Saturday, August 22, 2009

திருக்குறள்: 77

அதிகாரம்

: 8

அன்புடைமை

திருக்குறள்

: 77
Chapter : 8

Love

Thirukkural

: 77


என்பு இலதனை வெயில் போலக் காயுமே-
அன்பு இலதனை அறம்.

பொழிப்புரை :
எலும்பு இலாத புழுக்களை வெயில் காய்த்து வருத்துமே அதைப்போல அன்பு இலாதவரை வருத்தும் அறம்.

விரிவுரை :
எலும்பற்ற உயிரிகளான புழுக்களை வெயில் காய்ந்து வருத்திவிடுமே, அதைப் போன்றே அன்பற்றவர்களைக் காய்ந்து வருத்திவிடும் அறம்.

அன்பிலாதவர் எலும்பற்ற புழுக்களைப் போல அறம் எனும் வெயிலில் காய்ந்துவிடுவர் என்பது பொருள்.

ஆக அன்புடையோர், முதுகெலும்பு உடையோராய் காய்த்தல்களிலிருந்து தப்பிவிடலாம். எனவே மக்காள் அன்பு கொள்ளுவீர்.

அன்பு என்பது கருணை பொழியும் ஓர் உணர்வு; அன்புடையோர் என்போர் ஈர இதயம் உடையோர். அற வழியில் அவர்பால் எந்தக் காய்ச்சலும், வறட்சியும் துன்பத்தை ஏற்படுத்த முடியாது என்பது துணிபு. மாறாக அன்பிலாதோர் கருணை அற்றோர், நெஞ்சத்தில் ஈரமற்றோர். எந்தக் காய்ச்சலிலும் அவருக்குத் துன்பமே அதிகம்; எனவே அவர், புளுக்கள் போல், எளிதாகச் சுருண்டு விடுவர் என்பது ஈண்டு நோக்கத் தக்கது.

பிறர் துன்பங் கண்டு வருந்தும் தாய் உள்ளமும், ஏழைகளுக்காய் இரங்கும் கருணை இதயமும், அழுவோரைத் தேற்றும் அன்பு நெஞ்சங்களும், ஆதரவற்றோரை அணைக்கும் கரங்களும் என்றும் அன்பைப் பொழியும் மானுடச் சுரப்பிகள்; வற்றா ஊற்றுக்கள். அவரைக் காய்க்கும் துன்பம் அறத்தின்பால் வருமா? வந்தால் அது அறமா?

எனவே அன்பில்லாதவரே காய்ப்பர், காய்க்கப் படுவர், கருகுவர்.

குறிப்புரை :
அன்பற்றவர் வாழ்வில் காய்ந்து சுருங்கித் துன்புறுவர்.

அருஞ்சொற் பொருள் :
என்பு - எலும்பு

ஒப்புரை :

திருமந்திரம்: 277
கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.

ஔவையார். ஆத்திச்சூடி: 92
மூர்க்கரோடு இணங்கேல்

ஔவையார். கொன்றைவேந்தன். 40
தீராக் கோபம் போராய் முடியும்.

மாணிக்கவாசகர். திருவாசகம்: 5. திருச்சதகம்.
9. ஆனந்தப் பரவசம்.:

புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்
சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தான் சேர்ந்தாரே. 90

தாராய் உடையாய் அடியேற்கு உன்தான் இணை அன்பு
போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான்
ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆமிலைத்து இங்கு உன்தான் இணை அன்புக்கு
ஆராய் அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே. 91

அழுகேன் நின்பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த
மெழுகே அன்னார் மின்ஆர் பொன் ஆர் கழல் கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே
பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னைப் பணிகேனே. 92

பணிவார் பிணி தீர்ந்து அருளிப் பழைய அடியார்க்கு உன்
அணி ஆர் பாதம் கொடுக்கி அதுவும் அரிது என்றால்
திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித்
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே. 93

யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே. 94


***

In English: (Thirukkural: 77)

enpu ilathanai veyil pOlak kAyumE-
anpu ilathanai aRam.

Meaning :
The Boneless wither in the sun, likewise, the loveless suffer in the virtues

Explanation :

The hot sunlight withers the boneless worms; similarly, the virtue suffers the Loveless.

Loveless are similar to the boneless to suffer in the light of virtue, is the meaning.

Also it means that the Loving can sustain and escape in case of withering as they have the bones. Therefore guys, bear the Love in you.

Love is the emotion of kindness. Loving have the kind and wet heart. Therefore in their virtuous path, there can’t be any withering or dryness to create sufferings to them. On the other hand, Loveless do not have kindness or wetness in their heart. Therefore they suffer any withering the most. Hence they are compared to the boneless in their sufferings for the withering out.

The motherly hearts which shed tears for other’s sufferings; the kind hearts which grieves the poor, the graceful hearts which consoles the weeping, the noble hearts which embraces the orphans, all of them are the Love pouring human glands, non stopping human Love fountains. Will there be chance of withering them out in the path of virtue? If so will it be the virtue?

Therefore only Loveless go dry, wither, burnt and suffer.


Message :
The loveless in life will wither, shrink and fade.

***



0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...