Monday, June 22, 2009

அதிகாரம்: 2. வான் சிறப்பு - முடிவுரை


அத்தியாயத்தில் பெற்றவை:

11. வான் மழையே உலகை வாழ வைக்கும்அமிழ்தம்.

12. உணவை உண்டாக்கவும் தானும் உணவாகவும் இருப்பது மழையே.


13. மழை பொய்ப்பின் உலகின் பசியைக் கடல் நீரும் தீர்க்க இயலாது.


14. நல்ல மழை இல்லையெனில் உழவுத் தொழில் குன்றிவிடும்.


15. ஆக்கவும், அழிக்கவும் வல்லது மழை.


16. மழையில்லாது பசும்புல்லும் தலை காட்டாது.


17. கருமேகம் உருவாகா விட்டால் பெருங்கடலும் வளம் குன்றும்.


18. வானோருக்குப் படையல் மழை இருந்தாலதான்.


19. தானம், தவம் எல்லாம் மழை இருந்தால் தான்.


20. உலகிற்கும், வாழ்விற்கும் மழை மிக அவசியத் தேவை.


குறிப்புரை (Message) :
மழையைப் போற்று, மதித்து ஒழுகு, நீரைச் சேகரி. பிழைத்துக் கொள்வாய். நன்றாக வாழ்வாய்.

***


0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...