Friday, July 3, 2009

அதிகாரம்: 3. நீத்தார் பெருமை - முடிவுரை


அத்தியாயத்தில் பெற்றவை:


21. பற்றற்ற ஒழுக்க நெறி நின்றவரே காலங்களை விஞ்சிய பெருமைக்கு உரியவர்.

22. பற்றற்ற வாழ்வின் மேன்மை அளவிடற்கரியது

23. தெளிந்த சிந்தனையில் மேற்கொண்ட துறவறமே பெருமைக்கு உரியது

24. ஐம்புலனை அடக்கும் துறவியரே வரம் தரும் வித்தாவர்

25. ஐம்புலனை அடக்கினால் இந்திர பதவியும் கிட்டும்

26. செயற்கரிய செயல்களைச் செய்வோர் பெரியோர், அவருக்குத் துறவறம் உதவும்.

27. ஐம்புலனை அடக்கியோருக்கு உலகமும் வசப்படும்

28. பற்றற்ற துறவியோரின் வாக்கு பொய்ப்பதில்லை

29. பற்றற்றவருக்கு சினம் கணப் பொழுதும் தங்காது

30. நல் ஒழுக்கமும், அனைத்து உயிரிடத்தும் அன்பும் சிறந்த துறவியோருக்கான தகுதிகள்.


குறிப்புரை (Message) :
பற்றற்று இரு, நல் ஒழுக்கத்தைப் பேண், புலன்களை அடக்கு, அரியன செய், உலகம் வசப்படும், அன்போடு இரு, மேன்மை அடைவாய்.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...