Monday, September 14, 2009

திருக்குறள்: 98 (சிறுமையற்ற சொல் இன்பம் தரும்...)

அதிகாரம்

: 10

இனியவை கூறல்

திருக்குறள்

: 98
Chapter : 10

Amiability

Thirukkural

: 98

சிறுமையுள் நீங்கிய இன்சொல், மறுமையும்
இம்மையும், இன்பம் தரும்.

பொழிப்புரை :
சிறுமை உள்நோக்கம் அற்ற இனிய சொல், மறுபிறவியிலும், இப்பிறவியிலும் இன்பம் தரும்.

விரிவுரை :
துன்பம் தரும் இழிய கருத்துக்களை உள்நோக்கம் கொள்ளாத இனிய சொல், இகத்திலும், பரத்திலும் இன்பம் தரும்.

அதாவது ஒருவர் வஞ்சிப் புகழ்சி இல்லாது பேசும் இனிய சொல், அவர் வாழ்கின்ற போழ்தும், மறைந்த பின்னரும் இன்பத்தைத் தரும். ஒருவருக்கு மறைந்த பின்னரும் கிட்டும் இன்பம் என்பது மாறாத கீர்த்தி, புகழ் ஆகும். மேலும் கேட்பவருக்கும் சொல்லப்பட்ட இனிய சொற்கள் எக்காலத்திலும் நினைவில் நின்று இன்பம் தருவதாகும்.

எனவே ஒருவரைப் பழிக்காது மாறாக அவரின் நற்குணங்களைப் பாராட்டி இனிய மொழியில் பேசுதல் வேண்டும். பாராட்டுக்கள் உளப் பூர்வமாகவும், உண்மையாகவும் இருத்தல் அவசியம். பாராட்டுக்களை வழங்குவதில் வள்ளல்களாக நாம் இருந்தால், உண்டாகும் இன்பத்தின் பங்குதாரர்களாக என்றென்றும் இருப்போம்.

குறிப்புரை :
சிறுமைக் குணமற்ற இனிய சொல் எக்காலத்திலும் இன்பம் தரும்.

அருஞ்சொற் பொருள் :
சிறுமை - துன்பம் தரும் இழி கருத்து, இழிச் சொல், கீழ்த்தரமானது, தாழ்ந்தது, அற்பம்.
மறுமை - மறுபிறவி, விண்ணுலக வாழ்வு
இம்மை - இக வாழ்வு, இப்பிறவி வாழ்க்கை.

ஒப்புரை :

திருமூலர். திருமந்திரம்:
அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணா஢ல்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரியயற் காமே. 103

பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி
தன்னில் ஆகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும்
சொல்நிலை சோடம் அந்தம் என்று ஓதிடே. 75

மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை
கல்லியல் ஒப்fபது காணும் திருமேனி
பல்லியல் ஆடையும் பன்மணி தானே. 1082

மாணிக்கவாசகர். திருவாசகம்.
28. வாழாப்பத்து - முத்தி உபாயம் :

பந்தனை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
அந்திமில் அமுதமே அருள்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை
வந்துய்ய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 455

பாவநாசாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேவர் தந்தேவே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே
மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 456

பழுதில்சொல் புகழால் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறைச் சிவனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்
மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 457

ஔவையார். ஆத்திச்சூடி:
வஞ்சகம் பேசேல். 27

ஔவையார். கொன்றைவேந்த்ன்:
ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. 12

ஔவையார். நல்வழி: 23
வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.

***

In English: (Thirukkural: 98)

siRumaiyuL nIngiya insol, maRumaiyum
immaiyum, inbam tharum.

Meaning :
An un-mean spirited sweet word yields happiness to this life and the next.

Explanation :

Mean free sweet words yield happiness to this life and then after.

That is when one speaks pleasant words with no veiled criticism to others; it yields happiness during his current lifetime and later. Happiness even after death is nothing but the unmarred goodwill and adoring acclaims. The pleasant words and praises spoken will be cherished for long time giving ever-lasting happiness for the receiver too.

Therefore, one should never be abused instead should be praised for the goodness in them in pleasant words. Praises must be heartfelt and truthful. When we are the philanthropists of praising others, we shall be the partners for the joy it produces forever.


Message :
Mean free sweet words yield happiness ever.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...