Saturday, December 12, 2009

திருக்குறள்:161 (பொறாமை இலாத இயல்பு...)

அதிகாரம்

: 17

அழுக்காறாமை

திருக்குறள் : 161

பொறாமை இலாத இயல்பு...

In English

ஒழுக்கு ஆறாக் கொள்க - ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

பொழிப்புரை :
ஒழுக்க நெறியாகக் கொள்க; ஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமை இலாத இயல்பினை.

விரிவுரை :
ஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமை இலாத இயல்பினை, ஒழுக்க நெறியாகக் கொள்ள வேண்டும்.

மனதில் பொறாமை எனும் அழுக்கு அற்ற தன்மையினை, பரிசுத்த, மாசற்ற, குற்றமற்ற நிலையினை தனது வழக்கமான இயல்பாகக் கொள்ளுவதையே தனது ஒழுக்க நெறியாகக் கொண்டு பேணி வருதல் வேண்டும்.

பிறரின் வளர்சி, வெற்றி, உடைமை கண்டு பொறுக்காத தன்மையாகிய ‘பொறாமை’ எனும் குணம் மனதில் உருவாகும் அழுக்காகும். அத்தகைய மாசு, வயிற்றெரிச்சல், பேராசை தன்னை முன்னேறவிடாத எண்ணத்தை ஏற்படுத்தி தீ வழி செல்லத் தூண்டி விடும். அனைத்து தீய உப எண்ணங்களான கோபம், பச்சாதாபம், பொய், களவு, சூது, வஞ்சகம், சூட்சி, விதண்டா வாதம், குறுக்கு புத்தி, குறுகிய மனப்பான்மை, ஆத்திரம், ஆணவம், மயக்கம் அனைத்தும் ஒன்றோடு ஒன்றாகக் கிளைத்தெழுந்து, ஆறாகச் சுரந்து முன்னேற்ற எண்ணங்களை முடக்கி ஒருவரைத் தீயவராய் ஆக்கி விடும்.

மாறாக பொறாமை அற்ற தன்மையில் பிறரின் வளர்ச்சியில், வெற்றியில் பெருமிதமும், அவரது உடைமையில் சலனமும் கொள்ளாது மேன்மேலும் அவரை வாழ்த்தத் தலைப்படும் மனது நல்லெண்ணங்களால் நிறைந்து வெற்றிப் பாதையிலேயே செல்லும். அவரது நெஞ்சில் தீயவை சுரப்பதில்லை. எனவே பொறாமையற்ற மனதில் முன்னேற்றமும், வளர்ச்சிகளும் ஆழ்மனத்தே கிளர்ந்து ஆக்கங்களாகி சிறப்புக்களை நல்கும். எனவே மனத்தில் பொறாமை அற்ற தன்மையோடு, பிறர் நலன் பெற வாழ்த்தி ஒழுகுவதே நல் ஒழுக்கமாகும்.

இவ்வாறு பொறாமை அற்று மனத்தைப் பேணுவதே ஒருவரின் பரந்த மனப்பான்மை, தூய்மையான உள்ளம் என்பனவாகும். எதையும் தாங்கும் இதயம் என்பது பொறுமைக்கு மாத்திரம் அல்ல, பொறாமை அற்ற தன்மைக்கும் பொருந்தும்.

வாழ்த்துகின்ற இதயங்களே நல் வாழ்க்கையினைப் பெறும். நாம் எதைக் கொடுக்கிறோமோ அதையே பன் மடங்கில் பெறுகின்றோம். இது சத்தியம். எனவே இதயத்தில் பொறாமை இல்லாமை என்பதோடு பிறரை மனப்பூர்வமாக வாழ்த்துவதையும், இயன்றால் பரிசில்கள் வழங்குவதையும், சபை அறியத் தயக்கமின்றித் தாராளாமாகப் பாராட்டுவதையும் ஒருவர் ஒழுக்கமாகவும், பழக்கமாகவும் கொள்ளுதல் வேண்டும்.

எல்லோரும் நலம் வாழ நாம் வாழ்த்துவோம் ...
நலம் யாவும் நமக்காக நமை வாழ்த்துமே.

குறிப்புரை :
நெஞ்சில் பொறாமை அற்ற இயல்பே பேணிக்காக்க வேண்டிய நல் ஒழுங்கு.

அருஞ்சொற் பொருள் :
ஆறு - வழி, சமயம், நெறி, அறம், இயல்பு, விதம், தணி, குறை, குணமாகு, அமைதிஅடை, அடங்கு, நதி

ஒப்புரை :

திருமந்திரம்: 211.
கற்குழி தூரக் கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.

திருமந்திரம்: 254.
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே.

மாணிக்கவாசகர். திருவாசகம்.
சிவபுராணம்:

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

ஔவையார். ஆத்திசூடி:
27. வஞ்சகம் பேசேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
16. கிட்டாதாயின் வெட்டென மற

ஔவையார். மூதுரை:
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25

ஔவையார். நல்வழி:
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 8

***

In English:

Chapter : 17

Un-enviousness

Thirukkural : 161

State of no enviousness...




In Tamil

ozhukku ARAk koLka - oruvan than nenjsaththu
azhukkARu ilAtha iyalbu.

Meaning :
One should preserve the non jealous nature in his heart as the good virtue.

Explanation :
One should maintain the state of un-enviousness in his heart as the virtuous discipline.

Tidy and serene state with no envy in the heart but with pure, dirty less and sinless qualities one should preserve it as the default nature and fundamental discipline.

The envy is the filthy thought occurring in the mind when no bearing for others growth, victory and possession. Such filthiness, larger desire and grief create stagnant thoughts and leads to bad paths. All subsidiary thoughts such as anger, pity, arrogance, bewilderment, lie, deceit, arguments, narrow-mindedness and shortsightedness emerge, secrete and flow to spoil the positive thoughts and makes one as wicked person.

On contrary the un-enviousness does not worry about others growths or possession. In fact it appreciates others victories and successes. Mind gets filled with good thoughts and hence travels only in the winning path. In such mind no bad ideas get secreted. Therefore in the un-envious mind developments, prosperity gets created subconsciously and leads to successful deeds and thus to glory. Therefore, the good virtue is nothing but the discipline of the mind to be without enviousness and wishing others to get goodness.

Preserving such un-enviousness mind is what known as one's broad mind and pure heart. Forbearance is not only to the heart and mind but also applicable to the state of un-enviousness.

Wishing hearts only get good life. Whatever we have offered to others only get backs to us in multitudes by the nature. It is the promise of nature. Therefore one should maintain the following traits as the basic disciplines of life: no envy in the heart, heartfelt wishing to others, possibly offering gifts and no hindrance in appreciating others in the gatherings.

Let us wish for all to get goodness in life...
All Goodness will wish us for our success.

Message :
Non jealous nature in the heart is the good virtue to be preserved.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...