Monday, November 16, 2009

திருக்குறள்:142 (தீயவருள் பெரிய அறிவிலி...)

அதிகாரம்

: 15

பிறனில் விழையாமை

திருக்குறள் : 142

தீயவருள் பெரிய அறிவிலி...

In English

அறன்கடை நின்றாருள் எல்லாம், பிறன்கடை
நின்றாரின், பேதையார் இல்.

பொழிப்புரை :
அறனற்ற காமத் தீநெறி நின்றாருள் எல்லாம், பிறன் மனைவியை விரும்பி அவன் இல்லத்து வாயிலில் நின்றவரைப் போன்ற அறிவிலிகள் இல்லை.

விரிவுரை :
அறனற்று காமத் தீயொழுக்கத்தில் நின்றாருள் எல்லாம், பிறன் மனைவியை மோகித்து அவன் இல்லத்துப் புழக்கடை வாயில் நின்றவரைப் போன்ற அறிவிலிகள் இல்லை.

அறமற்ற செயலாகிய தீய ஒழுக்கத்தில், காமத்தின் பால் இழிவுற்று விலைமகளிர்பால் நின்ற தீயவர்கள் கூட அறிவற்று நின்றாலும் அவர்கள் பிறன் மனையாளை மோகித்து அவன் வாயிலில் சென்று நின்றவனைப் போன்ற அறிவிலிகள் அல்ல. எனவே காமத்தின் பால் முறை தவறும் முட்டாள்களுள்ளும், பிறன் மனை விழையப் புறப்பட்டவனே பெரிய அல்லது சிறந்த முட்டாள் என்பது மறை பொருள்.

காமத்தீயால் அறிவிழந்து, கணிகையரை நாடியவவர்களின் அறிவீனம் ஓரளவு பரவாயில்லை. ஏனென்றால் ஏற்படும் துயரில் ஈடுபடும் தனி மனித ஒழுங்கீடு மட்டுமே பாதிக்கப்படும் என்று கொள்ளலாம். அன்றில் ஈடுபட்டவன் குடும்பம் மட்டுமே அவமானப்படலாம் என்று கருத இடமுண்டு. ஆனால் பிறன் மனை விழையும் முட்டாளால், இரு குடும்பங்கள் நாசமாகப் போகின்றன என்பது மறை பொருள்.

தீயவற்றுள்ளும் மோசமான அறிவிலிகளே பிறன் மனைவியரை மோகித்து நிற்பவர்கள்.

குறிப்புரை :
அறமற்ற அறிவீனத்தில் பிறன் மனவியை மோகிப்பதே பெரிய அறிவீனம்.

அருஞ்சொற் பொருள் :
அறங்கடை - அறத்தின் புறமாகிய தீயறம்.
பிறன்கடை - பிறத்தியவனின் வீட்டுப் புழக்கடை வாயில்.

ஒப்புரை :

திருமந்திரம்: 203
பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொணட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.

மாணிக்க வாசகர். திருவாசகம்:
24. அடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம்
பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில்நின் கழற்புaணைகொண்
டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய
அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 411

ஔவையார். ஆத்திச்சூடி:
88. மாற்றானுக் கிடங்கொடேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை

ஔவையார். மூதுரை:
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25

பட்டினத்தார்: திரு ஏகம்ப மாலை: 12
காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமல் சுகமென்று நாடும் இத் துற்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா! கச்சி ஏகம்பனே!

சிவவாக்கியர்: 233
பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறைந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீடு அடங்குமே.

சிவவாக்கியர்: 61
மை அடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
ஐஇறந்து கொண்டுநீங்கள் அல்லல்உற்று இருப்பிர்காள்
மெய்அறிந்த சிந்தையாய் விளங்குஞானம் எய்தினால்
உய்யறிந்து கொண்டுநீங்கள் ஊழிகாலம் வாழ்வீரே.

***

In English:

Chapter : 15

Non-adultery

Thirukkural : 142

The greatest fool among the wicked...




In Tamil

aRankadai ninRAruL ellAm, piRankadai
ninRArin, pEthaiyAr il.

Meaning :
Amongst all those non virtuous standers, there is no greater fool than that who stands other's door for adultery.

Explanation :
Among all those standers outside to the virtues, there is no greater stupid like that who stands at the door of others for adultery.

Even though the standers of non virtuousness stand with bad conduct and disgrace and approach prostitutes due to excessive desire for sex, they are no way stupid like those who stand for adultery at others door. Therefore even among the lustful fools of crazy acts, those who desired for the adultery are the best fools are the implicit meaning.

The stupidity of those who lost senses due to lascivious and approached the prostitutes is somewhat bearable. Because it may be considered that in the sorrow that follows only the individuals are affected. Or there is room to think that only the family of that who engaged suffers disgrace. But because of the fool who attempts adultery, two families are going to get damaged is the implicit meaning here.

Among all the evil doers only the stupid most desire adultery with other's wife.

Message :
Among the stupidity of non virtuousness, having lust for others wife is the greatest one.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...