Friday, July 24, 2009

அதிகாரம்: 5. இல்வாழ்க்கை - முடிவுரை


அதிகாரம்

:

5 இல்வாழ்க்கை முடிவுரை


அத்தியாயத்தில் பெற்றவை:

41. இல்லறத்தை மேற் கொண்டவரே மற்றையோர் அனைவருக்கும் நல்லறத்தின் கண் துணை
ஆவார்.

42. துறவிகளுக்கும், வறியவருக்கும், இறந்தாருக்கும் இல்லற வாழ்வினனே துணை ஆக இருக்க
வேண்டியவன்.

43. முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் மற்றும் தன்னைப் பேணுதல் இல்லறம்
ஒழுகுபவரின் தலையாய கடமை.

44. பகுத்து உண்ணுதல் எப்போதும் நிறைவான வாழ்வைத் தரும்.

45. இல்லற வாழ்க்கையில் பண்பும், பயனும் எனப்படுவது எல்லோரிடத்தும் அன்பும், நற்
செயல்களையும் உடையவராக இருத்தலே.

46. இல்லற வாழ்க்கையை நல் அற நெறியில் நடத்தினாலேயே போதும்; வேறு நெறிகளைப்
பின்பற்றத் தேவையே இல்லை.

47. ஒழுங்கான இல்லற வாழ்வே வீடு பேற்றினைத் தரும் சிறந்த வழி.

48. அறம் தவறாத நல் இல்லற ஒழுக்கமே மேன்மை பொருந்திய தவம்.

49. நல் அறமான இல் வாழ்வில் யாரையும் பழித்தல் கூடாது; யாரும் பழிக்கும்படி நடக்கவும்
கூடாது.

50. முறையான இல் வாழ்வைச் சிறப்பாக மேற்கொண்டவர் அனைவராலும், தெய்வம் போல்
போற்றப்படுவர்.



குறிப்புரை (Message) :
இல்லற வாழ்க்கையே ஏனையோருக்கும் துணை தருவது, மேன்மையானது. இல்லறம் மேற்கொண்டவரே அனைவருக்கும் துணையாவர், அனைவரையும் பேணுதல் அவரது கடமை. பகுத்து உண்ணுதல், அன்பும், அறனும் கொள்ளுதல், ஒழுக்கத்துடன் வாழுதல் அவருக்குப் பெருமையையும், வீடு பேற்றையும், தெய்வத்தை ஒக்கும் புகழையும் நல்கும்.


***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...