Saturday, July 25, 2009

அதிகாரம்: 6. வாழ்க்கைத் துணை நலம்.

அதிகாரம்: 6. வாழ்க்கைத் துணை நலம்



இல்லற வாழ்விற்கு இல்லத் தலைவனும், தலைவியும் ஒருவருக் கொருவர் துணைவர் ஆவர். இல் வாழ்க்கை பற்றி சென்ற அதிகாரத்தில் பேசியவர், ஆதலின் இங்கே அடுத்ததாக இல் வாழ்வின் துணை நலம் பற்றிப் பேச விளைகின்றார்.

உலகில் இல்லற வாழ்வின் பங்குதாரரை துணைவர் என்றும், அதன் குணத்தை இங்கே துணை நலம் என்றும் விளக்குகின்றார். இல்லத் தலைவனிற்கு அவன் வாழ்வில் துணை நிற்கும் பெண்ணின் பெருமை இல்லத்திற்கு அரசியென்றும், மனையாள் என்றும் குறிக்கப்படும். அத்தகைய துணைவியாரின் குண நலன்களே இங்கே பேசப் படுகின்றது.


ஒப்புரை (Reference)
ஔவையார். மூதுரை: 21
இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே யாமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

ஔவையார். நல்வழி: 24
நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்(கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை.



குறிப்பு:

இந்த அதிகாரத்தில் உள்ள குறள்களுக்கு மற்றவர்களிடம் இருந்து அதிகம் மாறுபட்ட விளக்கங்கள் தரப்பட்டுள்ளது என்பதை அறிந்து நோக்கவும்.

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...