the tastes
Seven in melodic tones
Ettanavan in Siddhi objects
Navarasa Viththanavan in sweetness
Ten in fondest in the Heart
He was the recipient of twelve hand Velavan
The Endless and is the first of source
One the Between the Front and the Back
The one who stood as a man and a woman
He said they were one only
He is half self and gained half of Uma
Giver of exact half to femininity
The wind is He; The light is He;
The Water is He; The Fire is He;
As Yesterday, As Today, Stable forever
Stood as the pouring one; And
Stood as the loving light... 

 

Songs that mean as innumerable virtues:


MAnikkavAsagar: ThiruvAsagam: 21
kaN nuthalAn than karuNaik kaNkAtta vandhu eidhi
eNNuthaRku ettA ezhil Arkazhal iRainji
viN niRaindhu maN niRaindhu
mikkAi, viLangu oLiyAi,
eN iRandha ellai ilAdhAnE nin perumseer
pollA vinaiyEn pugaZhumARu ondRu aRiyEn
...

MAnikkavAsagar: keerthithiruagaval:
Thillai moothoor Adiya thruvadi
Pal uyir ellAm payindranan Agi
eNNil palkuNam ezhil peRa viLangi
maNNum viNNum vAnOr ulagum
thunniya kalvi thOtriyum azhiththum
...

 

The Siddhas who practiced Attanga Yoga are said to have attained Attama Siddhi. I have mentioned here because Attama Siddhis are also eight. Although they reflect the eight qualities, know that the eight qualities of the Lord transcend these as well.

 

1. Anima: subtlety, atom. Obtaining the most microscopic shape of the atom. Turning of tiny.
2. Magima: Obesity. Standing as larger than Mount Meru. Expansion.
3. Lahima: tenderness. Becoming of thinner than the air even while working such as mud, etc.,. Becoming of lighter, almost with no weight.
4. Prati: Doing the desired. Getting everything desired by the mind as desired. Ruling of everything and having unrestricted access to all places.
5. Karima: The nature of the sky. Consumption of senses and inactivity in them. Weight like gold. Becoming of infinitely heavy.
6. Vasitvam: Glamour. Enticing of the entire world. Enthralling everyone and the power to subjugate all.
7. Prakamiyam: Completion. The power to transmigrate into other bodies.Realizing whatever one desires.
8. Easatvam: Becoming a ruler. Ruling of all like Brahma. Possessing the absolute Lordship. Enjoying.

 

In the Jain religion, God is said to have eight qualities. They are:


1.     Perfection (Infinite Wisdom)
2.     Infinite energy
3.     Infinite vision
4.     Infinite order
5.     Immortal nature
6.     No dependence
7.     Detachment
8.     Shapelessness (Imageless)

 

•••